Skip to main content

ராம ராவணன் : தமிழர் விரோத படமா ?

இந்த படத்தை பற்றி சில நாட்களாக கேள்வி பட ஆரம்பித்தேன்.

இந்த படம் மலையாள புதினமான மனோமி என்பதை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிந்தேன்.



மலையாள புதினங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. தமிழை ; ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் படிக்க தெரியாத மனிதர்களுள் நானும் ஒருவன்.



மாதவி குட்டி என்கிற மலையாள புதின எழுத்தாளரின் கற்பனை கதை இது என்றே அறிகிறேன். புதின கதையின் படி - தமிழ் போராளி ஒருவன் சிங்கள பெண்ணை காதல் செய்வதாகவும் அதன் காரணமான நிகழ்வுகளும் சொல்லபடுகின்றன.



மனோமி என்கிற பெயரில் இந்த புதினம் எழுதப்பட்டு உள்ளதாகவும். திரைபடத்திற்கு ராம இராவணன் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அறிகிறேன்.

இதில் ராமன் யார் ராவணன் யார் என்று தெரியவில்லை.



சிங்கள பெண் ஒருத்தியை காதலிக்கும் தமிழ் இளைஞனின் கதையாக வந்த படமே புன்னகை மன்னன். கமல் அவர்கள் நடிப்பில் வெளி வந்த படம்.

சிங்களத்து சின்னக்குயிலே என்று ஒரு பாடலே அதில் உண்டு.



தமிழர்களின் நிலையை அறியாமலும் அதன் பின் புலம் தெரியாமலும் எழுத்தப்பட்ட கதையா இந்த ராம ராவணன் என்று தெரியவில்லை.

ஆனால் அப்படி இருக்கவே சாத்தியங்கள் உண்டு என்று நினைக்கிறேன்.



புன்னகை மன்னனிலோ தெனாலியிலோ கமலும் பெரிதாக தீவு தேசத்தின் நிலையை பற்றி சொல்லவில்லை. கன்னத்தில் முத்தமிட்டால் ஓரளவுக்கு சொல்ல முயன்றாலும் முழுமை குறை இருந்தது.



போர் நிலைகளை அடிபடையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் தமிழில் அதுவும் நம் அண்டை மண்ணில் நடந்த நிகழ்வுகள் குறித்த படங்கள் வெளிவந்தது கிடையாது.



கன்னத்தில் முத்தமிட்டால் - மணி அவர்களின் இயக்கம் என்பதால் விருது கூட பெற்றது.



ஆரோக்கியமான விவாதமும் அப்பாவி தமிழர்களின் நல்வாழ்விற்கான முயற்சிகளும் உயிர் பெருத்தல் நலம்.

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்