Skip to main content

த நா வரலாறு : சித்தன வாசல் சித்ராஞ்சலி

தமிழ் மண்ணின் பெருமை பற்றி என்னுடைய வேற்றுமொழி நண்பர் ஒருவர் சொல்லும்போது.உங்கள் மண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கலைகளுக்கு மிகுந்த ஆதரவு தருகிறீர்கள்.சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி! திருவைஆற்றில் இசை விழா! சென்னையில் மார்கழி இசை விழா.

பெருமையோடு சொல்லி விட்டு - காப்பாற்றுங்கள் இவற்றை என்று தட்டி கொடுப்பார்.
இப்போது அவரிடம் பேசும் வாய்புகள் குறைவு. அவர் ஒரு சிற்ப வேலை நிபுணர்.

மல்லையில் சிற்பங்களுக்கு - சிற்ப விற்பன்னர்களுக்கு ஒரு மாதத்தை ஒதுக்கி ஆதரவு - விழா தரலாம்.அரசுதான் செய்யவேண்டும் என்று இல்லை - இதை சிற்ப நிபுணர்களே செய்யலாம்.

அப்படி பார்க்கும் போது - கண்ணில் வந்து நிழல் ஆடியது சித்தன்னவாசல். சமண சமயத்தின் கடைசி எச்சமாய் நிற்கும் வரலாற்று ஆதாரம்.

சித்தனவாசல் - அஜந்தா எல்லோர குகைகளுக்கு அடுத்த நிலையில் நிற்கும் ஒரு கலை தளம்.

சிற்பங்கள் தமிழ் மண்ணின் பெருமை என்றால் வண்ண ஓவியங்களின் பெருமை சொல்லி நிற்பது சித்தன்னவாசல். சித்தன்னவாசல் மாதிரியான பிற சித்திர தளங்கள் எங்கே போனது என்று தெரிய வில்லை.

சித்தன்னவாசல் மண்டபங்களில் படுத்துறங்கும் வகையில் பாறை படுக்கைகள் உள்ளன. அவற்றில் சமண முனிவர்கள் படுத்துறங்கி இருக்கலாம்.அவர்களின் பெயரில் அது வழங்கபடுவதாகவும் சிலர் நம்புவது உண்டு.

பல ஓவியங்கள் சில கேள்வி எழுப்பவும் செய்கின்றன. தமிழ் மண்ணில் காஞ்சி அருகில் உள்ள கைலாசநாதர் மற்றும் பணமலையில் ஓவியகங்கள் சித்தன்னவாசளுக்கு பின் வந்தவை என்று சொல்ல படுகிறது.

அரசனும் அரசியும் இருக்கும் ஒரு ஓவியம் - அரசன் அதிக நகை அணிந்திருப்பது போலவும் அரசி நகைகள் குறைவாய் அணிந்திருப்பது போலவும் உள்ளன. அரசனுக்கு மீசை வேறு இல்லை. அரசனின் உடை அணிந்து எகிப்து மண்ணில் ஒரு அரசி ஆண்டதாக வரலாறு படித்த ஞாபகம்.அவளுக்கு மீசை இல்லை. அதை நான் இதனுடன் ஒப்பிடவில்லை என்றாலும் தமிழ் மண்ணில் மீசை அற்ற அரசர்களின் படங்கள் குறைவே. ராஜராஜனுக்கு மீசை இருந்தது இல்லை என்கிற செய்தி ஒரு நண்பர் சொன்ன போது - பக்கத்தில் இருந்தவர் மறுத்தார்.

அஜந்தாவில் உள்ள - அப்சரஸ் என்கிற ஓவிய நிலையோடு இங்கு உள்ள நடன மங்கையர் ஓவியம் ஒத்து செல்வதை ஆய்வாளர்கள் கவனிக்கிறார்கள்.

சித்தனவசலில் ஏன் ஒரு ஓவியவிழா வருடத்தின் ஓரிரு நாட்களில் நடத்த கூடாது. சித்தனவசலில் பல ஓவியங்கள் அழிந்து கிடக்கின்றன.

சமண புத்த சமயங்களின் பல வரலாறுகள் தமிழ் மண்ணில் காணமல் போய் உள்ளன. சீனர்கள் வணங்கும் போதி தர்மர் ஒரு தமிழர் என்று சீனம் பதிவு செய்கிறது. அவரை அவர்கள் புத்தி தார பல்லவர் என்று சொல்கின்றனர்.

பெருமான் என்று ஒரு அரச குலம் தமிழ் மண்ணில் இருந்திருக்கலாம் என்று ஒரு மலையாள நண்பர் சொல்ல கேள்வி.

தமிழ் மண்ணில் எப்படி வரலாறுகள் அழிந்தன என்பது வியப்பான ஒன்றே! தமிழன் வரலாற்றை பதிவு செய்யும் ஆசை கொண்டவன். பழைய - கீழ் கணக்கு - மேல் கணக்கு - தொல் - போன்றவை அதன் வெளிப்பாடே.

பத்து என்கிற எண் கண்டு பிடிக்கபடுவதற்கு முன் ஒரு பத்து வழங்கப்பட்டதே ஒன்பது -( ஒரு பத்து ). தொண்ணுறு - பழைய நூறு. தொளாயிரம் - பழைய ஆயிரம். இதெல்லாம் சாமானியன் செய்த பதிவுகளா? இல்லை அரசமுறை பதிவுகளா என்று ஆய்வு செய்வது நலம்.

சித்தன்னவாசல் - புதுகோட்டை மாவட்டத்தில் உள்ளது. சித்தனவாசல் பற்றி தமிழ் இலக்கியம் என்ன பதிவு செய்து வைத்து உள்ளது.

ஒரு தூரிகையுடன் சித்தன்னவாசலுக்கு பயணியுங்கள். ஒரு தூரிகை திருவிழா செய்யலாம். ஆனால் சரியான காலம் எது என்பதை ஆய்வாளர்கள் சொன்னால் நலம்.

Comments

  1. இதுவரை சித்தன்ன வாசல் போனதில்லை.. போகும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்கள் பதிவு .

    ReplyDelete
  2. நன்றி நண்பரே! தங்கள் கருத்துக்கு. சித்தன்னவாசலுக்கு அருகில் உள்ள பலரே சென்றதில்லை.
    என் நண்பர் ஒருவர் சொல்லுவார் - தாஜ்மஹாலுக்கு கூட இந்தியன் போய் இருக்க மாட்டான் - வெள்ளை காரன் அது அற்புதம் என்று சொல்லி இருக்காவிட்டால்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்