Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ...

மிக பெரிய மலை உச்சி. கீழே விழுந்தால் சாம்பல் கூட மிஞ்சாது. பச்சை பசேல் என்று அந்த மலைக்கு பச்சை கம்பளி போர்த்திவிட்ட மாதிரி காடு.

கதிரவன்னின் கதிர் மலை உச்சியில் விழுந்து தண்ணீரில் விழும்போது வெள்ளியை காய்ச்சி உற்றியமாதிரி தண்ணீர் விழும். அருவி வீழும் இடத்தில் -- குருதி விழுந்தால். அதுவும் ஒரு ஆண் சிங்கம் கத்திகொண்டே விழுந்தால் ... இதயம் சுருங்கி விட்டு விரிய மறுக்கும். கண்கள் மூடுவதா   இல்லை பார்க்க நேர்ந்ததே என்றுதன்னையே சாடுவதா என்று நினைக்கும்.

அவன் அப்படி தான் அந்த 120  அடி உயரத்தில் இருந்து விழுந்தான்.

"சத்யா ..... " - விழுகிற போது என் பெயரை சொல்லிக்கொண்டே.

என்னை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது அவனை சல்லடை என    தோட்டாக்களால் துளைக்க. குண்டுகள் பாய அந்த வீரன் என் கண்களுக்கு முன்னால்
கம்பீரத்தோடு விழுந்தான்.

அலாரம் அடித்தது. கண்களை கசக்கிவிட்டு எழுந்தேன். எனது வீட்டில்தான் படுத்திருக்கிறேன். மணியை பார்த்தேன் - ஆறு. ஆறும் அருவியும் இனி என் வாழ்வின் நினைவலைகளில் கலந்துவிட்டவைகள்.

எழுந்து உட்கார்ந்தேன். என் படுக்கைக்கு பக்கத்தில் இருந்தது அந்த நாளேடு மேசையில். கூடவே காபி கப்பும் சாசரும்.

நாளேட்டை எடுத்தேன் - தலைப்பு செய்திகள், "கடத்தல்காரன் மாடசாமி வழக்கு பாராட்டு விழா" என்று இருந்த்தது.

"என்னங்க கோயிலுக்கு நேரம் ஆச்சு" - என் மனைவி பைரவி கத்தினாள். காதில் விழுந்தது.

குளியல் அறைக்குள் போனேன். பல் விளக்கினேன். குளிக்க வேண்டி வந்தது. ஷவரை திறந்தேன். நீர் பாய்ச்சி அடித்தது. அருவி மனுதுக்குள் வந்தது.
அந்த அருவியின் ஓசை நூறு யானைகள் சேர்ந்து பிளிவர்து போல இருக்கும். அவ்வளவு தண்ணீர் விழும்.

ஷவரின் தண்ணீர் எதோ நிறம் மாறுவது போல் இருந்தது எனக்கு. ஷவரை நிறுத்தினேன். கையில் இருந்த நீரை பார்த்தேன் சிவப்பாய் இருந்தது.

துண்டை எடுத்து துடைத்தேன். கண்ணாடியில் முகம் பார்த்தேன். என் மனைவி கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தாள் -
"நீர் சிவப்பாக இல்லை. அது உங்கள் கற்பனை"

தலையை வாரிக்கொண்டேன்.

அவள் கோயில் செல்ல தயாராகவே இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் கலையே இல்லை.

நாங்கள் கோயிலுக்கு போனோம்.

எங்களுக்காகவே ஒரு குருக்கள் காத்திருந்தார். குளக்கரையில் அமர்ந்தோம்.

"இப்படி உட்காருங்கோ. இதை கையில கட்டிகூங்கோ"
நானும் அவளும் அவர் சொன்னதை செய்தோம்.

"நான் சொல்லறத திருப்பி சொல்லுங்கோ"
மீண்டும் அலை அடித்ததும். அருவி விழுந்தது. அவனும் விழுந்தான்.

"சத்யா .... " -காததில் விழுந்தது அவனது குரல்.
"சார் ..." - குருக்கள் இடை மரித்தார்.
"ஸ்வாகா சொல்லுங்கோ " - குருக்கள் சொன்னார்.
"ஸ்வாகா" - சொன்னேன்

என் பெயர் சத்யமூர்த்தி. தமிழ் நாட்டின் காவல்துறையில் நானும் ஒருவன். மாடசாமியை என் தலைமையின் கீழ் இருந்த படைதான் சுட்டு கொன்றது. நான் அவன் சாகும்போது அங்கேதான் இருந்தேன்.

மாடசாமி தமிழ்நாட்டின் காவல்துறையின் தலைவலியாய் இருந்தவன். இன்று அவனை கொன்றதற்குதான் பாராட்டு விழா.

எங்கள் சடங்குகள் முடிந்தன. என் மாமனாரும் மாமியாரும் வந்திருந்தனர்.
"என்ன குருக்களே, எப்படி போச்சு ?" - மாமியார் கேட்டார்.
"எதுவும் மனசு ஒத்து செஞ்சமாதிரி தெரியல. பாவம் கலயனும்னா மனசு ஒத்து செய்யணும்" -சொல்லிவிட்டு என் மாமனார் கொடுத்து தட்சணையை வாங்கி விட்டுகிளம்பிவிட்டார்.

"மாப்பிள .... குருக்கள் ..." - என் அத்தை ஆரம்பித்தார்.

நான் எதுவும் கேட்காமல் நடந்தேன். இன்று நான் பாராட்டுவிழவிற்கு போகவில்லை. ஏன் தெரியுமா ...?

தொடரும்

Comments

  1. I am sure that the reason is special.... :-)

    ReplyDelete
  2. காவலர் தன் கடமையைத்தானே செய்தார்? அப்புறம் ஏன்?

    ReplyDelete
  3. இப்பதானே படிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க. போக போக தெரியும். தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  4. //மிக பெரிய மலை உச்சி. கீழே விழுந்தால் சாம்பல் கூட மிஞ்சாது. பச்சை பசேல் என்று அந்த மலைக்கு பச்சை கம்பளி போர்த்திவிட்ட மாதிரி காடு.//

    சாம்பல் கூட மிஞ்சாதா ? எரிந்து கொண்டே விழுந்தால் தான் அப்படிச் சொல்ல முடியும்,பொதுவாக எலும்புகள் கூடாத் தேறாது என்று தான் சொல்லுவார்கள்.

    தொடர்கதை நல்ல முயற்சி பாராட்டுகள் கார்த்திக்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்