Skip to main content

உ த ப : மவுண்ட் பேட்டன் பிரபு

Classiebawn

நீர் சலசலத்தது.  பெரும் இரைச்சலுடன் அந்த படகு தகர்ந்தது.அந்த படகு சிதறி இருந்தது.

ஓடி வந்த காபற்றுனர்கள் - அவரை நீரில் இருந்து எடுத்தனர். உயிர் இருந்தது. கால்கள் சிதறி இருந்தன.
கடைசி மூச்சுகளை கொடுத்து வாங்கிக்கொண்டு இருந்தார் அவர்.

லார்ட் மவுண்ட் பேட்டன் மரணத்தை சில நிமிடங்களில் தழுவினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ஆட்சி தலைவர், அரச குடும்பத்தின் உறுப்பினர், பர்மாவிர்கான ஏர்ள் ( Earl ) என்கிற பொறுப்பை வகித்த ஆங்கில ஆட்சி முகம், இராண்டாம் உலக யுத்தத்தில் கூட்டு படைகளின் கடற்படை தலைவர், அதிரடி படைவீரர்களின் பயன்பாட்டை முன்னிறுத்திய ஆங்கில வீரர்  , மரபு சாரா போர் முறைகளையும் பயன்படுத்த எத்தனித்த தலைவர் இறந்து கிடந்தான்.

குற்று உயிராய் கிடந்த அவரது பேரன் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான்.

ஐரிஷ் பகுதியான இந்த ச்லிகோ பகுதிக்கு வந்த மவுண்ட் பேட்டன் கொல்லப்பட வாய்ப்புகள் அதிகம் என்கிற எச்சரிக்கை ஏற்கனவே இருந்தது. ஐரிஷ் நிலத்தில் பிரிட்டிஷ் அரசு தனதாக்கி ஆக்கிரமித்து  கொண்டு வருவதாக வட மற்றும் அயர்லாந்து மண்ணில் எண்ணம் இருந்தது.


டீப்பே என்கிற தவறான போர் சோதனையில்  பல உயிர்கள் போக காரணமானவர் என்கிற குற்றச்சாட்டு   உடையவர் ( இது கனடா தொடர்பான விடயம் ) மட்டும் இன்றிஅயர்லாந்து தொடர்பான விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆளுமை முகங்களுள் ஒருவராக இருந்தவர்.
அயர்லாந்து குடியரசு படையின் கோபத்திற்கு உரியவராக இருந்தார்.

சில மணித்துளிகளில் முள்ளக்ஹ்மோரே சாலைகளில் அந்த கார் படுவேகமாக சென்று கொண்டு இருந்தது. போக்குவரத்து காவலருக்கு முலையில் எச்சரிக்கை மணி அடிக்க. அந்த கார் வழிமறித்து நிறுத்தப்பட்டது.

அவர்  ஒரு அயர்லாந்துகாரர் . காருக்குள் இருந்து இறக்கவிடப்பட்டார். வெளியில் வந்தவர், உடலில் நைட்ரோ கிளிசரின் துணுக்குகள் இருந்தன, கொஞ்சம் பச்சை வண்ணம் ஒட்டி இருந்தது. படகில் இருந்த அதே வண்ணப்பூச்சின்  எச்சங்கள்.

விசாரணை உடனடியாக தொடங்கியது. அந்த மனிதரின் பெயர் மக் மோகன். அவர் மவுண்ட் பேட்டனின் கொலையாளி.

கரை ஓரம் இருந்து தூர கட்டுபாட்டை ( Remote Control ) கொண்டு மவுண்ட் பேட்டன் கொள்ளப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பல வருட சிறை வாழ்விற்கு பின் புனித வெள்ளி உடன்படிக்கை என்கிற உடன்படிக்கையில் பிரிட்டிஷ் அரசு மக் மோகனை விடுவித்தது.

புனித வெள்ளி உடன்படிக்கை என்றால் என்ன ? டீப்பே சோதனை ( The Dieppe Raid ), ஏர்ள் என்பவை பற்றி எல்லாம் விருப்பம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளவும்.

Classiebawn  என்கிற கோட்டை இல்லத்தில்தான் மவுண்ட் பேட்டன் தங்கி இருந்தார். அந்த இல்லம் இன்றும் உள்ளது.

அடுத்த பதிவில் வேறு ஒரு தலைவரின் கடைசி தருணங்களை பற்றி பதிவிடுகிறேன்.

தொடரும்

Comments

  1. சுவாரஸ்யமான தகவல்.. பேட்டனை அடுத்து நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க.... வித்தியாசமான டாபிக், ரொம்ப நல்லா இருக்குதுங்க... தொடர்ந்து இந்த மாதிரி தலைப்பில் எழுதுங்க...

    ReplyDelete
  3. அருமை கார்த்திக். சுவாரசியமாக செல்கிறது. தொடருங்கள். இண்டிலியில் இணைத்தால் பலருக்கு சென்று சேரும்.

    ReplyDelete
  4. நன்றி
    @கே ஆர் பி செந்தில்,
    @சித்ரா,
    @அருண் பிரசாத் - இணைக்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  5. Surprising informations , keep it going

    ReplyDelete
  6. தேடல் வித்தியாசமா இருக்கு சி.கார்த்திக்.வாசிக்க வாசிக்க இன்னும் ஆவல் அடுத்த பதிவுக்காய்.நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்