Skip to main content

Posts

Showing posts from 2010

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - III

ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது. தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன்  என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள். இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு. கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு. இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது  வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம். வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்களை  நான் பார்த்து உள்ளேன்.

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - II

தமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர். கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது  என்று சொல்லப்படுகிறது. கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை. கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன. இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும்  நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன. உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு. கோட்

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார். பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன். பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள். புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர். புத்த ம

வெற்றி பெற்றவர்கள்

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்று ஒருமிகப்பெரிய பட்டியல் இப்போது எல்லாம் தொலைக்காட்சிகளில் குற்றவாளிகள் என்று பெரிது படுத்தபடுகிறது. உண்மையில் நடந்திருப்பது வேதனைக்கு உரிய சுரண்டல். எதை தொட்டாலும் ஊழல் லஞ்சம் என்பது மக்களாட்சியின் இருத்தயம் வெந்து கொண்டு வருவதையே காண்பிக்கிறது. மன்னன் எவ்வழி மக்கள் எவ்வழி என்பது அரசர்கள் கால நடைமுறையாக இருக்கலாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடைமுறைபடுத்தப்படுவதே மக்களாட்சியாக இருக்க வேண்டும். நடைபெறும் நிகழ்வுகளில் மனம் வருத்தப்பட்டேன். பின்னர் சிலரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன். உலகில் வெற்றி பெற்றவர்கள் அல்லது இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - என்பதே அந்த கேள்வி. யாரும் எந்த ஒரு போராளியின் பெயரையோ , மனித நேயரின் பெயரையோ  அறிவியல் மனிதரின் பெயரையோ , ஏன் மதபோதகர்கள் பெயரையோ சொல்லவில்லை. எல்லோரும் பணம் படைத்தவர்களின் பெயரையே சொல்லினர். போராளிகள் உருவாவது கட்டாயத்தின் அடிப்படையிலும் பணக்காரர்கள் உருவாவது தன் முனைப்பு ஆசையிலும் என்பதே நான் புரிந்து கொண்டது. வெற்றியின் அளவுகோல் பணம் என்று ஆகிவிட்டது. இன்னும் இம்மாதிரியான ஊளைகள் நிறைய வர

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்

பள்ளி செல்லும் சிறுவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினார். நண்பன்  கேலி பேசினான். நடத்துனர் கடினமாக பேசினார் - என்று காரணங்கள் பல. நடத்துனர்கள் மாணவர்களை சரியாக நடுத்துவது இல்லை என்று சிலர் என்னிடம் பேசும்போது சொல்லினர். அவர்கள் சொல்வது உண்மையோ என்று நினைக்கிற சம்பவங்களை நானும் நேரில் பார்த்தேன். இது வருத்தம் அளிக்கிறது. ஆசிரியர்கள் அடிப்பது எல்லாம் இப்போது குறைந்தே உள்ளது என்று நம்புகிறேன். ஆசிரியர் திட்டினார் என்கிற காரணத்தால் தற்கொலை என்பது சரியான ஒன்றா - ஆசிரியர்கள் சிலரை மிக மோசமான தண்டனைக்கு உள்ளாக்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு தவறு. ஆனால் அவர் கடிந்து கொள்ளக்கூட கூடாதா என்பது விவாத பொருள். மண்டியிட்ட நாட்கள் எனக்கு நினைவில் இன்றும் உண்டு. நண்பர்கள் கேலி பேசினர். இது மிகவும் வருத்தம் தரும் விடயம். நண்பனே எதிரி ஆவது - நல்லது அல்ல. சக மாணவன் அல்லது மாணவன் என்றே அவர்களை அழைக்க வேண்டும் - அவர்கள் நண்பர்கள் அல்ல. இன்னும் ராகிங் கொடுமை இருக்கிறது - அதுவும் அண்ணா பல்கலையில் கூட என்கிற செய்திகள் வருத்தம் அளிக்கிறது. எதிர்த்து ப

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

மீண்டும் நான்

இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன். இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன. மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன். அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே. எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே. வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக. எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?

இந்தியாவிற்கான பயணம்

எதிர்பார்த்து கேட்ட ஒன்று. கடைசியில் அமெரிக்க அரசாங்கத்தின் கருணையால் நடந்து விட்டது ( விசா முடிஞ்சுருசுல ). இந்த முறை விசா நீடிப்போ, மீண்டும் விண்ணப்பிக்கும் என்னமோ இல்லை என்று சொன்னபோது மேலாளர் ஒரு மாதிரி பார்த்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் - நான் ரசித்த மண் அமெரிக்கா. நீங்களும் வாருங்கள் எங்கள் ரத்த கொடை நாளுக்கு. தொடர் நடை பயணத்திற்கு என்று தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மனிதர்கள். ஏதாவது தவறாக செய்தால் அறைக்கு அழைத்து - நீ ஏன் இப்படி முயற்ச்சிக்க கூடாது. என்று எடுத்து சொன்ன வெள்ளைக்கார மேலாளர்.அவர் ஒரு இஸ்ரேலியர். நல்லது செய்தால் ஊரையே கூட்டி பாராட்டும் நல்ல மனிதர். அமெரிக்கர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டேன். அவர்களின் தேவைகள், சிந்திக்கும் தன்மை எல்லாம் வேறுபட்டதாக இருந்தது. காரணம் அவர்கள் வளர்க்கப்பட்ட முறை. திருமணத்திற்கு பின்னும் பெற்றோருடன் வாழ்வீர்களா ? எப்படி இது என்று கேட்ட ஆப்பிரிக்க அமேரிக்க நண்பர்.மீண்டும் வா ... என்று தன் தனிப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்புகளை தந்து உச்சி முகந்து அனுப்பிய சீனர்.எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்த கிரேக்கர்.கை குலுக்கி

சிந்தனையில் மூழ்கிய தேவதை ( சிறுகதை )

