Skip to main content

த நா வரலாறு : சோழன் ஆண்ட மண்ணில் ....

தமிழ் மண்ணின் முதலாளித்துவத்தின் கோர முகம், சதி முகம் வெளிப்பட்ட இடம் கீழவெண்மணி. அதை அவன படுத்தும் முயற்சியில் ஏற்கனவே பலரும் முயன்றிருந்தாலும் - நாங்களும் கொஞ்சம் முல்கிறோம்.

கீழவெண்மணி என்பது தற்போதைய நாகை மாவட்டத்திலும் முன்னாலய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் உள்ள ஒரு சிறிய ஊர்.
இந்த ஊரில் ஒரு பெரும் வேட்கதிருக்கு உரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அரை படி கூலி உயர்வு கேட்ட அப்பாவி தொழிலாளிகள் - கூலி உயிர்வு கேட்ட காரணத்திற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்கிற காரணத்தாலும் உயிருடன் கொளுத்தப்பட்டனர். இந்த வரலாறு இன்றும் நம் வரலாற்று புத்தகங்களில் இல்லை. மாறாக நம் பெருமை பேசும் பல விடயங்கள் உண்டு. அறியாதவற்றை சொல்ல்வதே எண்ணம் என்றாலும் - எங்களுக்கு முன்னாள் பலர் இதை ஆவன படுத்தி உள்ளனர்.

"இனி" என்கிற தன் புதினத்தில் திரு மேலான்மை பொன்னுசாமி இதைதான் மைய கருத்தாய் வைத்து எழுதினார் என்று என் பேராசிரியர் சொல்லுவார்.

ராமயவின் குடிசை இதன் ஆவண வடிவமே. இயன்றால் வாங்கி பாருங்கள். நாங்களும் இயன்றால் பதிவேற்ற முயற்சிக்கிறோம்.

உங்களுக்கு வேறு ஒரு இனைய பக்கத்தை அறிமுக படுத்த உள்ளேன் இன்று. அதன் முகவரி http://lenz101.com/

ஆவன ஒழி கீற்றுகளை பதிவேற்ற நானும் நண்பர் ஜூலிச்டனும் சேர்ந்து எடுத்து உள்ள முயற்சி இது. உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
உங்கள் பார்வை எங்கள் தேவை.

Comments

Popular posts from this blog

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத