Skip to main content

பண்பலையும் தமிழ் நிலையும்

.
சென்னையில் இருக்கும் தருணங்களில் நான் கேட்கும் எந்த பண்பலையும் தமிழ் பேசுவதில்லை. தமிழ் மாதிரி ஏதோ பேசுகிறார்கள்.

" Welcome Back " , " Stay  tuned ", "Break " , " None  other  then " - இதெல்லாம் தெரிய வேண்டும் தமிழ் ஊடகம் எதுவும் பார்க்கவோ / கேட்கவோ.

அதிலும் சிலர் பேசும் வேகமான ஆங்கிலத்தில் தமிழ் திணறுகிறது. விட்டுதொலைடா அப்படின்னு கெஞ்சுது தமிழ்.

ஆங்கில வார்த்தைகள் நம்மிடம் நீக்கமற நிலைத்து விட்டது எனபதில் நான் வேறுபடவில்லை. ஆனால் நம் பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் இந்த வானொலிகளில் புழங்குகிறது.

பண்பலை எங்கள் ஊரில் கேட்டவன் என்கிற நிலையில் சென்னை வானொலி பணபலைகள் எனக்கு கொஞ்சம் ஆச்சிரியம் தருவது. எங்க ஊரில் பண்பலை கேட்டு இப்போது வருடங்கள் ஓடிவிட்டது. இணையத்தில் சென்னை பண்பலை வானொலிகள் வரும்.

சரி! நிகழ்ச்சி தொகுப்பாளர்தான் வேற்று மொழிக்காரரோ என்று நினைத்தால், பேசும் நேயர்களும் - ஏதோ எலிசபெத் ராணி வீட்டு அண்டை வீட்டுக்காரன் மாதிரிதான் பேசுகிறார்கள்.

நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை அமெரிக்காவிலோ ஆங்கில நாட்டில் இருக்கிறோமோ என்று நினைக்க வைக்கிறது.

தமிழ் பட நாயகிகள் தமிழர்களாக இருப்பதில்லை. அதே மாதிரி நிகழ்ச்சி தொகுபாளினிகள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊர் பண்பலை - கோடை பண்பலை. அது இன்னும் அப்படியேதானே இருக்கு?

நீங்கள் தமிழ் பண்பலைகளில் அதிகம் கேட்கும் ஆங்கில வார்த்தை என்ன என்று பின்னூட்டத்தில் சொல்லவும்.

Comments

  1. அரைவாசி ஆங்கிலம் தான்.. சொன்னால் போய்க்கொண்டே இருக்கும்.. நாம் வழக்கமாக பேச்சு வழக்கில் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகள் வருவதில் தவறில்லை. வலிய உபயோகிக்கும் போது தான் பிரச்சனை..

    ReplyDelete
  2. இங்கு நம்மவர்கள் வானொலி நடத்துகிறார்கள் முழுத்தமிழில் பேசி.புலத்தில் வளரும் நம் குழந்தைகளுக்கு ஏதுவாக இருக்கிறது.ஓரளவு அதிஸ்டம் செய்தவர்கள் நாங்கள்.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வதே உண்மை பிரசன்னா.
    நீங்கள் கொடுத்துவைத்தவர் ஹேமா.

    ReplyDelete
  4. //தமிழ் பட நாயகிகள் தமிழர்களாக இருப்பதில்லை//

    எனக்கு நமிதா வின் "மச்சா " தமிழ் தான் பிடிக்கும் .....ம் ம் ம் ம் ம்

    ReplyDelete
  5. டெடிகேட் செய்றேன்

    ஒரே ஹேப்பியா இருந்துச்சு

    அட சர்ப்ரைஸ் நீங்களா

    ஆல் வ்யூவர்ஸ்

    நூறு வார்த்தைகளாவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    தொடக்கத்தில் கோபமாக இருந்தது. இப்ப இந்த நாதாரித்தனத்தை இதற்குப் பின்னால்உள்ள வணிக லாபத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்