Skip to main content

த நா தல வரலாறு: சர்ச்சில் அறிந்த திருச்சி

இந்தியாவுக்கு பல பெருமைகள் உண்டு. நான் அயல் நாடு ஒன்றில்  ஒரு விமான சேவை நிறுவனத்தில் பயணிக்கும் போது பம்பாய் சரக்கு என்று ஒன்று மெனு அட்டையில் இருந்தது. இது உலக புகழ் பெற்ற சரக்கு இதை அருந்துவது மரியாதை - கவுரவம் என்கிற மாதிரி எழுதி இருந்தது.

அப்புறம் நண்பர் ஒருவர் சொன்னார் அந்த மாதிரி ஒரு போதை பெருமை தமிழ் மண்ணுக்கும் உண்டு என்று. அந்த பெருமையின் பெயர் திருச்சி புகை இலை. சர்ச்சிலுக்கு மிக பிடிக்குமாம். அது என்ன திருச்சி போகயிலை என்று விசாரித்த போது அது திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புகை இலையாம். அனால் அது திண்டுக்கலில் பயிரிட பட்டதாம்.

திருச்சி மண் பலதருணங்களில் பலர் கைகளில் இருந்து உள்ளது. சோழர் தலைநகரம் என்கிற பெருமையும் அதற்க்கு உண்டு. ஆனால் அது ஒரு வளமான இலக்காக பல போர்களிலும் இருந்து உள்ளது. கடைசி போரை கர்நாடக போர் என்று அழைகிறார்கள். அது என்ன கர்நாடக போர் என்று கேட்டால். கருநாடக என்றால் தமிழில் பழைய நாடு என்று பொருள். கருநாகம் என்பதற்கு கூட அப்படிதான் பெயராம்.

முதலில் காவிரியை ஒட்டி நாடுதான் பழமை நாடு என்கிற கருத்தில் இது உருகொண்டிருகலாம்.

ராபர்ட் கிளைவ் மற்றும் டுப்லே என்கிற இரண்டு பெரிய பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் போர் படை தளபதிகளுகளுக்கு நடந்த நாடு பிடிக்கும் போட்டியில் திருச்சி மாட்டிகொண்டது.

ராபர்ட் கிளைவ் திருவரங்கம் மற்றும் சமயபுரம் எதையும் தொடக்கூடாது என்று சொல்லி விட்டாராம். சந்தா சாஹிப் என்கிற மன்னனின் புத்திசாலித்தனம் அற்ற போர் முறையில் திருச்சி விழுந்தது. இந்த சந்தா சாஹிப் ஒன்று தமிழர் அல்ல. இவர் மராட்டியர். மராட்டியர்கள் தஞ்சையையும் திருச்சியையும் ஆண்டனர்.

டுப்லே அவர்களின் மொழிபெயர்ப்பாளர் ஆக இருந்த அனந்த ரங்க பிள்ளை - திருவரங்கம் இந்த போரில் அடைந்த பாதிப்பை சொல்கிறார். அனந்த ரங்க பிள்ளையின் நாட்குறிப்பு மிகுந்த புகழ் பெற்ற ஒன்று. அதில் இந்த கருநாடக போர் பற்றி சொல்ல பட்டு உள்ளது.

ஆனந்த ரங்க பிள்ளை அவர்களை து-பாஷி என்று அழைக்கின்றனர். அதாவது இரு மொழி தெரிந்தவர். சந்தா சாஹிப் குறைவான படை வீரர்களை விட்டுவிட்டு தன் நண்பனை பிரிட்டிஷ் போரில் இருந்து காக்க போய் திருச்சியை ராபர்ட் கிளைவின் முட்ட்ருகையில் விழ வழி செய்த்துவிட்டாராம்.

புத்திசாளிதனமற்ற போர் முறையால் திருச்சி விழுந்ததாக சொல்வது உண்டு. திருச்சிராப்பள்ளி என்கிற பெயரை கேட்கிறபோதே அதன் புத்த சமண தொடர்பும் தெரியும் - பள்ளி என்பது துறவிகள் தங்கும் இடம். சர்வபள்ளி வேங்கடபள்ளி என்று பல தென் இந்தியாவில் உண்டு. தமிழ் மண்ணில் உள்ளது திருச்சிராப்பள்ளி.

உறையூர் என்பதே சோழர்களின் தலைநகரம் அதன் புறநகரை ஒரு வேலை திருச்சி இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலை வேறு.

சரி சர்ச்சிலுக்கு வருவோம் - அவர் ஒரு மென்மையான சுருட்டுக்கு தேர்ந்தெடுத்த புகை இலை திருச்சி புகை இலை. அந்த புகை இலை சென்னை வழியாக இரண்டாம் உலக போரின் தருணத்தில் கூட லண்டனை அடைந்ததாம். அவருக்கு அதன் மீது ஒரு காதல் இருந்ததாம்.

நீங்க தம் போடுற ஆளா - திருச்சி தம் கிடைக்குமான்னு பாருங்க.

தொடரும்

Comments

  1. நல்ல தகவல் கார்த்திக் .. இப்படி வித்தியாசமான யாருக்கும் அதிகம் தெரியாத தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்,
    ஒரு புத்தகமாக வெளியிடலாம் ....

    ReplyDelete
  2. ுதலில் காவிரியை ஒட்டி நாடுதான் பழமை நாடு என்கிற கருத்தில் இது உருகொண்டிருகலாம்.


    ..... பழைய நாட்டை பற்றிய புதிய தகவல்...... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. நன்றி @சித்ரா! நன்றி @செந்தில் ! உங்கள் கருத்துக்கு. எனக்கு கொஞ்சம் தான் தெரியும். பார்ப்போம் எவளவு எழதலாம் என்று.

    ReplyDelete
  4. உங்கள் எழுத்து கட்டி போடுது நண்பரே,

    உறையூர் சுருட்டு- ஷெர்லாக் ஹோம்ஸின்(Arthur conan doyle) பல கதைகளில் , திருச்ணாபோலி சிகார் என்று வரும் அளவுக்கு பிரபளம் அது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...