Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 7

நான்  சத்யா. எங்கள் திருமண வாழ்வின் மிக பெரிய துயரம் அது. கட்டியவளை   ஆறே மாதங்களில் பறி கொடுத்து விட்டு நிற்கிறேன். கட்டியவளை காப்பாற்ற முடியாத ஆண்மகன் நான்.

இந்த செய்தியை சொன்னவுடன் பெருமாளும் மற்றவர்களும் மௌனமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இருட்டு காட்டில் நாங்கள் புரியாமல் நின்று கொண்டு இருந்தோம். என்ன செய்வது ? எங்கள்தேடலில் எங்கும் அவள் கிடைக்கவில்லை.

இருட்டு  காட்டுக்குள் குருட்டு பூனை திருட்டு மனிதர்களை தேடி அலைந்தால் இது தான் நடக்கும்.
விடிந்து விட்டது. சில காவலர்களுக்கு தூக்கம் கண்களில் ஆட்சி செய்ததது.

எங்கள் படை குடில் அமைத்து கொண்டது. தூங்கினோம். நான் இந்த வேட்டைக்குத்தான் வந்தேன் ஆனால் தற்போது லட்சியம் மாறி உள்ளது.
பறவைகள் இறை தேட பறந்தன. கதிரவன் பூமிக்கு வணக்கம் சொன்னான். இப்போதுதான் சிலர் தூங்கினர்.

தூக்கம் எனக்கு வரவில்லை. தொலைத்து நான். அழைத்து வந்தது தொலைத்து விடவா ? கண்களின் ஓரத்தில் கண்ணீர் சம்மனமிட்டது.

ஒரு சிறுமி சுள்ளி போருக்க வந்தாள். குடில்களை பார்த்தவுடன் ஓடினாள். அவளோடு ஒரு இளம் பருவ மங்கை.இருவரும் இந்த மலை வாழ் மக்கள். கருதமேநியினர்.

நான் ஓடினேன் . அவர்களை பின் தொடர்ந்து. அவர்கள் நின்றார்கள். நானும் நின்றேன்.

பயம் அவர்கள் இருவர் முகத்திலும் படர்ந்து நின்றது.இதழ் திறக்கவில்லை அவர்கள். பயத்தில் அந்த சிறுமியை இவள் தன் காரத்துக்குள் வைத்திருந்தால். சிறுமியின் தோள்கள் இந்த இளம் பெண்ணின் கைகளுக்குள். சிறுமி என்னை உற்று பார்த்தாள்.

நான் சிறுமிக்கு முன்னால் ஒரு காலில் மண்டி இட்டேன். சிறுமியின் கண்களுக்கு முன்னால் என்னவளின் நிழற் படம் காட்டி நிஜம் கேட்டேன். அந்த சின்ன பெண் வாய்திறக்க இளம் பருவ மங்கை அந்த சிறுமியை கட்டி அனைத்து வாயை பொத்தினாள். விவரம் தெரியாத வயது. சிறுமி தன்இடது  கையால் ஒரு திசையை காட்டினாள். அருவி ஓவென்று கொட்டி கொண்டு இருந்தது.

அங்கே அருவி ஓவென்று கொட்டி கொண்டு இருந்தது. அது ஒரு மலை உச்சி. ஒரு பெரிய பாறை. அருகிலேயே - கொஞ்சம் புகை வந்து கொண்டிருந்தது. குளிர் காய்ந்திருப்பார்கள். அங்கேதான் பைரவி இருக்க வேண்டும்.

என் காவல் படையிடம் ஓடினேன்.

இப்போத்துதான் கண்ணயர்ந்தவர்கள்  சிலர். ஆழ்ந்த உறக்கம் கொண்டோர் சிலர். நேற்றைக்கு விட்ட தூக்கத்தை அவர்கள் இன்றைக்கு இரவுதான் பெறவேண்டும்.

இளையபெருமாளும் நன்றாக உறங்கி கொண்டிருந்தார். உலுக்கினேன் அவரை. கட்டளை பறந்தது. துப்பாக்கிகள் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. தூக்கம் பறந்தது. முகம் கழுவியதில் தூங்கம் துலைந்தது அவர்களுக்கு.

ஜீப்புகள் இனி உதவாது. எங்கள் படை மலை ஏறியது. தடதடவென. பூட்ஸ் சப்தங்களில். பாம்புகள் வழியில் அவசரமாய் வழி மாறின.

மலை உச்சியை அடைந்தோம். ஒளி பெருக்கியில் சப்தம் இட்டோம்.
"இனி தப்பி போக முடியாது மாடசாமி"

அருவியின் சலசலப்பிலும் வெங்களத்தில் உளி அடித்தமாதிரி மலையில் விழுந்து எதிரொலித்தது. நாங்கள் உச்சியில் இன்னும் சில நொடிகளில் எங்கள் இலக்கு.

கண்களின் துளாவலில் தெரிந்தது அந்த காட்சி. நான் அதிர்ந்து போனேன்.
நதி சலசலத்தது. இதயம் படபடத்தது. திரும்பி பார்த்தேன் எங்கள் படை - துப்பாக்கிகளுடன்.

தொடரும்

Comments

  1. Another Good point la break..... :-)

    ReplyDelete
  2. interesting. lemme read the other parts too.

    ReplyDelete
  3. நன்றி சித்ரா & வித்யா. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி தங்கமணி. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...