Skip to main content

த நா தள வரலாறு: குங் ப்ஹு தந்த காங்-ஷி

இப்படி ஒரு ஊர் தமிழ் மண்ணில் இருப்பது உங்களுக்கு தெரியுமா ? அது என்னங்க காஞ்சிதானே தெரியும் இது என்ன காங்-ஷி என்று யாரவது கேட்டால் அவர்களுக்கான பதில் - ரெண்டும் ஒன்றுதான்.

நமக்கு காஞ்சியை பல்லவ மண்ணின் தலைநகராய் தெரியும். உங்களுக்கு தெரியுமா சீனர்கள் தங்கள் வரலாற்று புத்தகங்களில் நம் காஞ்சியை பற்றி எழுதி உள்ளது.
உலகம் பெருமையோடு சொல்லும் சீனர்களின் குங் ப்ஹு என்கிற தற்காப்பு கலையின் தந்தையின் தாயகம் காஞ்சி. குங் ப்ஹு என்கிற இந்த அறிய கலை தமிழர் ஒருவரால் உருவாக்க பட்டது. அவர் பல்லவ குடும்பத்தை சேர்ந்தவர். அவர் பெயர் போதி தர்மர். போதி தர்மர் என்கிற புத்த துறவி காஞ்சி மண்ணில் இருந்து புறப்பட்டு சீனம் அடைந்த பின் சீனர்களுக்கு கற்று தந்த தற் காப்பு கலைதான் குங் ப்ஹு. குங் ப்ஹுவின் தாய் என்று பல தமிழ் கலைகளை சொல்லலாம். அவை - வர்மம், சிலம்பம் மற்றும் கலரிபட்டு. இன்று கலரி மலையாள மண்ணில் உள்ளது. தமிழ் மண்ணில் சிலம்பம் எதோ உயிரோடு உள்ளது. ஆனால் குங் ப்ஹு உலகம் அறிந்த கலையாக உள்ளது.

தமிழனின் பெருமை  குங் ப்ஹு என்று சொல்ல முடியாது - அது சீனர்களின் பெருந்தன்மை என்று தான் சொல்ல வேண்டும் - அவர்கள் அதை இன்றும் காத்து வருகின்றனர்.

காஞ்சிக்கு போனால் - போதி தர்மர் எந்த இடத்தில் பிறந்திருப்பார்- எங்கே புத்தம் பற்றியிருப்பார் என்றும் கேளுங்கள். நம் வரலாற்றை நாம் தான் தேடவேண்டும். தேடுங்கள்நண்பர்களே.

தொடரும் -

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...