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கதை. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ****************** அது ஒரு இருள் பொழுது. அந்த இருள் தேசத்திற்குள் வந்து குத்திதாள் அந்த வெள்ளை உடை தேவதை. இளம்பெண் அவள். புன்னகை பூத்தாள். "உன் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது" தன் கையில் இருந்த மந்திரக்கோலால் இருளில் ஆசிர்வதித்தாள். அங்கே ஒரு மனித உருவும் மண்டியிட்ட நிலையில் உயிர் பெற்றது. "நன்றி" - மௌனத்தில் சொன்னான். அது ஒரு அதிகாலை வேலை.வரண்ட பூமி. வந்து விழுந்தான் அவன். வரப்பில் ஒருவர் படுத்து இருந்தார். பக்கத்தில் எலிக்கறி. அவரை எழுப்பினான். "காய் ..." - தன மொழியில்  வந்து விழுந்த மனிதன் ஆரம்பித்தான். "அட! காயாவது பழமாவது? சொத்துக்கு வழி இல்லாம செத்துக்குட்டு இருக்கோம்"  - வரப்பு மனிதன் மீண்டும் களைப்பில் படுத்தான். வானத்தில் இருந்து வந்தவன் கொஞ்ச தூரம் நடந்தான். பெட்டி கடைகளில் செய்தி ஏடுகள் தொங்கி கொண்டு இருந்தன. குஜராத்தில் சமயக்கலவரம். நடந்தான். இன்னும் சாதியும் மதமும் ... கண்டு நகர்ந்தான். பக்கத்து நாட்டில் படுகொலைகள் மறைமுகமாய் இந்திய

உ த ப : மூன்று தலைவர்கள்

அவருடைய வேலை பளுவுக்கு இடையில் அந்த நாடகம் பார்ப்பது அவருக்கு சற்று இளைப்பாற செய்யும். அதுவும் அந்த நாடகத்தின் ஒரு சிரிப்பு நிகழ்வு அவர் மனதை இலகுவாக்கும். தன குடும்பத்துடன் அந்த நாடக ஆரங்கத்திற்கு வந்தார். மௌனமா அவர் அந்த நாடகம் பார்க்கும் மாடத்தில் அமர்ந்தார். அந்த மாடத்திற்கு பாக்ஸ் 13  என்று பெயர். மாடத்திற்கு கீழே மக்கள் திரள். ஆர்வமாய் அந்த கூட்டம் நாடகம் பார்க்க திரண்டு இருந்தது. நாடகம் ஆரம்பித்தது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர் - அவனைத்தவிர. மாடத்திற்க்கான கதவு அருகில் வந்து நிட்று கொண்டான். தன் கைத்துப்பாக்கியை சரி பார்த்துக்கொண்டான். மெல்லமாய் கதவை திறந்தான். தலைவரின் மெய்க்காவலன் அங்கே இருந்தான். மெய்க்காவலன் இவனை இன்னும் பார்க்கவில்லை. துப்பாக்கியில் குறிபார்த்தான். விசையை அழுத்தினான். குண்டு பறந்தது. பட் என்று தலைவரின் கபாலத்தில் பட்டு தலைவர் துடிதுடித்தார். கூட்டம் கூச்சலும் குழப்பமுமாய் மாறியது. உடனடியாக அந்த மாடத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நாடக மேடையில் குதித்தான். வெற்றி முழக்கம் இட்டுவிட்டு ஓடினான். கிட்டத்தட்ட ஒழிந்தான் கொடுங்கோலன் என்க

உ த ப : தோற்றுப்போன படுகொலை முயற்சி

இந்த கட்டுரை தொடரின் நோக்கம் தோற்று போன ஒரு படுகொலை முயற்சியை எழுதுவது இல்லை. அனாலும் ஒரு முறை ஒலி ஒளி வடிவத்தில்  கண்ட இந்த செய்த்திப்பதிவை  நான் பதிவிட நினைக்கிறேன். இதன் ஆதாரங்கள் உங்களுக்கு கிட்டலாம்.  என்னிடம் சரியான ஆதாரம் என்று கூறும் அளவில் எதுவும் கிட்டவில்லை. எனவே புறம்தள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு.படிப்பவர்கள் இதன் நம்பத்தன்மையை ஆராய நினைப்பதன் மூலம் காணமல்  போன ஒரு வரலாற்று நிகழ்வு நமக்கு கிட்டலாம் என்கிற ஆவலின் அடிப்படையில் எழுத்தப்படும் பதிவே இது.   உலகின் உயர்வான மனிதர்களுள் அவருக்கு ஒரு பெயர் உண்டு.உலகமே வியந்த மனிதர் அவர்.  இன்றைக்கு நேற்றைக்கு அல்ல என்றைக்கும் அவருக்கு புகழ் உண்டு.    மானுட வரலாற்றில் பூத்த பெருந்தலைவன் என்கிற கருத்து அவரது நாட்டை சேர்ந்தவர்களைப்போலவே இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகமாகவே மற்ற நாடுகளில் உண்டு.   காலை கதிரவன் வானில் பூக்க அந்த நகரம் சோம்பல் முறித்தது. பறவைகள் இரைதேடி பறக்க செவிக்கு உணவு தேடி ஒரு கூட்டம் வேற்று நகரங்களில் இருந்தும் வந்திருந்தது.   உலகத்தின் ஆட்சி மனிதர்களை கேள்வி கேட்கும் ஆற்றல் படைத்தவர் என்று நம்பப்பட்ட அந்த

மீண்டும் ஒரு கவிதை!

வெண்ணிலா வதனம் கண்டேன் செந்நிலா அதனில் கண்டேன். என்னவோ என்றிருக்க - திலகம் என்று நீ உரைத்தாய். மூக்கின் குழலா ? மூங்கில் குழலா ? காற்றை எடுத்து கீதம் தருதே! அதரங்களா மதுரங்களா? தேனின் சுவை கண்டுகொண்டேன்! கண் விழியா ? வன் குழியா ? என்னை இழுக்குதே! வேதனை நிலையில் கொத்திதாலும் வெள்ளரி பழமாய் உன் பேச்சு குளிரச் செய்யுதே! (உந்தன்) சுட்டுவிரல் அசைவிலே சுத்துதே உலகமே! பட்டு மேனியை தொட்டு பார்த்தால் நெஞ்சில் சுகமே! விட்டு விலகும் நேரமெல்லாம் சுட்டு விடுதே நெஞ்சம் முழுதும்!

