Skip to main content

உன்னில் எது அழகு?

அனிச்ச மலர் அழகா ? - நீ
அணிந்த மலர் அழகா ?

குனிந்த மயிர் அழகா ? - இல்லை
நிமிர்ந்த மார் பழகா ?

பணிந்த சடை அழகா ? - நீ
பகன்ற சொல் அழகா ?

தனித்த தமிழ் அழகா ? - உன்
பவள இதழ் அழகா ?

கனிந்த மொழி அழகா ? - இல்லை
காந்த விழி அழகா ?

நினைத்த நெஞ்  அழகா ? - இன்றும்
அணைக்கும் கரம் அழகா ?

உன்னில் எது அழகு ? - என்றேன்
என்னில் நீ அழகு என்றாய்.

Comments

  1. கடைசி இரண்டு வரிகளில் கவிதை முழு அழகு பெற்றது...

    ReplyDelete
  2. இந்த பதிவில் எல்லாம் அழகு...

    ReplyDelete
  3. நன்றி
    @கே.ஆர்.பி.செந்தில்
    @சௌந்தர்
    @தனி காட்டு ராஜா

    ReplyDelete
  4. அவளுக்கு நீங்கள் அழகு.
    உங்களுக்கு அவள் அழகு !

    ReplyDelete
  5. இந்த கவிதையில் எந்த வரி அழகு.... ம்ம் மொத்தமும் அழகு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அத்தனை வரிகளும்
    சித்திர அழகு...!!

    வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.