Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 6

அட! அவன் அல்லவா  இவன் ? மனதுக்குள் வெடி வெடித்தது. இவன்தான் மாடசாமி.
இரவின் மடியில் படுத்து உறங்கியது எனக்கே தெரியாது. முகத்தில் கதிரவன் ஒளியை காய்ச்சி ஊற்றிக்கொண்டிருந்தான். கண் விழித்தேன்.

பாறைகளுக்கு நடுவே நான் படுத்து உறங்கிகொண்டிருந்தேன். எழுந்து பார்த்தால் யாரும் இல்லை. ஓடி விடலாம் என்று நினைத்தால்.
படுபாவி அவன் வந்து நின்றான்.

"என்ன சாப்புடுவீக ?" - அவன் முரட்டுதனமாய் கேட்டான்.
"என்ன ஏன் கடத்தின ?"
"அங்கனக்குள்ள தண்ணியும் சோறும் இருக்கு. சாப்புடுங்க"

சொல்லிவிட்டு போய் விட்டான். என்னை கட்டி போடவில்லை. மிரட்டவில்லை. ஆனால் அவனுக்கு தெரியும் நான் தப்பிக்க முடியாது என்று. அவன் ஆட்கள் எங்கும் இருப்பார்கள். நான் எதுவும் பண்ணமுடியாது ஆனால் சத்யா எப்படியும் என்னை காப்பாற்றுவார்.

அருவி பாறைகளில் மோதி கூச்சல் இட்டுக்கொண்டு இருந்துது. என் மீதும் தண்ணீர் துளிகள் விழுந்தன.

வயிறு  கிள்ளியது. சாப்பிட நினைத்தது.சாப்பாட்டுக்கு பக்கத்தில் பல்பொடி.பல் விளக்கினேன்.  சாப்பிட மனமில்லை.

போலீஸ் ஜீப்புகள் வனப்பகுதிக்குள் என்னை தேடி சுற்றிகொண்டிருக்கும். நான் எங்கே இருக்கிறேன் என்று விசாரணை நடந்து கொண்டு இருக்கும்.
திருமணம் ஆகி ஆறு மாதம்தான் ஆகிறது எங்களுக்கு. கடவுளே! இது என்ன சோதனை.

கதிரவன் உச்சிக்கு வந்தான். ஒரு பாம்படம் போட்ட கிழவி மலை மீது ஏறி வந்தாள். நான் பாறையில் அமர்ந்திருந்தேன்.

ஏற்கனவே வைத்திருந்த சாப்பாட்டை பார்த்தாள்.
"தாயீ சாப்பிடலையா ?" - கேட்டாள்.

நான் எதுவும் சொல்லவில்லை.
மௌனம் பேசினேன்.

அவள் என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.
"நால்லா வயிறார சாப்பிட்டு செத்தால் சொர்கமாந் தாயீ. சொல்ல வேண்டியது எங் கடமை" - சொல்லிவிட்டு பாம்படம் போட்ட கிழவி கிளம்பிவிட்டாள்.

சாவு பக்கத்தில் வந்து சாப்பாடு வைத்திருக்கிறது. சாப்பாடு சாவதற்கு நுழைவு சீட்டாய் வந்து உள்ளது.

வானத்தை பார்த்தேன்.
"நீங்க எங்க சத்யா ?" - உள்ளுக்குள் கத்தினேன்.

அருவி சத்தமாய் சிரித்தது.
பக்கத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது.

திரும்பி பார்த்தேன். மாடசாமி.
"எப்ப சாகுறதா உத்தேசம் ?" - கேட்டான்.

எச்சில் முழுங்கினேன். அவனது துப்பாக்கி வானம் நோக்கி சுட்டதில் இருந்து என் நெஞ்சை நோக்கி குறி வைத்தது.
அருவி சலசலத்து.

என்ன செய்வது என்று தெரியாத போது - அந்த குரல் கேட்டாது. என்ன வென்று சொல்ல்வது அந்த குரலை ?

தொடரும்

Comments

  1. பரப்பரப்பான கதை..... தொடருங்கோ!

    ReplyDelete
  2. Thanks அப்பாவி தங்கமணி. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்