உ த ப: அணிவகுப்பில் .....

அந்த வீரன் அந்த செய்தியோடு வந்து நின்றான். "என்னோடு அணிவகுப்பில் வர இருந்த  மூணு பேருக்கும்  உடல் நலமில்லை"  "என்ன சொல்கிறாய் ?" - தளபதி கேள்வி கேட்டார் "திடீர் என்று உடல் நலமின்மை" "மூவருக்குமா ?" வீரன் தலையை இடமும் புறமும் ஆட்டினான். நெற்றியில் கை வைத்து அமர்ந்தார் தளபதி. "கவலை வேண்டாம்" - வீரன் மீண்டும் பேசினான் "அவர்களுக்கு பதிலாக மூணு பேரு உள்ளனர்" - மீண்டும் வீரன் "நல்லது அவர்களை பயன்படுத்திகொள்" தளபதி சொல்லி விட்டு நகர்ந்தார். வீரனும் ஒரு தளபதிதான். அந்த நாள் வந்தது. படை அணிவகுப்பு திருநாள். அதிபருக்கு முன்னால். அதிபர் வந்தார் தன்னோடு இருந்த படை தலைவர்களுடன் பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தார். அணி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. விமானங்கள் வானத்தில் வேடிக்கை காட்டின. வான மேகங்கள் வண்ணக்கோலம் பூண்டன. அதிபரின் முகத்தில் புன்னகை. அவர் நாட்டின் படை திறமை அவருக்கு முன்னால் தன்னை வெளிக்காடிகொண்டு இருந்தது. அந்த பிரங்கி வண்டி பயணித்துக்கொண்டு வந்தது. அந்த வீரன் வணக்கம் வைத்தான். அதிபரை நோக்கி நட

ஞாநியும் குமுதமும் வெற்றி பண்பலையும்

ஊடக விடுதலை குறித்து எழுதும் போது இந்தியாவில் அது மோசம் இல்லை என்று நம்பிக்கையை விளைவித்த பதிவை திரு லோஷனின் பதிவில் கண்டேன். அவர்களது ஊடகம் மீதான தாக்குதலின் காரணம் தெரியாத போதிலும் - தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவையே. திரு ஞாநி அவர்கள் தன் கருத்து உரிமையின் கழுத்து நெரிக்கபடுவதில் வெறுத்து போய் தற்போதைய  குமுத வாழ்வின் கடைசி தருணங்களை கடிதம் எழுதி முடித்து கொண்டு உள்ளார். ஞாநி அவர்களின் மீது கருத்து மாறுபாடு என்றுமே நான் கொண்டதில்லை என்று சொல்வது தவறு. ஆனாலும் அவரின் எழுத்துக்களில் என்றும் நான் ஈர்ப்பு இழந்தது இல்லை. ஞாநி அவர்களின் ஒ பக்கங்கள் தமிழ் நாட்டின் அரசியல் தொடர்பான ஒரு ஆவணமாக உருமாறி நிச்சயம் ஒரு நாள் நூலகங்களில் ஆசனம் கொள்ளலாம்.  அது ஒரு தனி மனிதனின் பார்வை மட்டும்தானே ஒழியே தமிழ் நாட்டின் பார்வை இல்லை. ஆனாலும் ஒரு ஆய்வறிவு கொண்ட மனிதனின் ஆழமான பார்வை. ஞாநி அவர்களின் ஆளுமை தமிழ் செய்தி உலகில் ஆழம் கொண்டது. அவருடைய பிரச்னைக்கு உரிய கட்டுரையை நான் படிக்கவில்லை. எனவே அது தொடர்பாய் கருத்து வெளியிட நான் விரும்பவில்லை. ஆனாலும் கருத்து கூறுவது அவர் பனி.

உ த ப : லியோன் டிராட்ஸ்கி

மெக்ஸிகோ மண்ணில் அது சிவப்பு சூரியனின் அன்றய நாளின் கடைசி தருணங்கள். அந்த இளம் மாலை பொழுதில் தன குறுந்தாடியை தடவியபடி அமர்ந்து இருந்தார் அந்த நான்காம் தலைமுறையாளர். தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த மேசையில் அவர் புத்தகங்களோடு ஒருங்கிணைந்து இருந்தார். சிந்தனை குதிரை முலைக்குள் இருந்து சிங்கத்தை போல உறுமியது. அந்த நேரத்தில் வீட்டுக்கு முன்னாள் அந்த மகிழுந்து வந்து நின்றது. அந்த மகிழுந்தின் உறுமல் நிற்க. சிந்தனை சிங்கத்தின் கற்பனை வகுப்பறையிலும் மணி அடித்தது. அந்த மகிழுந்தில் வந்தது அவர் மனம் கவர்ந்த நண்பன் பிரான்க் ஜாக்சன். மகிழ்ச்சியில் மனம் துள்ளியது சிந்தனையாளருக்கு . வழக்கம் போல சிந்தனை அரட்டை சம்மனமிட்டது. அவன் அந்த காகிதங்களை தந்தான் அவரிடம். வழக்கமாகவே அவன் காகிதங்களில் கருத்து கட்டுரைகள் எழுதி வர - அதன் தொடர்பான கருத்து விவாதம் நடப்பது இயல்பான ஒன்று. சிந்தனையாளரின் பாதுகாவலரும், மனையாளும் இந்த இயல்பான கலந்து உரையாடலில் கலந்து கொள்ளவில்லை. அவர்களை பொறுத்த வரை இது நாள் தோறும் நடக்கும் கருத்து விவாதம். கற்றாரை கற்றார் காமுறுவர். பிரான்க் சின்ன பையன் அவனிடம் தனி

