Skip to main content

கழுகு - நண்பர்களின் களம்



சில நாட்களுக்கு முன்னாள் நான் பார்வை இடும் பதிவுகளில் தெரிந்த அந்த அரசபறவையின் பார்வை, என் பார்வையை இழுத்தது.



கருப்பு மேனியும் கருத்து வேகமுமாய்; கருப்பு விழியும் அதில் பொறுப்பு வழியும் பார்வையும்; வெள்ளி தலையும் சொல்லில் புரட்சி நிலையும் என்று அது ஒரு புரட்சி சின்னம். அமெரிக்காவிற்கும் அதுதான் சின்னம் என்பது வேறு கதை.

நண்பர் தேவா, தம்பிகள் சௌந்தர், விஜய் ஆகியோரின் கருத்து களம் என்று அறிகிறேன்.

இப்படி ஒரு கருத்து களம் உருபெற்று உள்ளத்தில் மகிழ்ச்சியே! தொடர்ந்து நடத்துவோம் என்கிற வெறியோடு கூடிய பொறுப்புணர்வு தேவை என்பதை நண்பர்களுக்கு சொல்ல விழைகிறேன்.

தமிழ் நாட்டின் இருகட்சி ஆட்சி முறை பற்றி ஒரு விவாதத்தை அவர்கள் வெளி இட்டு உள்ளனர். வரவேற்கவேண்டிய முயற்சி.

என்னோடு இணைந்து கொள்ளுங்கள் அவர்களை வாழ்த்துவதில்.

அவர்களின் வலை பூவை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைப்பு தரலாம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

வாழ்த்துகிறேன் - நல்ல பதில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்கிற ஆசையுடன். மொக்கைகளை உங்கள் பதிவுகளில் வைத்துக்கொள்ளுங்கள். கழுகை பறக்கவிடுங்கள்.

http://kazhuhu.blogspot.com/

Comments

  1. நண்பர்களின் இந்த கழுகு தளத்தை இன்றுதான் பார்த்தேன்.
    புதிய முயற்சி.வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. புரட்சியாளர்கள் மூவரும் வாழ்க வளர்க.
    அருமையா சமூக அக்கறையோட எழுதுறாங்க.

    ReplyDelete
  3. நாங்கள் இன்னும் பல முயற்சிகளை செய்ய இருக்கிறோம் உங்கள் வாழ்த்துகளுடன்.

    நன்றி....நன்றி....

    ReplyDelete
  4. தோழர் கார்த்திக் சிதம்பரம்.......


    மகிழ்வோடு ஆரத்தழுவி உங்களின் கட்டுரைக்கு நனாறி பகிரும் அதே நேரத்தில் கழுகு நமது அனைவரின் தளம்தான் என்பதனையும் பதிய விழைகிறேன்.

    சமுதாயத்தின் மீது ஈடு பாடும், அ நீதிகளின் மீது வெறுப்பும், சத்தியத்தின் மீது ஈடுபாடும், சமூக பிரஞையும், விசாலமான பார்வையும், எல்லா நிறங்களையும் தாண்டியா எண்ணமும், குறிப்பாக நமது காலத்தில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து வரும் நமது தலைமுறைக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவரும்.........கழுகின் அங்கங்களே.....


    " ஏகாத்தியபத்தியத்துகு எதிராய் எந்த மூளை சிந்தித்தாலும் அவன் எமது தோழனே" என்று அறைகூவல் விடுத்த சேகுவராபோல....

    நாம் அனைவரின் கருத்துக்களும் சமுதாய சீர்திருத்தவும், மனித நேயத்தை வளர்ப்பதாகவும் இருந்தால் நாம் தோழர்களே....!

    கருத்துக்களின் களம்..! ஆரோக்கிய விவாதங்கள் மூலம் உண்மை எட்ட ஒரு முயற்சி......எட்ட எட்ட பறந்தாலும்.....அடையப் போகும் பொருளின் மீது வைக்கும் தீர்க்கமான பார்வை...


    இது தன் கழுகு!


    மிக்க நன்றி கார்த்தி சிதம்பரம்....! நீங்களும் கழுகுதான்!

    ReplyDelete
  5. மிக்க நன்றி கார்த்திக்,

    உங்களுடைய வளைய தளத்தில் கழுகை பற்றி நல்லதொரு மதிப்பை கொடுத்தற்கு,
    நான், சௌந்தர்,விஜய் சேர்ந்து ஆரம்பித்தது இப்பொழுது உங்களை போன்றோரின் நல் அறிவு சார் மனிதர்களோடு கைகோர்த்து அழகாய் வட்டமிட்டு , இந்த சமுதாதயத்துக்கு தேவையான விவாதங்களையும், புரட்சிகளையும், சிறந்த தகவல்களையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.