Skip to main content

த நா தல வரலாறு - கம்பன் இறந்த ஊர்

மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிற்றூரின் பெயர் நாடரசன்கோட்டை.
நாடரசன்கோட்டை என்கிற ஊரில் தான் கம்பர் தன் கடைசி நாட்களை கழித்தார்.

சோழ மன்னனிடம் பிணக்கம் ஏற்பட்ட பின்னும் தன் மகனின் மரணத்திற்கு பின்னும் கம்பன் தன் உறவினர்கள் வாழும் ஊரான நாட்டரசன்கோட்டைக்கு வந்தாராம்.

நாடரசன்கோட்டையின் மக்களின் தமிழ் அறிவு கண்டு - தங்கினால் இங்குதான் தங்குவேன் என்று அவர் முடிவு எடுத்ததாகவும் கதை உண்டு.நாட்டரசன்கோட்டை போன்ற இடங்களில் கம்பன் காலத்தில் சோறு விற்கும் பழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் கம்பன் அறிந்தவரையில் சில இடங்களில் அது இருந்திருக்கலாம்.

தன்மான தமிழனாய் விளங்கிய கம்பன் - யாரிடமும் இலவசமாய் உணவு வாங்கி உன்ன மறுத்து நாட்டரசன் கோட்டை வந்த தருணத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் - "எங்கு சோறு விக்கும் ?" -என்று கேட்டாராம்.
"தொண்டயில்தான் விக்கும்" - என்றான் ஒரு சிறுவன் அதற்கு. அன்றில் இருந்து கம்பன் அங்கேயே தங்கி விட்டானாம்.

கம்பனின் உறவினர்கள் நாட்டரசன் கோட்டை வாழும் வணிகர்களிடம் வேலை செய்திருக்க கூடும் எனவே அங்கு அவர் தங்கி வாழ முடிவு செய்திருக்கலாம் என்று செய்திகள் உண்டு.

இன்று கம்பன் நினைவு இடம் கம்பன் கோவில் என்று அழைக்கப்பட்டு பாதுகாக்க படுகிறது. கம்பன் விழாவின் நினைவு நாள் அங்குதான் நடக்கும்.

முடிந்தால் இந்த தமிழ் திருதளதிருக்கு சென்று வாருங்கள். கம்பன் கோவிலுக்கு சென்று வாருங்கள். இன்றும் கம்பன் நினைவு மண்ணை பாலில் கலந்து குடித்தால் அறிவு பெருகும் என்று நம்பிக்கை உள்ளது.

பயணம் செய்ய சிறந்த நாட்கள்: கம்பன் விழா நடைபெறும் நாட்கள்.

கம்பன் புகழ் வாழ்க.

தொடரும்.

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்