Skip to main content

பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்

பள்ளி செல்லும் சிறுவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினார். நண்பன்  கேலி பேசினான். நடத்துனர் கடினமாக பேசினார் - என்று காரணங்கள் பல.

நடத்துனர்கள் மாணவர்களை சரியாக நடுத்துவது இல்லை என்று சிலர் என்னிடம் பேசும்போது சொல்லினர். அவர்கள் சொல்வது உண்மையோ என்று நினைக்கிற சம்பவங்களை நானும் நேரில் பார்த்தேன். இது வருத்தம் அளிக்கிறது.

ஆசிரியர்கள் அடிப்பது எல்லாம் இப்போது குறைந்தே உள்ளது என்று நம்புகிறேன். ஆசிரியர் திட்டினார் என்கிற காரணத்தால் தற்கொலை என்பது சரியான ஒன்றா - ஆசிரியர்கள் சிலரை மிக மோசமான தண்டனைக்கு உள்ளாக்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு தவறு. ஆனால் அவர் கடிந்து கொள்ளக்கூட கூடாதா என்பது விவாத பொருள். மண்டியிட்ட நாட்கள் எனக்கு நினைவில் இன்றும் உண்டு.

நண்பர்கள் கேலி பேசினர். இது மிகவும் வருத்தம் தரும் விடயம். நண்பனே எதிரி ஆவது - நல்லது அல்ல. சக மாணவன் அல்லது மாணவன் என்றே அவர்களை அழைக்க வேண்டும் - அவர்கள் நண்பர்கள் அல்ல.

இன்னும் ராகிங் கொடுமை இருக்கிறது - அதுவும் அண்ணா பல்கலையில் கூட என்கிற செய்திகள் வருத்தம் அளிக்கிறது.

எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம். மொஹெஞ்சதரோ நிலத்திற்கு அந்நிய படைகள் வந்தபோது - போருக்கு ஆயத்தம் அற்ற நிலையில் இருந்த ஒரு பண்பு உயர் கூட்டம் என்றே திராவிட மக்கள் வர்ணிக்கப்படுகின்றனர்.

மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும்.

Comments

  1. கார்த்திக்...நீங்கள் சொன்ன கடைசி வரி உண்மை.வாழ்வை எதிர்க்கும் சமாளிக்கும் அல்லது எதிர்பார்க்கும் மனநிலை இருந்துவிட்டால் இப்படியான சம்பவங்களுக்கு வாய்ப்பில்லை.

    ReplyDelete
  2. மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும். ///

    புற அழகிற்கு காட்டும் அக்கறையை, மனம் வலிமையடைய காட்ட வேண்டும். குறைகளை கண்டு பிடித்து தீர்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம்.


    ......ஒருவரின் பேச்சு, ஒருவரை மேன்பட வைக்க வேண்டுமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் விதமாக அல்ல. உறுதியான மனநிலை பெறுவது, ஒருவரின் தனிப்பட்ட personality யா? இல்லை, வளர்ப்பு மூலம் - பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்லி கொடுத்து - வருவதா என்று தெரியவில்லை. நல்ல இடுகை.

    ReplyDelete
  4. நன்றி சோதரா,...

    ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற மனநிலையில் மட்டுமல்ல,வேதமாகவே கைக்கொண்டிருந்துள்ளனர் நமது மூதாதைகள்.

    ஆனால் நமது மக்கள் போதிய மனோவலிமை பெற்றிருக்கவில்லையெனவே எனக்குத் தோன்றுகிறது.

    ஏனெனில் ஆரியக்கலப்புக்கு முன்போ,பிறகோ,ஒன்றல்ல,....ஓராயிரமல்ல,...
    முப்பத்து முக்கோடி தேவர்கள்(90கோடி) முதல் இன்றைய இந்திய மக்கள் தொகை அளவில் தெய்வங்களை வைத்து இவர்களெல்லாம் உன்னைக் காப்பாற்ற உள்ளபோது எதற்கு பயம் என்று அவர்களுக்கு ஒரு மனோவலிமை உண்டாக்கப் புணையப்பட்ட பொய்களோ..!!?? என்ற ஒரு குழப்பம் எனக்கும் உண்டு.

    உலகெங்கும் சென்றும் இன்னும் ஆங்கிலேயர்கள் பெற்ற வலிமை போன்று நாம் இன்னும் பெறவில்லை என்பது கண்கூடு.....

    பல ஆலோசனைக்காரருள்ளவனை அழிக்கமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டால் இது போன்ற தவறான செயல்கள் நடக்காது.

    வாழ்த்துக்கள்..வாழ்க...வளர்க..

    ReplyDelete
  5. நான் சகோதரி ஹேமாவின் கருத்தையே Repeatuகிறேன்.

    ReplyDelete
  6. நன்றி ஹேமா
    நன்றி தமிழ் உதயம்
    நன்றி Chitra
    நன்றி வானவன் யோகி
    நன்றி சே.குமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.