Skip to main content

த நா வரலாறு : குமரி கண்டத்தில் இருந்த ஊரா திருநெல்வேலி ?

திருநெல்வேலி - இந்த ஊருக்கு தமிழ் வரலாற்றில் மிக பெரிய பங்கு இருக்க வேண்டும். தற்போதைய திருநெல்வேலி என்கிற ஊர் குமரி கண்டத்திலோ அல்லது இந்தியாவின் வேறு ஒரு நிலா பகுதியிலோ உள்ள ஊர் ஒன்றின் காரணமாக பெயர் இடபட்டிருக்கலமோ என்கிற ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்த தருணம் அது.

தற்போதய பீகாரின் தலைநகரம் பாட்ன என்று அழைக்கபடுகிறது. இதனுடைய இன்னொரு பெயர் அல்லது வரலாற்று பெயர் பாடலிபுத்திரம். தமிழ் மண்ணின் பூம்புகாரை போல் ஒரு காலத்தில் பெருமையோடு விளங்கிய ஊர்.

அதன் பெயர் இன்னொரு ஊருக்கும் சூட்டப்பட்டது என்கிறார் ரா பி சேது பிள்ளை. இது பள்ளியில் படிக்கிற பொது படித்தது. ஒரு தலைவன் பெருமையோடு விளங்குகிறான் என்றால் - அவன் பெயர் பிளயகளுக்கு சூட்டப்படும். என்னோடு படித்த நண்பரின் பெயர் கார்ல் மார்க்ஸ் - ஆனால் அவர் கிருத்துவர் அல்ல. கார்ல் மார்க்ஸ் மார்க்ஸ் மதங்களுக்குள் சிக்குகிற மனிதர் அல்ல.

நிரஞ்சன் ஜார்ஜ் மார்க்ஸ் என்று ஒரு நண்பர் படித்தார் - அவரும் கிருத்துவர் இல்லை. இது நிலங்களுக்கும் பொருந்தும். வடக்கேயும் ஒரு காசி - தெற்கேயும் ஒரு காசி.

இந்த ஒப்பீடுதான் திருநெல்வேலியின் பெயரிலும் ஒளிந்து உள்ளது. திருநெல்வேலி என்கிற பெயரில் பழங்கால நகர் ஒன்று இருந்திருக்க வாய்புகள் உண்டு.
இலங்கையிலும் திருநெல்வேலி உண்டு என்று கேள்வி பட்டு உள்ளேன்.

திருநெல்வேலி பற்றிய ஆய்வு செய்தால் - திரு நெல்வேலி என்கிற பெயர் வந்ததின் காரணம் தெரியலாம். மதுரை என்கிற பெயர் கூட மூன்று நகர்களுக்கு சூட்டப்பட்ட ஒன்றே.

அமெரிக்கர்கள் தங்கள் மண்ணை கட்டி எழுப்பும் போது இங்கிலாந்த், பிரான்ஸ் , ஜேர்மன் , இத்தாலியில் இருந்து வந்தவர்கள் தங்கள் நகரங்களின் பெயரை வைத்து உள்ளார்கள். நான் தங்கிய ஊர் ஒன்றின் பெயர் ஷாம்புர்க் - இது ஒரு ஜேர்மன் மக்களால் கட்டி எழுப்பப்பட்ட ஊர்.

நேற்றே எழுத நினைத்த இந்த பதிவை இன்றுதான் எழுதுகிறேன்.

திருநெல்வேலி கதையை நான் எழுத நினைத்தபோது - நண்பர் ஒருவர் சொன்னார் - இப்படி ஒருவரின் பதிவில் ஏற்கனவே படித்து உள்ளேன் என்று. ஒருவர் இவ்வளவு ஆய்வுபூர்வமாய் எழுதும்போது - அவரை பாராட்ட வேண்டும். இந்த வலைதளத்தை பார்க்க நேர்ந்தமை எனக்கு மகிழ்ச்சி. http://valaakam.blogspot.com/2009/12/01.html இதுதான் நண்பர் எனக்கு தந்த இடுக்கை முகவரி. தமிழர்களில் பலர் ஆய்வு கட்டுரைகள் எழுதுவது மகிழ்ச்சி.

குமரி கண்டம் இருந்திருக்குமோ என்று இன்னும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.


அப்புறம் ஒரு கதை - வள்ளுவரின் மனைவி பற்றியது. வள்ளுவரின் மனைவி அவருக்கு உணவு பரிமாறிக்கொண்டு இருந்த தருணம் - ஒரு துறவி பிச்சை கேட்டு வருகிறார். அவர் பெயர் கொங்கணர். அவர் தவ வலிமையால் ஒரு கொக்கை ஏற்கனவே எரித்தவர். வாசுகி கொஞ்சம் பொறுங்கள் - சிறிது நேரத்தில் வருகிறேன் என்று சொல்கிறார். நேரம் தாமதம் ஆகிறது. வாசுகி வருகிறார் - கொங்கணர் முறைக்கிறார் - வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை - வாசுகி சொன்னாராம் "வசுகியா கொக்கா ? ( கொக்கென நினைத்தாயா - கொங்கணவா ?)" நம் ஊரில் பலர் நாங்களா கொக்கா ? என்கிற போதெல்லாம் இந்த கதை எனக்கு ஞாபகத்தில் வரும்.

உங்களுக்கும் தெரியும் என்று நினைக்குறேன்.

தொடரும்

Comments

  1. எனக்கும் தெரியும்.. கேள்விப் பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. அடேங்கப்பா ...... அதிலும் திருநெல்வேலி கொக்குனா சும்மாவா? :-)

    ReplyDelete
  3. நன்றி செந்தில், சித்ரா.

    ReplyDelete
  4. nice article nanbare

    endrum anbudan,
    N.Parthiban

    http://parthichezhian.blogspot.com/

    ReplyDelete
  5. நன்றி - TVR மற்றும் பார்த்திபன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்