Skip to main content

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது. 

தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. 
இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை 
தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. 

புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த
தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது. 

இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு.

நாகர்கள் பற்றி நிறைய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அதிலும் வணிகர்கள் பலர் நாகர்கள். நாகர்கள் என்பவர்கள் பற்றி நானே ஒரு முறை எழுதி உள்ளேன். நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்பவர்கள் என்பது அவர்கள் பற்றி தமிழ் சொல்லும் செய்தி. 

இலங்கையின் இனங்களில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் இவர்கள் ஒரு பிரிவாக மட்டுமே கருதப்பட்டனர். இவர்களின் அடையாளங்கள் தமிழ் நாட்டில் இலக்கியங்களுக்குள் மிகுதியாக நின்றுவிட்டது. இவர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்தினார்களா என்பது ஆய்வுக்கு உரியது. 

புத்தம் - பல புத்தர்களை தமிழர்கள் என்றே விழிப்பதாக கொரிய ஆய்வு என்று சொல்லி உள்ளது. புத்தி தார பல்லவர் ( போதி தர்மர் ) தமிழர்.  அமிதாப்பா புத்தர் கூட தமிழர் என்கிற எண்ணம் உண்டு. பிரசன்னா தாரர் கூட தமிழராய் இருந்து இருக்கலாம். சாக்கிய முனி கௌதம  புத்தர் தமிழ் பேசி இருக்கலாம். ஆய்வு தேவை.

தம்மபாலர்  தமிழர் என்பதும் சிலர் கருத்து. புத்தம் வளர தமிழ் - தமிழர் பெரிதும் உதவி உள்ளனர். வட மொழி வரவு தமிழ் மக்களிடம் இருந்து இந்து மார்கத்தை எப்படி பாதித்தோ அது போலவே தன் வளர் பருவத்தில் பாலி மொழியை தன் உத்தியோக மொழியாக புத்தம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் - சாக்கிய முனி கௌதம புத்தர் பேசிய மொழி அது என்பது. 

சமயம் சார்ந்த மொழிகள் பெரிதும் அழித்தே வந்து உள்ளன. பாலி என்கிற அருமையான மொழியும் அதற்க்கு விதிவிலக்கு இல்லை.

இயேசு எப்படி மக்கள் மொழியில் பேச முற்பட்டரோ அது போலவே அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் மக்கள் மொழியை தேர்ந்தெடுத்தார். 
காளிதாசரின் மேக சந்தேசம் பாலியை மக்கள் மொழி என்றும் வட மொழியை அரசர்கள் அவை மொழி என்றும் சொல்லாமற் சொல்லும். அந்த நூலில் காவலர்கள் பேசும் மொழி பாலியோ பிரகிரதாமோ தவிர வட மொழி இல்லை. 
ஆனால் பாலியும் இன்று நம்மிடம் இல்லை.

தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம். புத்தர் தமிழ் மண்ணில் திருச்சி மற்றும் தஞ்சைக்கு வந்து இருக்கலாம் என்று கருத வாய்ப்பு உண்டு. அவலோக தீசர் என்கிற புத்த மத கடவுள் இன்னும் தமிழ் மண்ணில் உண்டு. அந்த இறைவனின் தளம் அம்பாசமுத்திரம் என்பது இன்றும் வாழும் உண்மை. எனவே புத்தர் இங்கு வந்து இருக்கலாம். 

புத்தரின் தமிழ் மண் பயணம் பற்றிய ஆய்வு நிறைய தெரியாத வரலாற்றை கொண்டு வரலாம். 

வரலாறு எப்போது ஒரு சுகமான பாடம். 

தொடரும் 
 
 

Comments

  1. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக !

    ReplyDelete
  2. தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம்.


    ......சுவாரசியமான புது தகவல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத