Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 5


ன் பெயர் பைரவி. நான் சத்தியமூர்த்தியின் மனைவி. நாங்கள் அந்த நாட்களில் தேனீ பகுதிக்கு சென்றோம். அந்த வெள்ளம் நிறைந்த காட்டு மலை பகுதியில் எங்கள் வண்டி பயணித்த போது இவர் இறங்கிஏதோ கத்திக்கொண்டு இருந்தார். நான் பயத்தில் உறைந்து இருந்தேன்.


துப்பாக்கி சூட்டுக்கிடையில்  எங்கள் பயணம் இருந்தது. எங்களுக்கு என்று மிக அழகான ஒரு வானமும், வனமும் அதன் அருகில் ஒரு வீடும் இருந்தது. மென்மையான ஓட்டி தரை. நெஞ்சம் கவரும் சூழல். இங்குதான் எங்கள் வாசம் என்கிற போது மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

எங்கள் வாழ்வின் தேனிலவு இது என்று இதயம் சொன்னது. ஆனாலும் துப்பாக்கியும் கையுமாக இவர் சுற்றினார். தடினமான ஜெர்கின் - தடினமான பூட்ஸ் என்று எல்லாம் இவர் இதயம்  போலவே. ஆனாலும் இவர்என் செல்ல காதலர்.

அந்த நாள் எனக்கு நிறையவே  ஞாபகத்தில் உள்ளது. இரவு பொழுது. நிலவு இந்த மண்ணில் குளுமை தந்துகொண்டிருந்தாள். பொன்னிற நிலவு சிதறிய நட்சத்திரங்களும் ஒரு அழகிய ஓவியம் போல இருந்தது.

இவர் காவல்நிலையத்தில் இருந்தார். வருவதற்கு தாமதம் ஆகும் என்று தொலை பேசி அழைப்பு விடுத்து சொன்னார்.

இவர் தொலைபேசி அழைப்பு விடுத்து சொன்னதும் - நான் என் படுக்கையில் போய் படுத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் போய் இருக்கும். ஏதோ வண்டி வரும் சத்தம். எழுந்தேன். வெளியில் வந்தேன்.

ஒரு முருட்டு ஜீப் வந்து கொண்டிருந்தது. அது ஒளி வெளிச்சத்தை பாய்ச்சியபடி வந்தது. இவர்தானோ - விளயாடுகிராரோ  என்று நினைத்தபடியே வாசல் வந்தேன். எங்களுக்கான இரண்டு காவலர்கள் வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.

ஜீப் சிறுத்தை மாதிரி வந்தது. எங்கள் வீட்டு வாசலில் நின்றது. சில மனிதர்கள் இறங்கினர்.

"பயப்படாத தாயீ" - வண்டி ஓட்டி வந்தவன் சொன்னான். அவன் இறங்கவில்லை.

எங்கள் காவலர்கள் தாக்கப்பட்டனர். நான் கதறினேன். அவர்கள் என்னை கடத்தினர். கண்களை கட்டினர்.
எனக்கு இந்த வண்டி ஓட்டியை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. முரட்டு உடல். கூர்மையான விழிகள். இரண்டு நாள் தாடி. முரட்டு கட்டபொம்மன் மீசை. இவன் யார். இவனை நான் எங்கே பார்த்தேன். இவனுக்கும் எனக்கும் இடையில் என்ன ?

ஜீப் பறந்தது. காவலர்கள் வீழ்ந்து கிடந்தனர். நிலா எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த்தது. இந்த குளிர் பகுதியில் இந்த இரவில் என் முகம் முத்து குளித்திருன்தது. நிலவின் கதிர் என் வியர்வை முத்தில் விழுந்து மின்னி சரிந்தது.

இவன் யார் ? - என் இதயம்  என் நினைவுகளை அலசியது.

தொடரும்

Comments

  1. கடத்தி கொண்டு போய் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மெதுவா அசை போடுதே, இந்த பொண்ணு..... ஆஆஆ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...