Skip to main content

Posts

Showing posts from January, 2011

கணினி : உயிரை தின்னும் கண்ணி நீ ? - I ( Super Computer)

எதோ ஒரு ராணுவ தலைமையகம். இந்தியா. மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது. அந்த கட்டிடதிற்குள்ளும்தான். மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம்  வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t  ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன். வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு  வழியாக இளைஞனின்  முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது. "ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள். விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு. "ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள். அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது. தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ... அந்த பெண்ணை பார்த்தான். கண்களை மூடினான். மனக்கண்ணில் ... காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள்

மீண்டும் ஒரு தொடர் கதை

நீண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை. ஆவன படங்கள் சிலவற்றை தமிழ் படுத்தும் முயற்சியில் நானும் எனது நண்பர் ஒருவரும் இறங்கினோம். வெற்றி பெரிதாக கிட்டாதபோது கூட அந்த தாகம் இன்னும் உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை. என்னை மீண்டும் ஆசுவாசபடுத்திக்கொள்ள மீண்டும் ஒரு தொடர் கதை எழுத திட்டம். இந்த முறை கணிப்பொறி சார்ந்தே இந்த தொடர். உங்கள் விமர்சனங்கள் வழக்கம் போல் வரவேற்கபடுகின்றன.  கதையின் தலைப்பை மட்டும் இப்போது சொல்கிறேன். சூப்பர் கம்ப்யூட்டர் - இந்த கதைக்கு ஆங்கில தலைப்பு வேண்டாம் என்றும் மனம் சொல்கிறது. ஆனால் இந்த கதை இந்த கருவியை சுற்றிதான்.