Skip to main content

என் பயணங்களில்: ஊரை சொல்ல மாட்டேன்

எப்போதும் எங்களுக்கு இடமாறுதல்கள் புதிய அனுபவங்கள் பலவற்றை கொண்டு வந்து உள்ளன..

எங்களின் வாழ்வில் நல்ல அனுபவங்கள் பல இந்த பயனத்தில்  உண்டு - நாங்கள் தமிழ் மண்ணின் பூர்வ குடிகளை ஒரு முறை பார்த்தோம். அவர்களை பண்பாடு அற்றவர்கள் - பட்டிகாட்டார்கள் - என்று யாரவது இன்னமும் சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். இது வருத்தத்திற்கு உரியது.

அந்த உள்வாங்கிய சிற்றூரின் உள்ளே எங்களுக்கு வங்கி அமைந்து இருந்தது. அப்பாவிற்கு எங்களை எப்போதும் கூடவே அழைத்து செல்லும் வழக்கம்.இதனால் என் பள்ளி கல்வி கெட்டாலும் - உலக கல்வி விரிவடைந்தது.

எங்களுக்கு அந்த வங்கி கட்டடத்தின் உரிமையாளர் அவர்கள்  வீட்டிலேயே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் தான் அங்கே தங்கினோம்.மற்றவர்கள் பக்கத்தில் இருக்கும் நகரத்தில் தாங்கிக்கொண்டனர்.

அந்த வீட்டின் ஒரு பகுதியில் வீட்டுக்காரர்கள். இன்னொரு பகுதி வாடகை பகுதி - எங்கள் இடம்.

எப்போது எது சமைத்தாலும் எங்களுக்கும் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள். ஒரு நாள் அவர்களின் பேச்சின் போது சுவாரசியமாக நிறைய விஷயம் சொல்லினர். வேட்டையாட போவது பற்றி.

வேட்டை என்றால் சிங்க வேட்டை, புலி வேட்டை எல்லாம் இல்லை. அருகில்  காடு இருந்தாலும் - சிங்கம் புலி எல்லாம் இல்லை.

அவர்கள் நரி வேட்டை ஆடுவது கூட இல்லை. அவர்கள் பெரிய வேட்டை என்று சொன்னது காட்டு பன்றி பற்றி. அது கரும் பன்றி. அம்மா ஒரு நிமிடம் திகைத்து விட்டார்.

அப்புறம்தான் உச்சகட்டமே - அவர்கள் அந்த பன்றி கரியின் ருசியை பற்றி பேசினர். ஒரு நிலையில் - அது சமைத்தால் உங்களுக்கு தருகிறோம் என்று சொல்ல அம்மா - இல்லைங்க நாங்க எல்லாம் சைவமங்க ( அட! முழு பொய்ங்க ) என்கிற மாதிரி சொன்னார்.

எனக்கு ஆச்சிரியம் - இன்னமும் வாழும் பாம்பு பிடிக்கும் இருளர்கள். காட்டு பன்றி பிடிப்பவர்கள், உள்ளார்கள். இவர்கள் பூர்வ குடிகள். இவர்களுடன் சேர்ந்து வாழ்வது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இவர்களின் வாழ்விற்கு அரசுகள் சில விடயங்கள் செய்கின்றனர் - குறைந்த பட்சம் தமிழ் நாட்டில். பாம்பை பிடித்து இருளர்கள் அரசிடம் பாம்பு பண்ணைக்கு கொடுலாம் என்று கேள்வி பட்டு உள்ளேன்.

 தமிழ் மண்ணில் ஒரு பச்சை வேட்டை - இது வரை இல்லை. நல்லதே நடக்க வேண்டுவோம்.

பயனம தொடரும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்