நல்ல தமிழ்

எனக்கு தெரிந்த சில நல்ல தமிழ் வார்த்தைகளை இங்கே பகிர்கிறேன். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவைகளை பகிருங்கள். Screw  driver - திருப்புளி ( இது மதுரையில் நான் கேட்ட வார்த்தை ) முழுத்தம் ( முகுர்த்தம் என்னும் வடமொழியின் உண்மை வார்த்தை - சிலப்பதிகாரம் இதனை பயன்படுத்துகிறது. இதன் பயன்பாடு கடந்த தலைமுறையுடன் நின்றுவிட்டது ) போகணி ( Tumbler , drinking Glass என்கிற வார்த்தைகளின் தமிழ் வார்த்தை - இன்றும் சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது ) மெய்யாளும் (  நிஜம் என்கிற வார்த்தையின்  தமிழ் பதம் - சென்னையில் மட்டும் வாழ்கிறது ) வாழ்வரசி ( சுமங்கலி என்கிற வடமொழி வார்த்தையின் தமிழ் வார்த்தை - இன்றும் சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது ) மைக் - ஒலி வாங்கி பழமை பேசி அவர்கள் தந்த சில தொடுப்புகளின் மூலம் அறிந்து கொண்ட சில நல்ல தமிழ் வார்த்தைகள் கீழே ஜெட் லாக் - மெய்க்குணகம் Out of sync - பிறழ்வு குணகம்ன்னா, இடத்தைப் பொறுத்து பொருள் மாறுமுங்க.... multiplier கூட குணகம்தான்.... குணகு அப்படின்னா, பிறழ்ந்து பிசகுவது.... பெயர்ச்சொல்லா மாறும் போது குணகம் ஆயிடுது... இடநியசு - GPS Chat  மின்னாடல் ( நான் இத

உ த ப : மவுண்ட் பேட்டன் பிரபு

Classiebawn நீர் சலசலத்தது.  பெரும் இரைச்சலுடன் அந்த படகு தகர்ந்தது.அந்த படகு சிதறி இருந்தது. ஓடி வந்த காபற்றுனர்கள் - அவரை நீரில் இருந்து எடுத்தனர். உயிர் இருந்தது. கால்கள் சிதறி இருந்தன. கடைசி மூச்சுகளை கொடுத்து வாங்கிக்கொண்டு இருந்தார் அவர். லார்ட் மவுண்ட் பேட்டன் மரணத்தை சில நிமிடங்களில் தழுவினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ஆட்சி தலைவர், அரச குடும்பத்தின் உறுப்பினர், பர்மாவிர்கான ஏர்ள் ( Earl ) என்கிற பொறுப்பை வகித்த ஆங்கில ஆட்சி முகம், இராண்டாம் உலக யுத்தத்தில் கூட்டு படைகளின் கடற்படை தலைவர், அதிரடி படைவீரர்களின் பயன்பாட்டை முன்னிறுத்திய ஆங்கில வீரர்  , மரபு சாரா போர் முறைகளையும் பயன்படுத்த எத்தனித்த தலைவர் இறந்து கிடந்தான். குற்று உயிராய் கிடந்த அவரது பேரன் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான். ஐரிஷ் பகுதியான இந்த ச்லிகோ பகுதிக்கு வந்த மவுண்ட் பேட்டன் கொல்லப்பட வாய்ப்புகள் அதிகம் என்கிற எச்சரிக்கை ஏற்கனவே இருந்தது. ஐரிஷ் நிலத்தில் பிரிட்டிஷ் அரசு தனதாக்கி ஆக்கிரமித்து  கொண்டு வருவதாக வட மற்றும் அயர்லாந்து மண்ணில் எண்ணம் இருந்தது. டீப்பே என்கிற

உ த ப - முன்னால் கடற்படை தலைவர்

நன்றி: fineartamerica.com அது ஒரு அழகிய நிலம். பச்சை வண்ணம் உங்களை இச்சை கொள்ள வைக்கும் ஒரு சுற்றுலா தளம். கடல் மென்மையாக ஓடும்போது உங்கள் இதயம் குழந்தை போல் ஆகும். அன்றும் அந்த கடல்  வழக்கம் போலவே தன வனப்பின் மிகுதியில் மிதந்து கொண்டு இருந்தது. நல்ல உயரமும் அரச கம்பீரமும் நிறைந்த அந்த முன்னால் கடற் படை தளபதி தன் பணிக்கு பிந்தைய நாட்களில் தன் பேரக்குழந்தைகளைகளுடன் இன்று தன் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க வந்திருந்தார். வந்த நாள் முதல் பெய்து கொண்டு இருந்த மழை - இன்று வருகை பதிவேட்டில் கை எழுத்து இடாமல் எங்கேயோ திரைப்படம் பார்க்க போய் இருந்தது. தன் பேரக்குழந்தைகளைகளுடன் நடந்தார் அந்த மனிதர். சாலமன் மீன்கள் பிடிப்பதில் தளபதிக்கு இன்று நிறையவே ஆசை இருந்தது. நிழல் என்கிற பெயரில் ஒரு மீன்பிடி படகை எடுத்துக்கொண்டார் தளபதி. பேரன் பால் வண்டியை செலுத்த. அங்கே ஒரே மகிழ்ச்சியும் நகைச்சுவயும்தான். விழுந்து விழுந்து சிரித்தார் கடற் தளபதி. படகு பச்சை வண்ணமிட்டு தேவதை போல் அழகாவவே இருந்தது. பச்சை புல் வெளி, நீலக்கடல், மென்மையான உலா. அவர்கள் சிரித்து பேசிகொண்டிருக்கும் போது யாரோ ஒரு

உலகக் தலைவர்கள் படுகொலைகள் - I

பழுப்பு மார்டின் லூதரும், கருப்பு காந்தியும்: தன் அறையில் திரு மார்டின் லூதர் கிங் இன்னொரு தொடர் எழுதும் ஆர்வம் திடீர் என்று வந்தது. வரலாறு என்கிற எனக்கு பிடித்த பாடத்திற்குள்ளேயே என் பயணம் இந்த முறையும். உலகத்தின் தலைவர்கள் என்று போற்றப்பட்ட மனிதர்கள் படுகொலை செய்ய பட்டு உள்ளனர். இவர்களின் படுகொலைகளுக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கும். சில காரணங்களா என்றும் தோன்றும் ? காந்தியின் படுகொலைக்கு பின் சாட்சியம் அளித்த கொலையாளி நாதுராம் விநாயகம் கோட்சே - காந்தி இந்து மத தளங்களில் இஸ்லாமிய வாங்கு ஊத சொன்னத்து கூட தான் அவரை கொள்ள காரணம் என்று சொன்னான். மார்டின் லூதர் கிங் அவர்களை கொன்ற பொடித்திருடன் காரணம் எதுவும் பெரிதாக சொல்லவில்லை. கென்னடியின் கொலை அரசியல் கொலை என்றும் அதில் ஹைடி மற்றும் அமெரிக்காவின் தலைமைகள் பங்கு ஆற்றி இருக்கலாம் என்றும் சிலர் சொல்வது உண்டு. ஹைடியின் அப்போதைய ஆட்சி கென்னடி கொலை தங்களின் வழிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்தாம். கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகத்துடன் தொடர்வது லால் பகதுரின் மரணம். ராஜிவின் கொலை மர்மங்களின் முடிச்சாகவே இன்றும

ஜோவும் நாமும்!

