Skip to main content

உ த ப: அணிவகுப்பில் .....

அந்த வீரன் அந்த செய்தியோடு வந்து நின்றான்.
"என்னோடு அணிவகுப்பில் வர இருந்த  மூணு பேருக்கும்  உடல் நலமில்லை"
 "என்ன சொல்கிறாய் ?" - தளபதி கேள்வி கேட்டார்
"திடீர் என்று உடல் நலமின்மை"
"மூவருக்குமா ?"

வீரன் தலையை இடமும் புறமும் ஆட்டினான்.
நெற்றியில் கை வைத்து அமர்ந்தார் தளபதி.

"கவலை வேண்டாம்" - வீரன் மீண்டும் பேசினான்
"அவர்களுக்கு பதிலாக மூணு பேரு உள்ளனர்" - மீண்டும் வீரன்

"நல்லது அவர்களை பயன்படுத்திகொள்"
தளபதி சொல்லி விட்டு நகர்ந்தார்.

வீரனும் ஒரு தளபதிதான்.

அந்த நாள் வந்தது. படை அணிவகுப்பு திருநாள். அதிபருக்கு முன்னால்.

அதிபர் வந்தார் தன்னோடு இருந்த படை தலைவர்களுடன் பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தார். அணி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது.
விமானங்கள் வானத்தில் வேடிக்கை காட்டின. வான மேகங்கள் வண்ணக்கோலம் பூண்டன.

அதிபரின் முகத்தில் புன்னகை. அவர் நாட்டின் படை திறமை அவருக்கு முன்னால் தன்னை வெளிக்காடிகொண்டு இருந்தது.

அந்த பிரங்கி வண்டி பயணித்துக்கொண்டு வந்தது. அந்த வீரன் வணக்கம் வைத்தான். அதிபரை நோக்கி நடந்தான்.
அவர் முதலில் புன்னகைத்தார். வீரனும்.

பின்னர் வீரன் அதிபரை நெருங்கினான்.

வீரன் குண்டுவீசும் கருவி மூலம் குண்டு வீசினான். இரண்டு க்ராநிடே குண்டுகள். மீண்டும் தாக்குதல்.
பதிந்து கொண்டிருந்த ஊடகங்கள் உள்ளே இது பதிவாகி கொண்டு இருந்தது,.

எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அரச படை அணிவகுப்பில் சுட்டு கொல்லப்பட்டார். சுட்ட வீரனின்  தளபதியின் பெயர்   காலித்  இஸ்லம்புஇல்.


தொடரும்

Comments

  1. ஏன் கொன்றான்..... இது எப்போ நடந்தது....
    படிக்கவே வியப்பா இருக்கு தொடருங்க.

    ReplyDelete
  2. தலைவரே இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ..

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ..

    ReplyDelete
  4. கார்திக் கொஞ்சம் விரிவாக எழுதவும். விறுவிறுப்பாக உள்ளது

    ReplyDelete
  5. அரசியல்,ராஜ்ஜியம் என்றிருந்தால்
    அங்கு வஞ்சகரும் இருப்பார்கள் போல !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.