Skip to main content

தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு சிறுவி

நீண்ட நாட்களாக இந்த தேடல் என்னிடம் உள்ளது. என்னுடைய நண்பர்கள் பலர் "உங்கள் வலைப்பூ முகவரியை தாருங்கள்" - என்னும் தருணத்தில் "தரலாம்தான் ஆனால் என் வலைப்பூ தமிழில் இருக்கிறது" என்றவுடன். "நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது இல்லையா ?"
என்கிற கேள்வி வந்து விழும்.

"எழுதினேன். ஆனால் இப்போது இல்லை " - என்பது உண்டு.

அவர்கள் என் எழுத்துக்களை படிக்க விரும்புகிறார்கள். மற்ற மொழி நண்பர்கள் அவர்கள்.

இந்தி மொழியில் எழுதினால் கூகிள் ஆண்டவர் வரம் தருகிறார் - மொழி பெயர்த்துக்கொள் என்று. அதற்கு ஒரு சிறுவி ( widget ) அல்லது ஒரு கருவி ( tool ) இருக்கு. தமிழில் இல்லை.

இந்தியாவின் ஒரே வாழும் செம்மொழி நொண்டுகிறது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் சிருவியோ கருவியோ வர நாம் செய்ய என்ன வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே சில பல்கலை கழகங்கள் முயன்று உள்ளன. ஆனால் இனைய வெளியில் பயன்பாட்டிற்கு என்று ஒன்றும் இல்லை.

பல நண்பர்களின் தமிழில் எழுத்தப்பட்ட கருத்துக்கள் மனித முயற்சி இன்றி வேற்று மொழி நண்பர்களுக்கு புரிய வைக்கும் சாத்தியம் இல்லை என்றே உணர்கிறேன்.

தமிழ் மொழி பெயர்ப்பு கருவிக்கு தமிழக அரசோ, இந்திய அரசோ, சிங்கை போன்ற அரசுகளோ, தமிழ் ஆர்வலர்களோ, தமிழ் கணிப்பொறி நண்பர்களோ இதுவரை செய்தவை எதுவும் உள்ளனவா என்று தெரியவில்லை.

இணைத்தில் இது தேவை என்று நான் உணர்கிறேன். தமிழில் செய்தி திரட்டிகள், வலைப்பூ திரட்டிகள் என நிறைய படிக்க வழி அமைத்தபின்னும் தமிழ் வேற்று மொழியாளர்களை சென்றடைய வழி வரவேண்டும்.

தமிழ் கல்வி மற்ற மொழியாளர்களுக்கு கற்பிக்கப்படல் அதிகரிக்கபடவேண்டும். தமிழ் பரப்பு கழகங்கள் உருவாக்கபடவேண்டும்.

இந்தி மொழியாளர்கள் பிரசார சபா என்று ஒன்று வைத்து உள்ளார்கள். அதை பாராட்ட வேண்டும். அது அவர்கள் மொழி மீது அவர்கள் கொண்ட பற்று. தமிழ் மண்ணிற்கு இந்தி பயன்பாடு அவசியம் இல்லை என்பது வேறு கதை.

எழுத்துக்களின் பயன்பாடே இல்லாத சௌராஸ்டிரம் போன்ற மொழிகளை தமிழ் மண் இன்னும் காத்து வரும்போது. தமிழை விடலாம் ?

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். என்ன செயலாம் தமிழ் மொழி பெயர்ப்பு கருவியோ சிருவியோ செய்ய ? மற்றவர்களிடம் விவாதியுங்கள். இந்த பதிவை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள்.

நன்றிகளுடன்
கார்த்திக் சிதம்பரம்

Comments

  1. நானும் இப்படி ஒன்று இருந்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். நானறிந்தவரை இதுவரை இல்லையா? அல்லது எனக்கு கிடைக்கவில்லையோ தெரியவில்லை.

    உங்கள் ஆதங்கமே. என் ஆதங்கமும்.

    ReplyDelete
  2. மாநாடு போட்டு குடும்பத்தை மொழிக்கு முன் நிறுத்தும் கூட்டம் இருக்கும்வரை நம்ம உமறுதம்பி போல தனி மனித முயற்சிகள் மட்டுமே பயன் தரும் ..

    ReplyDelete
  3. இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

    ReplyDelete
  4. உங்கள் வலைப்பூவை பார்த்தேன். தங்களுடன் தங்கள் ஆய்வில் இணைந்து கொள்ள விரும்புகிறேன் ராபின். நன்றிகள்.

    ReplyDelete
  5. நண்பர் ராபினை தெரிந்துகொள்ளுங்கள்.
    http://language.worldofcomputing.net/machine-translation/challenges-in-machine-translation.ஹ்த்ம்ல்
    ஆங்கிலத்தில் நண்பர் அழகாக சில விசயங்களை எழுதி உள்ளார்.

    இன்னும் படிப்பேன் ராபின்.

    ReplyDelete
  6. உபயோகமான தேடல்.

    ReplyDelete
  7. //கே.ஆர்.பி.செந்தில் said...

    மாநாடு போட்டு குடும்பத்தை மொழிக்கு முன் நிறுத்தும் கூட்டம் இருக்கும்வரை நம்ம உமறுதம்பி போல தனி மனித முயற்சிகள் மட்டுமே பயன் தரும் ..
    //

    வழிமொழிகிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்