காலகணிதம் என்கிற ஜோதிடம் நம்மை படுத்தும் பாடு கொஞ்சம் நகைச்சுவையும் அவலச்சுவையும் ஏற்படுத்துவது. ஆரம்ப காலம் தொட்டே இந்த கணிதம் என்று இல்லை எந்த கணிதமும் நமக்கு பிடிப்பதில்லை. எல்லா பாடத்திலையும் நல்ல மதிப்பெண் வாங்கிவிட்டு கணிதத்தில் கோட்டை விட்ட நாட்கள் எல்லாம் நிறைய உண்டு. "உலக கோப்பை வாங்கினால் என்ன எங்ககிட்ட தோத்த அணிதனே அது " - என்று பாகிஸ்தான் உலக கோப்பை வாங்கியபோது தேற்றிக்கொண்ட எல்லா இந்தியனை போல. கணிதத்தில் போனா என்ன ... மத்ததுல வந்தொட்டோம்ல என்று நினைத்து கொள்வேன். ( வேற வழி? ) கிளி ஜோதிடம், கை ஜோதிடம், கட்டம் போட்ட ஜோதிடம் எல்லாம் நமக்கு மனதிடம் வர்ற மாதிரி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. "பையன் நல்ல படிப்பானா ?" - என்று கேட்டால் "பையன் வெளிநாடு போவான் நல்ல வருவான்" - என்று பதில் வந்து விழும். அர்த்தம் என்ன? - பையன் பெரிசா ஒன்னும் படிச்சு கிழிக்க மாட்டான். கணிதம் தான் நம்ம வில்லன். ஜோவும் ( அட! ஜோதிகா இல்லைங்க, ஜோதிடத்தை செல்லமா கூப்பிட்டேன் ) - நமக்கு வில்லன்தான். "போரடி ஜெய்ப்பீர்கள்" - இப்படி ஒருத்தர் என்கிட்டே

சாதியும் அதன் தேவையும்

இன்று படித்த இரண்டு பதிவுகளில் சாதி பற்றி இருந்தது. சாதி ஏன் இன்னும் மண்ணில் இருக்கு. சில கரணங்கள் கீழே: இவை சிலதான் இன்னும் நிறைய இருக்கலாம் நீங்கள் அதை சொல்லலாம். 1 . தேர்தலில் சீட்டு வாங்க சாதி வேணும். சீட்டு வாங்க மட்டுமில்ல ஓட்டு போடவும் சாதி வேணும். வேற சாதிக்கு ஒட்டு போட்டா அது சாதி குத்தம். 2 . கலவரமே இல்லாம நாடு இருந்தா நல்லதுக்கு இல்லை ( நெசமா ?) - அதுனால சாதி மதம் வேண்டும் 3 . நம்ம ஊரு கொஞ்சம் பரவா இல்லை. மத்த ஊரில் எல்லாம் பேருக்கு பின்னாடி போட சாதி வேண்டும். 4 . கல்யாணம் பண்ணிக்க சாதி வேண்டும். 5 . அடுத்தவன திட்ட சாதி வேணும். ( இன்னும் இது இருக்கு .... ) 6 . கட்சி நடத்த  சாதி வேணும். 7 . விண்ணப்பங்கள் நிரப்ப நிறைய சாதி வேண்டும். 8 . தலைவனாக சாதி வேண்டும் 9 . அரசாங்கத்துக்கிட்ட ஏதாவது சாதிக்க சாதி வேணும். 10 . ரெட்டை குவளை முறைக்கு சாதி வேண்டும் சாதியால் ஒரு மனிதன் தாழ்வாக அல்லது உயர்வாக கருதப்படுவது தவறு. நானெல்லாம் ஏழை சாதி அப்படின்னு சொல்லறாங்களே ... அந்த சாதியாவது ஒழியுமாங்க ?

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத

2012 : மாயன் என்னும் தமிழர் கூட்டம்

2012  டிசம்பர் மாதம் 21  ஆம் நாள் உலகம் அழிந்து விடும் என்று யாராவது நம்பினால் - அவர்கள் கை காட்டுவது மாயன் என்னும் தமிழர் கூட்டத்தின் நாட்காட்டியைதான். இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon  என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார். இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்

பண்பலையும் தமிழ் நிலையும்

. சென்னையில் இருக்கும் தருணங்களில் நான் கேட்கும் எந்த பண்பலையும் தமிழ் பேசுவதில்லை. தமிழ் மாதிரி ஏதோ பேசுகிறார்கள். " Welcome Back " , " Stay  tuned ", "Break " , " None  other  then " - இதெல்லாம் தெரிய வேண்டும் தமிழ் ஊடகம் எதுவும் பார்க்கவோ / கேட்கவோ. அதிலும் சிலர் பேசும் வேகமான ஆங்கிலத்தில் தமிழ் திணறுகிறது. விட்டுதொலைடா அப்படின்னு கெஞ்சுது தமிழ். ஆங்கில வார்த்தைகள் நம்மிடம் நீக்கமற நிலைத்து விட்டது எனபதில் நான் வேறுபடவில்லை. ஆனால் நம் பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் இந்த வானொலிகளில் புழங்குகிறது. பண்பலை எங்கள் ஊரில் கேட்டவன் என்கிற நிலையில் சென்னை வானொலி பணபலைகள் எனக்கு கொஞ்சம் ஆச்சிரியம் தருவது. எங்க ஊரில் பண்பலை கேட்டு இப்போது வருடங்கள் ஓடிவிட்டது. இணையத்தில் சென்னை பண்பலை வானொலிகள் வரும். சரி! நிகழ்ச்சி தொகுப்பாளர்தான் வேற்று மொழிக்காரரோ என்று நினைத்தால், பேசும் நேயர்களும் - ஏதோ எலிசபெத் ராணி வீட்டு அண்டை வீட்டுக்காரன் மாதிரிதான் பேசுகிறார்கள். நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை அமெரிக்காவிலோ ஆங்கில நாட்டில

