Skip to main content

யாரடி நீ ?

யாரடி நீ ?
வருடங்கள் சிலவற்றிற்கு முன் எழுதிய சில கவிதை
-------------------
சிற்ப கலைகள் கூடி
கற்பம் தரிக்க பிறந்த
அற்புதமோ நீ ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

கம்ப நாட்டான்
சொற் கொடுக்க
கண்ணதாசன்
பா அமைக்க
காளிதாசன்
தொகுத்து வைத்த
காவியமோ நீ ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

சேரநாட்டான் மை
கொடுக்க
சோழ நட்டன் - அது
குலைக்க
பாண்டி நாட்டான்
செய்துவைத்த
ஓவியமோ நீ ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

என்ன ஆளவந்த
ஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?

யாரடி நீ ?
யாரடி நீ ?

Comments

  1. நல்ல சினிமாப் பாடலின் வடிவம் .. பாராட்டுக்கள் ..கார்த்திக்

    ReplyDelete
  2. நன்றி செந்தில். கொஞ்ச நாள் கவிதைகள் எழுதலாம் என்று இருக்கேன்.
    உங்கள் தாக்கம்தான்.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. /// என்ன ஆழவந்த
    ஆட்சியா ? -இல்லை
    வீழ்த்தவந்த
    சூழ்சியா ?

    யாரடி நீ ?
    யாரடி நீ ? ///

    கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.. :-)

    ReplyDelete
  5. என்ன ஆழவந்த
    ஆட்சியா ? -இல்லை
    வீழ்த்தவந்த
    சூழ்சியா ?
    ////////

    நல்லாயிருக்கு

    ஆளவந்த என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  6. நன்றி ஆனந்தி, பிரபு.
    தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பிரபு - திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  7. யார் என்று தெரியாமலே இப்படி வர்ணிக்க வைத்தவள் யார் அவள் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.