Skip to main content

உ த ப : மவுண்ட் பேட்டன் பிரபு

Classiebawn

நீர் சலசலத்தது.  பெரும் இரைச்சலுடன் அந்த படகு தகர்ந்தது.அந்த படகு சிதறி இருந்தது.

ஓடி வந்த காபற்றுனர்கள் - அவரை நீரில் இருந்து எடுத்தனர். உயிர் இருந்தது. கால்கள் சிதறி இருந்தன.
கடைசி மூச்சுகளை கொடுத்து வாங்கிக்கொண்டு இருந்தார் அவர்.

லார்ட் மவுண்ட் பேட்டன் மரணத்தை சில நிமிடங்களில் தழுவினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ஆட்சி தலைவர், அரச குடும்பத்தின் உறுப்பினர், பர்மாவிர்கான ஏர்ள் ( Earl ) என்கிற பொறுப்பை வகித்த ஆங்கில ஆட்சி முகம், இராண்டாம் உலக யுத்தத்தில் கூட்டு படைகளின் கடற்படை தலைவர், அதிரடி படைவீரர்களின் பயன்பாட்டை முன்னிறுத்திய ஆங்கில வீரர்  , மரபு சாரா போர் முறைகளையும் பயன்படுத்த எத்தனித்த தலைவர் இறந்து கிடந்தான்.

குற்று உயிராய் கிடந்த அவரது பேரன் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான்.

ஐரிஷ் பகுதியான இந்த ச்லிகோ பகுதிக்கு வந்த மவுண்ட் பேட்டன் கொல்லப்பட வாய்ப்புகள் அதிகம் என்கிற எச்சரிக்கை ஏற்கனவே இருந்தது. ஐரிஷ் நிலத்தில் பிரிட்டிஷ் அரசு தனதாக்கி ஆக்கிரமித்து  கொண்டு வருவதாக வட மற்றும் அயர்லாந்து மண்ணில் எண்ணம் இருந்தது.


டீப்பே என்கிற தவறான போர் சோதனையில்  பல உயிர்கள் போக காரணமானவர் என்கிற குற்றச்சாட்டு   உடையவர் ( இது கனடா தொடர்பான விடயம் ) மட்டும் இன்றிஅயர்லாந்து தொடர்பான விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆளுமை முகங்களுள் ஒருவராக இருந்தவர்.
அயர்லாந்து குடியரசு படையின் கோபத்திற்கு உரியவராக இருந்தார்.

சில மணித்துளிகளில் முள்ளக்ஹ்மோரே சாலைகளில் அந்த கார் படுவேகமாக சென்று கொண்டு இருந்தது. போக்குவரத்து காவலருக்கு முலையில் எச்சரிக்கை மணி அடிக்க. அந்த கார் வழிமறித்து நிறுத்தப்பட்டது.

அவர்  ஒரு அயர்லாந்துகாரர் . காருக்குள் இருந்து இறக்கவிடப்பட்டார். வெளியில் வந்தவர், உடலில் நைட்ரோ கிளிசரின் துணுக்குகள் இருந்தன, கொஞ்சம் பச்சை வண்ணம் ஒட்டி இருந்தது. படகில் இருந்த அதே வண்ணப்பூச்சின்  எச்சங்கள்.

விசாரணை உடனடியாக தொடங்கியது. அந்த மனிதரின் பெயர் மக் மோகன். அவர் மவுண்ட் பேட்டனின் கொலையாளி.

கரை ஓரம் இருந்து தூர கட்டுபாட்டை ( Remote Control ) கொண்டு மவுண்ட் பேட்டன் கொள்ளப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பல வருட சிறை வாழ்விற்கு பின் புனித வெள்ளி உடன்படிக்கை என்கிற உடன்படிக்கையில் பிரிட்டிஷ் அரசு மக் மோகனை விடுவித்தது.

புனித வெள்ளி உடன்படிக்கை என்றால் என்ன ? டீப்பே சோதனை ( The Dieppe Raid ), ஏர்ள் என்பவை பற்றி எல்லாம் விருப்பம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளவும்.

Classiebawn  என்கிற கோட்டை இல்லத்தில்தான் மவுண்ட் பேட்டன் தங்கி இருந்தார். அந்த இல்லம் இன்றும் உள்ளது.

அடுத்த பதிவில் வேறு ஒரு தலைவரின் கடைசி தருணங்களை பற்றி பதிவிடுகிறேன்.

தொடரும்

Comments

  1. சுவாரஸ்யமான தகவல்.. பேட்டனை அடுத்து நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க.... வித்தியாசமான டாபிக், ரொம்ப நல்லா இருக்குதுங்க... தொடர்ந்து இந்த மாதிரி தலைப்பில் எழுதுங்க...

    ReplyDelete
  3. அருமை கார்த்திக். சுவாரசியமாக செல்கிறது. தொடருங்கள். இண்டிலியில் இணைத்தால் பலருக்கு சென்று சேரும்.

    ReplyDelete
  4. நன்றி
    @கே ஆர் பி செந்தில்,
    @சித்ரா,
    @அருண் பிரசாத் - இணைக்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  5. Surprising informations , keep it going

    ReplyDelete
  6. தேடல் வித்தியாசமா இருக்கு சி.கார்த்திக்.வாசிக்க வாசிக்க இன்னும் ஆவல் அடுத்த பதிவுக்காய்.நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...