கழுகு - நண்பர்களின் களம்

சில நாட்களுக்கு முன்னாள் நான் பார்வை இடும் பதிவுகளில் தெரிந்த அந்த அரசபறவையின் பார்வை, என் பார்வையை இழுத்தது. கருப்பு மேனியும் கருத்து வேகமுமாய்; கருப்பு விழியும் அதில் பொறுப்பு வழியும் பார்வையும்; வெள்ளி தலையும் சொல்லில் புரட்சி நிலையும் என்று அது ஒரு புரட்சி சின்னம். அமெரிக்காவிற்கும் அதுதான் சின்னம் என்பது வேறு கதை. நண்பர் தேவா, தம்பிகள் சௌந்தர், விஜய் ஆகியோரின் கருத்து களம் என்று அறிகிறேன். இப்படி ஒரு கருத்து களம் உருபெற்று உள்ளத்தில் மகிழ்ச்சியே! தொடர்ந்து நடத்துவோம் என்கிற வெறியோடு கூடிய பொறுப்புணர்வு தேவை என்பதை நண்பர்களுக்கு சொல்ல விழைகிறேன். தமிழ் நாட்டின் இருகட்சி ஆட்சி முறை பற்றி ஒரு விவாதத்தை அவர்கள் வெளி இட்டு உள்ளனர். வரவேற்கவேண்டிய முயற்சி. என்னோடு இணைந்து கொள்ளுங்கள் அவர்களை வாழ்த்துவதில். அவர்களின் வலை பூவை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைப்பு தரலாம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. வாழ்த்துகிறேன் - நல்ல பதில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்கிற ஆசையுடன். மொக்கைகளை உங்கள் பதிவுகளில் வைத்துக்கொள்ளுங்கள். கழுகை பறக்கவிடுங்கள். http://kazhuhu.blogspot.com/

தமிழ் வளர்ப்போம் வாருங்கள்!

சி ல சமயங்களில் நான் பெருமையோடு பார்க்கும் விடயம் தமிழில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் தமிழாக்க வார்த்தைகள். HOME என்று ஆங்கில இணையதளங்களில் இருந்த வார்த்தை தமிழுக்கு வந்த பொது முகப்பு ஆனது. அருமையான கண்டுபிடிப்பு. சிவகங்கை மாவட்டத்தில் இந்த வார்த்தை ஒரு வகுப்பினரிடம் அன்றாட புழக்கம். ஈமெயில் - மின்னஞ்சல் ஆனது. Chat - என்பது அரட்டை / இனைய அரட்டை. டவுன்லோட் - தரவிறக்கம் / தகவிறக்கம் ஆனது இந்த சூழ்நிலையில்தான் கவிஞர் திரு வைரமுத்து அவர்கள் தமிழ் சார்ந்த அரசுத்துறையில் தமிழ் ஆட்சி மொழிக்காக வார்த்தை உருவாக்கும் போது - நிகழ்ந்த ஒன்றை அறிந்தேன். அதில் நீர் வீழ்ச்சி என்று வார்த்தை அவர்கள் குழுவின் காரணமாக உருவாக்கப்பட்டதாகவும் - பின்னர்தான் அவர்கள் அந்த வார்த்தை என்பது ஏற்கனவே தமிழில் அருவி என்று இருப்பது தெரியவந்ததாகவும் பதிகிறார். நாம் பல வார்த்தைகளை இலக்கியத்திலும் வரலாற்றிலும் வைத்து விட்டு, புதிதாக சில வார்த்தைகளை கண்டு வருகிறோமோ ? திரு பழமைபேசி அவர்களின் தளத்தில் சில வார்த்தைகளை அறிந்து வருவது உண்டு. MUTE - மௌனப்படுத்தல் , அமைத்திபடுத்தல் என்கிற வார்த்தைக்கு மூகாத்த

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்

தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு சிறுவி

நீண்ட நாட்களாக இந்த தேடல் என்னிடம் உள்ளது. என்னுடைய நண்பர்கள் பலர் "உங்கள் வலைப்பூ முகவரியை தாருங்கள்" - என்னும் தருணத்தில் "தரலாம்தான் ஆனால் என் வலைப்பூ தமிழில் இருக்கிறது" என்றவுடன். "நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது இல்லையா ?" என்கிற கேள்வி வந்து விழும். "எழுதினேன். ஆனால் இப்போது இல்லை " - என்பது உண்டு. அவர்கள் என் எழுத்துக்களை படிக்க விரும்புகிறார்கள். மற்ற மொழி நண்பர்கள் அவர்கள். இந்தி மொழியில் எழுதினால் கூகிள் ஆண்டவர் வரம் தருகிறார் - மொழி பெயர்த்துக்கொள் என்று. அதற்கு ஒரு சிறுவி ( widget ) அல்லது ஒரு கருவி ( tool ) இருக்கு. தமிழில் இல்லை. இந்தியாவின் ஒரே வாழும் செம்மொழி நொண்டுகிறது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் சிருவியோ கருவியோ வர நாம் செய்ய என்ன வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே சில பல்கலை கழகங்கள் முயன்று உள்ளன. ஆனால் இனைய வெளியில் பயன்பாட்டிற்கு என்று ஒன்றும் இல்லை. பல நண்பர்களின் தமிழில் எழுத்தப்பட்ட கருத்துக்கள் மனித முயற்சி இன்றி வேற்று மொழி நண்பர்களுக்கு புரிய வைக்கும் சாத்தியம் இல்லை என்றே உணர்கிறேன்.

