Skip to main content

என் பயணங்களில் : எழுத்து அறிவித்தது!

தந்தையின் இடமாற்றங்கள் எனது கல்வியை பாத்தித்தது. எப்போதெல்லாம் இடமாற்றல் ஆணை வருகிறதோ அப்போதெல்லாம் முதல் பலி கல்வியாகவே இருந்தது.

அதிலும் கல்வியின் ஆரம்ப கட்டம் அது. கணிதம் மற்றும் மொழிகளை அறிமுகம சேயும் தருணத்தில் நான் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மாதிரி இடம் தாவி கொண்டிருந்தேன்.

என் தாய் மொழி தமிழ் - அதன் ஆரம்பம் கூட எனக்கு இப்படிதான் கிட்டியது. இடமாற்றல் பணிகளில் அம்மாவும் அப்பாவும் தீவிரம் காட்டவேண்டிய நிலை.

இங்கிலீஷ் ஈ என இளிக்க தமிழ் கண்ணாமூச்சி காட்டியது. நல்லவேளை தமிழை சின்னத்திரை வழியாக நான் கற்கும் நிலை இல்லை. அப்போது இந்த தொலைகாட்சி அக்கபோர்கள் இல்லை. தமிழ் வாழ்ந்தது.

பள்ளிக்கூடத்திலும் சூழலாலும் தமிழ் கற்றாலும் எழுத படிக்க கற்றுகொடுத்து
பெருமை இவர்களை விட வேறு ஒன்றிற்கு உண்டு. அந்த ஆசிரியர்    காலையில் வருவார். "ஏக் காவ் மே ஏக  கிஷான்  ரகுதாத்தா" கதை சொல்லி தரும் ஆசிரியர் அல்ல அது.

அது ஒரு நாளேடு. அதன் பெயர் தினமணி. தினமணி மூலம்தான் நான் ஆரம்பகாலத்தில் எழுத கற்றுக்கொண்டேன் . எழுத்து அறிவித்தது தினமணி

தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும் போது - அயல் நாடுகளில் நம் தமிழ் குழந்தைகளின் நிலை ? நம் ஊரு சினிமா பாத்து நம்ம தமிழையும் தமிழ் மக்களையும் தெரிஞ்சுகிட்டா கிழிஞ்சுது.

இது எல்லா மொழியினருக்கும் உள்ள பிரச்சனை.தாய் மொழியை காப்போம்.

தொடரும்   

Comments

  1. தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும் போது - அயல் நாடுகளில் நம் தமிழ் குழந்தைகளின் நிலை ? நம் ஊரு சினிமா பாத்து நம்ம தமிழையும் தமிழ் மக்களையும் தெரிஞ்சுகிட்டா கிழிஞ்சுது.

    ..... கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடியல.
    When you have time, read:
    http://konjamvettipechu.blogspot.com/2010/01/blog-post_20.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்