Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 3

டை உடைந்து வெள்ளம் வடிவத்தை நான் பார்த்திருக்கிறேன். எங்களிடம் தப்பிக்க வழியில் சேதம் ஏற்படுத்துவதை  பார்த்திருக்கிறேன்.
சமூக விரோதிகளிடம் பண்பை எதிர்பார்க்க முடியாது. கெஞ்சி மன்றாடிய பலரை போட்டு தள்ளி  உள்ளோம். எங்களுக்கு தெரியும் அதெலாம் உயிர் வழியில் பிறக்கும் நாடகம் என்று.

நான் எப்போதும் இறக்கபட்டதில்லை சமூக விரோதிகளுக்கு; ஆயுதம் ஏந்திய சட்டவிரோதிகளுக்கு; ரௌடிகளுக்கு.

ஆனால் நான் அங்கே பார்த்தது ஒரு மிக பெரிய ஆச்சரியம். வெள்ளத்தின் நடுவே பிழை குடிகளுடன் குடும்பம் குடும்பமாய் மக்கள் வெள்ளம்.

வண்டியை விட்டு இறங்கினேன்.
என் குளிர் கண்ணாடியை கழட்டினேன். கதிரவன் மேலே இருந்து செங்குத்தாய் விழுந்தான். வட்ட வட்டமாய் அவனது கதிர்கள் வட்டமிட்டன ஒரே நேர்கோட்டில்.

திரும்பிப்பார்த்தேன் - பைரவி, நடுக்கத்துடன் இருந்தால் ஜீப்பில்.

எங்கள் வண்டியின் ஓட்டுனர் இறங்கி வந்தார். நான் அந்த நீர் வெள்ளத்தின் மேல் என் அழுத்தமான பூட்ஸ் கால்களை அழுத்தி வைத்திருந்தேன்.
நான் எங்களுக்கு பின்னல் வந்த ஜீப்பை வெறித்து பார்த்தேன்.

இந்த பகுதி இன்ஸ்பெக்டர் இளைய பெருமாள் அந்த ஜீப்பில்தான்  இருந்தார். வேகமாய் ஓடி வந்தார்.
"சார் - இவனுங்க மடசமிக்கிட்ட காசுவன்ன்கிட்டு வந்திருப்பாணுக. சுட்டு தள்ளிடலாம்"

நான் அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்தேன். சுடுவதால் பிரச்சனைதான் வரும்.
நான் அவர்களை நோக்கி நடந்தேன்.
"அய்யா திரும்பி போய்டுங்க"
"நான் நெனச்சா உங்கள சுட்டு போட்டுடுவேன்" - கத்தினேன்

அவர்களிடம் ஒரு அசைவும் இல்லை. வானத்தை நோக்கி எங்கள் படை சுட்டது.
வழி மறித்திருந்தவர்களை பார்த்தேன். கத்தியும் அருவாளும் கம்புகளும் அவர்களிடம் இருந்தது. சட்டவிரோதிகளிடம் என்ன பைபிளும் கீதயுமா இருக்கும் ?

வேறு வழி இல்லை இவர்களை சுட்டுதான் ஆகவேண்டும்.
"சூட்" - கட்டளை  இட்டேன்.

நான் நினைத்த மாதிரியே அவர்கள் எங்களை தாக்கினர். துப்பாக்கி சூடுகள் நடக்கும் போதே நாங்கள் பயணித்தோம்.

ரம்யமான  மலை பகுதி. எங்களுக்கு என்று ஒரு வீடு. கண்ணுக்கு இனிமையான  பச்சை. சொர்கத்தின் தரை கூட பச்சையாகதான் இருக்குமோ.

பைரவி கொஞ்சம் பயன்திருந்தாலும். அவளுக்கு தெரியும் இது எங்கள் வாழ்வின் அங்கம் என்று. சிங்கத்தின் மனைவி என்றால் புலியின் கூச்சலுக்கு கூட கொட்டாவிதான் விடவேண்டுமே தவிர பயப்பட கூடாது. அவள் சிங்கத்தின் மனைவி. என்னவள்.

வெள்ளை வண்ண சுடிதாரில் நீல வண்ண பூக்கள் பேச அவள் அந்த பச்சை நிலத்தின் அழகை அதிகப்படுத்தினாள்.

நான் ஒரு சின்ன வெள்ளை வட்ட  மேசைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து செய்தி எட்டில் மூழ்கி இருந்தேன். அவளை பார்த்தேன். அவள் பூக்களை வருடிகொண்டிருந்தால். இனம் இனத்தோடுதானே சேரும். மென்மை மேன்மயோடுதானே சேரும்.

என் தொலை பேசி சிணுங்கியது. இளைய பெருமாள் அழைக்கிறார்.
"சொல்லுங்க பெருமாள்"

என் வாழ்நாளில் ஒரு திருப்புமுனையான நாளை சந்திக்க இருக்கிறேன் என்பது அப்போது எனக்கு தெரியாது. கிளம்புவதற்கு ஆயத்தமானேன்.
என் ஜீப் கிளம்பியது.

அந்த நாளின் நினைவு இன்றும் உள்ளது. நான் மறக்கமாட்டேன் அந்த நாளை.

தொடரும்

Comments

  1. முக்கியமான இடத்துல, BREAK ....... very interesting.

    ReplyDelete
  2. //வெள்ளை வண்ண சுடிதாரில் நீல வண்ண பூக்கள் பேச அவள் அந்த பச்சை நிலத்தின் அழகை அதிகப்படுத்தினாள்//

    அழகான வரிகள்

    ReplyDelete
  3. //சிங்கத்தின் மனைவி என்றால் புலியின் கூச்சலுக்கு கூட கொட்டாவிதான் விடவேண்டுமே தவிர பயப்பட கூடாது//

    தல ....விஜய் கூட உங்க கிட்ட பிச்சை வாங்கணும் போல இருக்கே...உங்க பஞ்ச் டயலாக் ...

    ReplyDelete
  4. @தனி காட்டு ராஜா
    அட! நீங்க சொன்ன உடன்தான் நானே ரொம்ப ரசித்தேன்.
    திரைத்துறைக்கு அனுப்பிடுவோம் .... :-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத