Skip to main content

த நா வரலாறு: ஊமைத்துரை கட்டிய கோட்டை ?

வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள்.


இப்படி ஒரு வீரனையும் ஆளுமை திறன் படைத்தவனையும் நான் கண்டதில்லை - என்று வெள்ளை படை தளபதி ஒருவர் பதிவு செய்தது உள்ளார். ஊமைத்துரை ஒரு வெள்ளைய அதிகாரியை கைது செய்த போது -அவரது மனைவி வந்து கெஞ்சி மன்றாட ஊமை துரை மனம் இளகி அந்த தம்பதிகளுக்கு விருந்தினரை போல் வழி அனுப்பி வைத்ததாகவும் நான் ஒரு ஆவன படத்தில் பார்த்து உள்ளேன்.


தமிழ் மண் ஊமைத்துரையை ஒரு அழவுகேனும் பதிவு செய்தாலும். தமிழ் மண்ணில் ஊமைத்துரை தங்கிய கோட்டைகள் சில இன்னம் உயிர்ப்போடு இருந்தே ஆக வேண்டும்.

புதுக்கோட்டை பகுதியில் அறந்தங்கியும்  திருமயமும் கட்டபொம்மன் மற்றும் ஊமை துரையுடன் தொடர்பு உள்ள இடங்களே.  அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு இந்த உண்மை தெரியுமா என்று தெரிய வில்லை.

ஊமைத்துரை கட்டிய கோட்டை வெள்ளையர்களால் அழிக்க பட்டு இருக்கலாம் இல்லாவிட்டால் புதுக்கோட்டை  மன்னனுக்கும் பரிசாய் அளிக்கப்ட்டிருக்கலாம்.

அறந்தாங்கி பரிசாய் தந்த ஒன்று  என்று புதுக்கோட்டை  தொண்டைமான்களை பற்றி எழுதும் போது hollow  Crown  என்கிற ஆங்கில புத்தகம் பதிவு செய்கிறது.

திருமயம் கோட்டை ஊமைத்துறையால் கட்டபட்டிருக்கலாம் என்று சிலர் கருதுவதாக கேள்வி பட்டதுண்டு. இல்லை இங்கே ஊமைத்துரை தங்கினார்  - அதுவும் புதுகோட்டை மன்னரின் நட்பினால்  என்று கதை சொல்லபடுவதில் - கொஞ்சம் வரலாறு இடிப்பதாக  உணர்கிறேன்.
திருமயம் கோட்டை தற்போது தொல்லியல் துறையிடம் உள்ளது என்று உணர்கிறேன். அங்கே இன்னும் பீரங்கிகள்  செயல் படும் நிலையில் உள்ளது எனவும் ஒரு முறை இணையத்தில் படித்த ஞாபகம்.

ஊமைத்துரை அடுத்து தங்கியதாக பதிவு செய்யப்படும் இடம் - சிவகங்கை. சிவகங்கை அரண்மனை இன்றும் கம்பீரமாய் நிற்பதாகவும் - அதற்கு முன் வேலு நாச்சியின்  சிலை உள்ளதெனவும் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் ஊமைத்துரை தங்கினாரா ? இல்லை வேறு இடத்தில் தங்கினாரா ? நானே அந்த அரண்மனையை கடந்து சென்று உள்ளேன். ஒரு வரலாறு நிற்கிறது என்கிற எண்ணம் தமிழர்கள் பலருக்கு இல்லை.

அப்புறம் கண்ணகி தங்கிய இட பகுதியில்தான் தற்போதய மதுரை ஆட்சியர் அலுவலகம் உள்ளதாக ஒருவர் சொன்னார். காந்தி தங்கிய மதுரை இடம் ஒன்றில் மீனாக்ஷி பெண்கள் கல்லூரி இருக்கிறது என்று அங்கே பனி ஆற்றிய ஒருவர் சொன்னார்.

வரலாறுகள்  பதிவு செய்யப்படவேண்டும். அவை நிறையவே பாடம் சொல்லும். அலெக்ஸாண்டரின் கால் சுவட்டில் என்று ஒரு ஆவன படம் பல வருடங்களுக்கு முன் BBC  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

யுவான் சாங் அவர்களின் காலடி ஒட்டி சில வரலாற்று ஆய்வாளர்கள் பயணம் மேற்கொண்டனர். போதி தர்மரின் சீன பயணத்திற்கும் போகர் மற்றும் புலிபாணி சித்தர்கள் கதைக்கும்  ஒற்றுமை உள்ளதென்று ஒரு குழப்பம் கூட உள்ளதாம். போதி தர்மரின் பயணம் காஞ்சியில் ஆரம்பித்து சீனத்தில் முடிகிறது - இடையில் மலேசியாவில் அவர் சில நாட்களோ சில மணி நேரமோ தங்கி இறுக்கலாம். புத்தர் கூட தமிழ் நாடு வழியாக இலங்கை பயனித்திருக்கலாம். நேதாஜியின் INA பயணம் வந்த வழியாக உயிரோடு உள்ள INA  வீரர்கள் சிலர் அழைத்து ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டு அது இந்திய தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.

தமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளான். அவன் கால் சுவட்டில் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள் பயனிகின்றனரா  என்று தெரியவில்லை.

வரலாறு பயணிக்கும் - தொடரும்

Comments

  1. புதிய தகவல்கள், அங்கு உள்ளோருக்கு ஊமைத்துரை பற்றிய கதைகள் தெரியும்
    செவி வழிக் கதையாக என் நண்பர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில் - கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. வரலாறு பாதுகாக்கபடவேண்டும்.

    ReplyDelete
  3. சமீமத்தில் திருமயம் கோட்டைக்குச் சென்றிருந்தேன். நெகிழ்ச்சி, பெருமிதம்,சோகம்,வருத்தம்,ஆதங்கம் என கலையான உணர்வுகள்.. இன்று தமிழனுக்கு அவனது 5000 ஆண்டுகால வரலாற்றுத் தொடர்ச்சியும் தொல்பெருமையும் நினைவிலில்லை... அன்றாடப் பிழைப்பு மட்டுமே.. இருக்கவே இருக்கிறது தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சிகள்... ஹூம்!

    ReplyDelete
  4. நீங்கள் சொல்ல்வது மிகவும் உண்மை விந்தைமனிதன். சிவகங்கையிலும் இதே நிலையை பார்த்தேன். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. தமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளான். அவன் கால் சுவட்டில் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள் பயனிகின்றனரா என்று தெரியவில்லை.


    ..... கல்வெட்டுக்களையும் வரலாறையும் பாதுகாக்க வேண்டியது கடமை.

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சித்ரா - நாம் நம்முடைய கல்வெட்டுக்களை காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாகவே எ

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத