Skip to main content

தமிழ் நாட்டின் தள வரலாறு - I

இப்படி ஒன்றை எழுதலாம் என்று எனக்கு ஒரு ஆசை. முடிந்தவரை எழுதவும் முற்சிக்கிறேன். தமிழ் நாடு என்று ஒன்று ஆரம்ப காலத்தில் இல்லை.
தற்போதைய கர்நாடகம்தான் கிஷ்கிந்தை என்கிறார் ஒரு நண்பர். இந்த கிஷ்கிந்தையை சார்ந்தவர்களே குரங்குகள் என்று ராமாயணத்தில் சொல்லபட்டிருதாக அவர் சொல்வதற்கு பதில் எங்கள் மண்ணின் மைந்தர் அனுமன் என்றார்.

அனுமநிடத்தில் சீதை உள்ள இலங்கை எங்கு உள்ளது என்று ராமன் கேட்க அது சேர நாடு, பாண்டிய நாடு சோழ நாடு எல்லாம் கடந்தால் ஒரு கடல் வரும் அதை தாண்டினால் இலங்கை வரும் என்று அன்மான் சொல்கிறார்.

இது தான் தமிழ் நாட்டை பற்றி ராமாயணம் சொல்லும் செய்தி. சரி சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் என்ற பெயர்கள் எப்படி உறவாகி இருக்கும் ? என்று ஆய்வு செய்வது அவசிய படலாம். ஆனால் அவை நம் ஆய்வின் நோக்கம் அல்ல.

நான் முதலில் தமிழ் மண்ணின் எல்லைகள் என்று விடுதலைக்கு முந்தய இந்தியாவில் பாரதி சொன்ன வேங்கடத்தையும் குமாரியையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். தவறுகளை சுட்டி காட்டுங்கள். திருத்துங்கள்.

விமர்சனங்கள் வரவேற்கப்படும்!

திருபதி என்கிற தற்போதய நகரத்தின் ஆரம்ப காலத்திய பெயர் திருப்தி இல்லை. அது வேங்கடம் என்று அழைக்க பட்டு உள்ளது. வேங்கடம் என்பது ஒரு காலத்தில் புத்த நிலையமாக இருந்திருக்க வாய்புகள் உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி அங்கு புத்தம் இருந்தது. இன்றும் ஆந்திரத்தில் வேங்கடம் பள்ளி என்று ஒரு தளம் உண்டு - பள்ளி என்பது புத்த சமண சமயத்தவர்கள்தங்கும் பகுதி.

இந்த பகுதியின் கடவுள் வேங்கட ஈஸ்வரன் ஆதாவது வேங்கடத்தின் கடவுள். வேங்கடம் ஒரு மலை பகுதி. வேங்கடத்தின் இறைவன் எப்படி இங்கு கோயில் கொண்டான் என்பதற்கு பெரிய ஆதாரம் இல்லாவிட்டாலும். இந்த இறைவனின் கோயில் பலராலும் பராமரிக்கப்பட்டு வந்து உள்ளது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வட வேங்கடம் என்று கூறுகின்றன. ஒரு வேலை தென் வேங்கடம் உள்ளதா என்று தெரியவில்லை.
வழக்கமாகவே வட காசி என்று ஒன்று இருந்தால் தென் காசி என்று ஒன்று இருக்கும். எனவே தென் வேங்கடத்தை தேடுவது நலம்.

பிறகு மலைக்கு இறைவனின் பெயர் வந்தது அதாவது திருவின் கணவர் திருபதி என்று ஆயிற்று என்றாலும் திரு அம்பதி ஆதாவது செல்வத்தின் தளம் என்பது கூட மருவி திருபதி ஆகி இருக்கலாம். மதுரையம்பதி பழநியம்பதி என்பது போல.

இந்த கடவுள் அணிகலன் எதுவும் அணியதவாரகவே காட்சி தந்தாகவும் பின்னரே இவர் செல்வர் ஆனதாகவும் சொல்பவர்கள் உண்டு. பல்லவ குடைவரை குகை கோயில் வடிவமைப்பில் இது கட்டப்பட்டு உள்ளது.

இது தமிழ் நாட்டின் வட எல்லை. இனி மற்ற ஊர்களை பற்றி பார்ப்போம். உங்கள் கருத்துக்களை கூறவும்.

Comments

  1. அண்ணே, நீங்க நம்ம தல அஜித்த பத்தி தானே எழுதப் போறிங்க

    ReplyDelete
  2. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் அதனுடைய வரலாற்றுத் தேடல் அவசியம். அந்தவகையில் தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    வேங்கடமும் காளகத்தியும்தான் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்திருக்கவேண்டும். பெரும்பான்மை தமிழனின் பொறுப்பற்றத்தனத்தால் இவை பறிபோனது.

    திருப்பதியில் இருக்கும் மூலவர் திருமால் அல்ல என்றும் அது முருகன் என்றும் கருத்து நிலவுகிறது. வைணவர்களால் முருகனின் திருவுருவம் ஒப்பனைகள் மூலம் பெருமாளாக காட்டப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். ஒப்பனையில்லாத திருப்பதி மூலவரை பார்க்க பொதுமக்களுக்கு இதுவரை அனுமதியில்லை என்பது மேலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் நான் கேள்விப்பட்ட செய்தி வேறுமாதிரி உள்ளது. அதாவது - திருப்தியில் இருப்பது புத்தராம்.
    ஆதாரம் பற்றி தெரியவில்லை. ஆனால் பெருமாளை ஆபரணங்கள் இல்லாமல் வியாழன் காலை பார்க்கலாம் என்று கேள்வி பட்டேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்