Skip to main content

உ த ப : லியோன் டிராட்ஸ்கி

மெக்ஸிகோ மண்ணில் அது சிவப்பு சூரியனின் அன்றய நாளின் கடைசி தருணங்கள்.

அந்த இளம் மாலை பொழுதில் தன குறுந்தாடியை தடவியபடி அமர்ந்து இருந்தார் அந்த நான்காம் தலைமுறையாளர்.
தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த மேசையில் அவர் புத்தகங்களோடு ஒருங்கிணைந்து இருந்தார்.

சிந்தனை குதிரை முலைக்குள் இருந்து சிங்கத்தை போல உறுமியது.
அந்த நேரத்தில் வீட்டுக்கு முன்னாள் அந்த மகிழுந்து வந்து நின்றது. அந்த மகிழுந்தின் உறுமல் நிற்க. சிந்தனை சிங்கத்தின் கற்பனை வகுப்பறையிலும் மணி அடித்தது.

அந்த மகிழுந்தில் வந்தது அவர் மனம் கவர்ந்த நண்பன் பிரான்க் ஜாக்சன்.
மகிழ்ச்சியில் மனம் துள்ளியது சிந்தனையாளருக்கு .

வழக்கம் போல சிந்தனை அரட்டை சம்மனமிட்டது. அவன் அந்த காகிதங்களை தந்தான் அவரிடம்.
வழக்கமாகவே அவன் காகிதங்களில் கருத்து கட்டுரைகள் எழுதி வர - அதன் தொடர்பான கருத்து விவாதம் நடப்பது இயல்பான ஒன்று.

சிந்தனையாளரின் பாதுகாவலரும், மனையாளும் இந்த இயல்பான கலந்து உரையாடலில் கலந்து கொள்ளவில்லை.
அவர்களை பொறுத்த வரை இது நாள் தோறும் நடக்கும் கருத்து விவாதம். கற்றாரை கற்றார் காமுறுவர். பிரான்க் சின்ன பையன் அவனிடம் தனி அக்கறை கொண்டு அவர் விவாதிப்பார்.

நிமடங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. மகிழுந்தில் அந்த பெண்மணி தன் கடிகாரத்தை பார்த்துகொண்டு இருந்தாள்.
நிமிடங்கள் மெதுவாக நகர்ந்தன. படபடப்பு கண்ணிலும் நெஞ்சிலும் குடிகொண்டது.

சிவப்பு சூரியன் கண்ணடித்து விட்டு கரைக்குள் தன்னை மூல்கடித்துகொண்டு இருந்தான். மெக்ஸிகோவின் சமரச கொடி பறந்து கொண்டு இருந்தது.
அந்த பெண் நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.

அந்த சப்தம் கேட்டது.
"வெற்றி" நெஞ்சம் கத்தியது.

சிந்தனையாளரின் அறையில் ....

நேற்று வரை பற்றுகொண்டு யாருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பிரான்ச ஜாக்சன் கொடுத்த கட்டுரையை படிக்க ஆரம்பித்தார். பிரான்க் எழுந்து கொண்டான் - மரியாதை.

அவர் காகிதங்களை போராட்ட. அவனது கைக்குள் அந்த ஆயுதம் இறுக்கமானது.
பிரான்க் அந்த ஐஸ் மழை ஏறும்பொது ஐஸ் குத்தும் பண்ணிக்குத்தியை ஓங்கினான்.

பின்மண்டையில் போட்டு தாக்கினான்.

பாதுகாவலர்கள் ஓடி வந்தனர் பிடித்தனர். பிராங்கை அடித்தனர்.
டிரோட்ச்கி என்கிற அந்த சிந்தனையாளர் பின் மண்டையை பிடித்த படி சொன்னார்.
"அவனை அடிக்காதீர்கள். அவன் பேசட்டும்" - என்றார். கோபம் அவர் கண்ணை மறைக்கவில்லை.

அடுத்த நாள் அவர் இறந்து போனார். பிராங்கின் கதை பேசப்பட்டது. ரஷ்ய புரட்சி டிரோட்ச்கி கொல்லப்பட்டார். காலமாற்றத்தில் நிறையவே மாறிப்போய் இருந்தன. சமத்துவ மெக்ஸிகோ கை பிசைந்தது.

கொலையாளியின் உண்மை பெயர் ரமோன் மேற்கடர் என்று தெரியவந்தது. கொலை புரிந்தவர் ரஷ்ய புலனாய்வு பிரிவின் மனிதர்.
மகிழுந்தில் காத்து இருந்த பெண் ரமோனின் தாய்.


இந்த கொலையின் காரணங்கள்  பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.

தொடரும்

Comments

  1. விறுவிறுப்பாக செல்கிறது. தொடருங்கள்

    ReplyDelete
  2. இங்கும் பதிவு அழகு தமிழோடு தேடல்.

    ReplyDelete
  3. தகவல் பகிவிர்க்கு நன்றி Karthick

    ReplyDelete
  4. அடுத்து என்ன விரைவில் பதிவு போடுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்