உன்னில் எது அழகு?

அனிச்ச மலர் அழகா ? - நீ அணிந்த மலர் அழகா ? குனிந்த மயிர் அழகா ? - இல்லை நிமிர்ந்த மார் பழகா ? பணிந்த சடை அழகா ? - நீ பகன்ற சொல் அழகா ? தனித்த தமிழ் அழகா ? - உன் பவள இதழ் அழகா ? கனிந்த மொழி அழகா ? - இல்லை காந்த விழி அழகா ? நினைத்த நெஞ்  அழகா ? - இன்றும் அணைக்கும் கரம் அழகா ? உன்னில் எது அழகு ? - என்றேன் என்னில் நீ அழகு என்றாய்.

யாரடி நீ ?

யாரடி நீ ? வருடங்கள் சிலவற்றிற்கு முன் எழுதிய சில கவிதை ------------------- சிற்ப கலைகள் கூடி கற்பம் தரிக்க பிறந்த அற்புதமோ நீ ? யாரடி நீ ? யாரடி நீ ? கம்ப நாட்டான் சொற் கொடுக்க கண்ணதாசன் பா அமைக்க காளிதாசன் தொகுத்து வைத்த காவியமோ நீ ? யாரடி நீ ? யாரடி நீ ? சேரநாட்டான் மை கொடுக்க சோழ நட்டன் - அது குலைக்க பாண்டி நாட்டான் செய்துவைத்த ஓவியமோ நீ ? யாரடி நீ ? யாரடி நீ ? என்ன ஆளவந்த ஆட்சியா ? -இல்லை வீழ்த்தவந்த சூழ்சியா ? யாரடி நீ ? யாரடி நீ ?

ராம ராவணன் : தமிழர் விரோத படமா ?

இந்த படத்தை பற்றி சில நாட்களாக கேள்வி பட ஆரம்பித்தேன். இந்த படம் மலையாள புதினமான மனோமி என்பதை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிந்தேன். மலையாள புதினங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. தமிழை ; ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் படிக்க தெரியாத மனிதர்களுள் நானும் ஒருவன். மாதவி குட்டி என்கிற மலையாள புதின எழுத்தாளரின் கற்பனை கதை இது என்றே அறிகிறேன். புதின கதையின் படி - தமிழ் போராளி ஒருவன் சிங்கள பெண்ணை காதல் செய்வதாகவும் அதன் காரணமான நிகழ்வுகளும் சொல்லபடுகின்றன. மனோமி என்கிற பெயரில் இந்த புதினம் எழுதப்பட்டு உள்ளதாகவும். திரைபடத்திற்கு ராம இராவணன் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அறிகிறேன். இதில் ராமன் யார் ராவணன் யார் என்று தெரியவில்லை. சிங்கள பெண் ஒருத்தியை காதலிக்கும் தமிழ் இளைஞனின் கதையாக வந்த படமே புன்னகை மன்னன். கமல் அவர்கள் நடிப்பில் வெளி வந்த படம். சிங்களத்து சின்னக்குயிலே என்று ஒரு பாடலே அதில் உண்டு. தமிழர்களின் நிலையை அறியாமலும் அதன் பின் புலம் தெரியாமலும் எழுத்தப்பட்ட கதையா இந்த ராம ராவணன் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி இருக்கவே சாத்தியங்கள்

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 14

என் அருகில் வந்தான் மாடசாமி. என் கண்களை பார்த்தான். அவனது கண்களில் வெறி இருந்தது. தன வலது கரத்தை நீட்டினான். அந்த மெலிந்த தேகத்தவன் ஒரு பெரிய அருவாளை கொடுத்தான். அருவாளை பிடித்த மாடசாமி. மெதுவாக அதை என் கழுத்தருகில் கொண்டு வந்தான். கழுத்தில் வைத்தான். "கொன்னுடவா ?" என்னிடம் கேட்டான். கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்டிடம் சம்மதம் கேட்பது மாதிரி. நான் திரு திரு என முழித்தேன். என் கண்கள் பயத்தில் உறைந்தன. வியர்வை என்னை நனைத்து இருந்தது. நா வறண்டு போனது. அருவா என் கழுத்தை நெருக்கியது. ஆனால் அறுக்கவில்லை. "சொல்லு ஆத்தா ... தம்பி கேக்குதுல்ல" பாம்பட பாட்டி குறுக்கே புகுந்து சங்கு ஊதிக்கோ என்றது. "கொன்னுடுங்க தம்பி" மாடசாமியின் அண்ணனும் வேகபடுதினான். குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் ஒரு நிமிடம்  கவனம் சிதறினர். அந்த சிறுவன் மலை மீது இருந்து கீழே எட்டி பார்த்தான். "அண்ணே வந்துட்டாய்ங்க" அது நிச்சயமாக காவல்துறையாகதான் இருக்கும். என்னை மாடசாமி ஒரு முறை பார்த்தான். "உங்கள கொல்ல கூட்டி வரல. எங்க வீட்டு பொண்ணுகள மத்தவன்

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 13

அ ந்த இளம் பெண் மரணம் அடைந்து விட்டாள். இவர்களோ சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். மலைக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் மாதிரி இவர்கள். இவர்களால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. காவல்படைகள் நெருங்கு கின்றன. இவர்களின் தோல்வி இவர்களின் தோளில் ஏறி அமர நேரம் அதிகம்இல்லை. மாடசாமி அந்த இளம் பெண்ணை பார்த்து விம்மி விம்மி அழுதான். தன் உடன் பிறந்தவளை இழந்த மாதிரி. சுடுகாட்டுக்கு செல்ல முடியாது - தற்போதைய சூழலில். மாடசாமியின் அண்ணன் வந்தான். பார்க்க கொஞ்சம் கனமாக இருந்தான். மீசை முறுக்கி விடப்பட்டு இருந்தது. அவனோடு ஒரு மெலிந்த தேகதவன். மாடசாமி வந்த அண்ணனிடம் பிணத்தை காட்டினான். கண்களை கசக்கினான். அழுதான். "தம்பி. நம்ம பயலுகு வலுவா நிக்குராணுக. கண்ண கசக்காத" தன் தம்பியை தாங்கிக்கொண்டான் அண்ணன். அந்த மெலிந்தவன் என்னை பார்த்தான். "இது தான் அந்த படுபாவி பொண்டாட்டியா?" - மாடசாமியிடம் கேட்டான். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "யார படுபாவிங்குற ?" நான் கோபத்தோட அந்த மெலிந்த தேகதவனை நெருங்கினேன். மாடசாமி அந்த மெலிந்த தேகத்தவனை பிடித்துக்கொண்டான

