Skip to main content

த நா வரலாறு: சிங்கம் வைத்த லிங்கம் ?

சில தருணங்களில் அந்த பக்கம் சென்று வந்து உள்ளேன். அதற்கு சமணர் மலை என்று பெயர். மதுரை மாநகரின் புறநகர் பகுதி. அந்த பகுதியை ஒட்டி ஒரு கல்லூரி ஒன்று தற்போது உள்ளது.

சமணர்கள் நம் மண்ணில் ஆழமாய் கால் பத்திது இருந்ததன் வெளிப்பாடு அந்த மலை. மக்களோடு வாழாமல் இந்த சமண துறவிகள் வாழ்ந்தது இந்த மலையில். இவர்கள் ஆடை இன்றி வாழ்ந்தமையால் மக்களோடு வாழ்வது அவளவு வசதி படவில்லை. இந்த மலைக்கு அம்மணர் மலை என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.


மதுரையை ஒட்டி வேறு திசையில் இரண்டு குகை கோயில்கள் உண்டு. அவற்றின் பெயர்கள் - உதயகிரி மற்றும் அஸ்தகிரி. ஆதாவது காலையில் வணங்க  ஒரு கோயில் மாலையில் வணங்க ஒரு கோயில். தமிழில் பெயரிட்டால் கதிரவன் எழும் மலை மற்றும் கதிரவன் விழும் மலை. இந்த கோயில்கள் இன்று சிவன்கோயில்களாக  காட்சி தந்தாலும் இவை சமண கோயில்களோ என்று கருதப்படுகின்றன.

பாண்டிய மன்னர்கள் இந்த அஸ்த்தகிரியில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோயில்கள் சமண கோயில்களாக இருந்து பின்னர் சிவன் கோயில் ஆக மாற்றம் பெற்றதாய் சொல்ல்பவர்கள் இன்றும் உண்டு.

இந்த கோயில்கள் பாதி கட்டி முடிக்கப்பட்டவையாகவே  தெரிகிறது. பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடந்த போர் ஒன்றின் இடையில் இந்த கோயில்கள் கட்ட பட்டிருக்கலாம் என்பது கணிப்பு.

இந்த கோயில்களுக்கு அருகில் சமணர் படுக்கை என்று ஒன்று உள்ளது. இது பள்ளி என்பதின் வேறு பெயராக கருதபடுகிறது.

சிவன் லிங்க வடிவத்தில் வேறு வேறு  பெயர்கள் கொண்டு அதுவும் பால் வேற்றுமை கொண்டு விளங்கியதாய் சொல்கிறார்கள். கல்லில் கூட ஆண் கல் பெண் கல் என்று உள்ளதாம். இந்த கல்லில் இந்த சிலைதான் செதுக்க வேண்டும் என்று விதிமுறைகள் உண்டாம்.

சமணர்களின் திருத்தலங்களில் ஒன்றாய் போற்றப்படும் சரவணா பேல கோல என்கிற திருத்தலத்தில் திருவள்ளுவருக்கு சிலைகள் உண்டு என்று கேள்விப்பட்டு உள்ளேன். இந்த தலம் தற்போது கன்னட மாநிலத்தில் உண்டு.
இங்கே லிங்கம் வைத்தது சிங்கம் இல்லை ( பல்லவர்கள் ) இல்லை மீன் மாந்தர்களே என்று சொல்லப்படுகிறது.

புத்த மதத்தின் மிக பெரிய குரு மாந்தர்கள் என்று போற்றபடுகிறவர்கள் தமிழர்கள் என்பதும் சிலர் பல்லவ வழி வந்தவர்கள் என்பதும் சீன ஜப்பானியர்களின் கணிப்பு.

தொடரும்

Comments

  1. பகிர்வுக்கு நன்றி. Good!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி சித்ரா - உங்கள் கருதும் ஆதரவும் ஊக்கம் தருகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்