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 12

இது மீண்டும் பைரவி. மாடசாமியிடம் ஒருவன் ஓடி வந்து எதோ காதில் கிசுகிசுத்தான். மாடசாமி வானத்தை ஒரு முறை பார்த்தான். பின்னர் குகைக்குள் திரும்பி பார்த்தான். நான் பயத்தில் இருந்தேன். திரும்பவும் இடம் மாறல் ஆரம்பித்தது. பாட்டி எங்களை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர் - அதாவது என்னையும் அந்த இளம் பென்னையும். காடு மலை. மீண்டும் வானம் கொட்டியது. என் கால்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்தது. சில இடங்களில் " பார்த்து நடங்கள்" என்று மாடசாமி சொல்லும் போது. அதில் முரட்டுத்தனம் இல்லை. நாங்கள் நதியின் வேறு ஒரு பக்கத்திற்கு வந்தோம். மீண்டும் ஒரு குகை கண்ணில் பட்டது. நாங்கள் உள்ளே போனோம். "என்ன மாடசாமி?" - கிழவி கேட்டாள். "அந்த பறவைங்க சத்தம் பதிவாகிடுச்சுல அதேன்" அந்த பதிவு ஞாபகத்திற்கு வந்தது எனக்கு. அவன் அவர்களது போராட்டத்தை சொல்லி அனுப்பிய பதிவு அது. என்னோடு இருக்கும் இளம் பெண்தான் பாதிக்கப்பட்டவள். அவர்கள் ஆயுதம் தூக்க நிறைய காரணங்கள் இருக்கு. அவர்களின் தாய் நிலம் - அங்கே இருந்து அவர்கள அப்புறபடுத்தபடுத்த நிறைய திட்டங்கள். எல்லாம் வளம் வாய்ந்த இந்த

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 11

என் துப்பாக்கியின் குழல் ஒரு வெறியுடன் மாடசாமியை தேட ... அங்கே இருந்தது ஒரு டேப் ரெகார்டர். அவன் பேச தொடங்கினான். இவன் என்ன குடியரசு தலைவரா என்ன ? இந்த டேப் ரேகோர்டேரை இங்கே எங்களிடம் மரணம் அடைந்த ஒரு பழங்குடியினன் தான் போட்டிருக்க வேண்டும். நாங்கள் டேப் ரேகோர்டேரை எடுத்து எங்கள் குடிலுக்குள் போட்டு கேட்டோம். "நாந்தேன் மாடசாமி பேசுறேன். கும்பிடுறேங்க. நீங்க எல்லாரும்  பெரிய பெரிய துப்பாக்கியோட குண்டோட என்ன பிடிக்க வந்திருப்பீங்க. நீங்க புதுசு. அதுனால  எங்க போராட்டத்த பத்தி சொல்லுதேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும் இருந்தாலும். நாங்க தாயா நெனச்ச மலைல ஏதோ கனிம வளம் - ஏதோ குந்தனைத் அப்படினாக. அது இருக்குன்னு யாரோ சில பேரு கண்டுபிடிச்சு அரசாங்கத்துக்கு சொன்னாங்க. அரசாங்கம்  வெளிநாட்டுகாரங்களுக்கு  சொன்னுச்சு. வந்தாக படிச்சவுக. ஏதோ எங்க நிலத்த எல்லாம் தரனும்னாக. முதல்ல அடிவாரத்துல ஆரம்பிச்சுது இந்த கூத்து. அஞ்சு வருஷம் ஆச்சு நெலத்த குடுத்தவுகளுக்கு பணமும் வரல வேலை வெட்டியும் வரல. அப்புறம் எங்க ஆளுக எல்லாம் இனிமே நெலத்த தரமுடியாதுன்னு சொன்னாக. நான் கிராமதலைவன்கிற   மொற

தி லாஸ்ட் ஏர் பெண்டர் - விமர்சனம்

ம னோஜ் நைட் ஷியாமளனின் படங்களின் மேல் நான் அதிகம் நம்பிக்கை வைப்பதில்லை.  எனவே இந்த படத்தை நான் அதிகம் எதிர்பார்க்கவில்லை. நான் இதன் விமர்சனங்களை படித்துவிட்டு படம் பார்க்காமல் இருப்பதே சிறந்த்தது என்று இருந்த போது தோழர் ஒருவரின் குடும்பம் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் ஒரு முறை போய் பாருங்களேன் என்றனர். அதிலும் அவர்கள் இந்த படத்தின் மூல வடிவமான தொடரை அவர்கள் குழந்தைகள் பார்த்ததாக சொல்லினர். இரவு நேரத்தில் இந்த படத்தை பார்க்க திரை அரங்குக்குள் சென்றோம். திரையில் படம் ஒளிர தொடங்கிய தருணத்திலேயே சீன எழுத்துக்கள் மின்ன ஒருவன் சாகசம் செய்ய எழுத்துக்கள் மிளிர தொடங்கின. கராட்டே கிட் - இப்போது இது. சீனம் வாழ்கிறது. அவதாரம் - ஆங்கிலத்தில் அவதார் - பற்றி ஒரு முன்னுரை ஓடியது. அதில் ஒரு காலத்தில் காற்று, நிலம். நீர், நெருப்பு நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் நட்புறவோடு இருந்ததாகவும். பின்னர் நெருப்பு நாடு ஆதிக்கம் கொள்ள ஆரம்பித்த தருணத்தில் அவதார் காணமல் போய் விட்டான் - என்று சொல்லப்படுகிறது. கடைசி சோழன் பற்றி சொல்லும் ஆயிரத்தில் ஒருவன் என் நினைவுக்கு வந்தான். ஒரு சகோத