Skip to main content

என் பயணங்களில் : எழுத்து அறிவித்தது!

தந்தையின் இடமாற்றங்கள் எனது கல்வியை பாத்தித்தது. எப்போதெல்லாம் இடமாற்றல் ஆணை வருகிறதோ அப்போதெல்லாம் முதல் பலி கல்வியாகவே இருந்தது.

அதிலும் கல்வியின் ஆரம்ப கட்டம் அது. கணிதம் மற்றும் மொழிகளை அறிமுகம சேயும் தருணத்தில் நான் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மாதிரி இடம் தாவி கொண்டிருந்தேன்.

என் தாய் மொழி தமிழ் - அதன் ஆரம்பம் கூட எனக்கு இப்படிதான் கிட்டியது. இடமாற்றல் பணிகளில் அம்மாவும் அப்பாவும் தீவிரம் காட்டவேண்டிய நிலை.

இங்கிலீஷ் ஈ என இளிக்க தமிழ் கண்ணாமூச்சி காட்டியது. நல்லவேளை தமிழை சின்னத்திரை வழியாக நான் கற்கும் நிலை இல்லை. அப்போது இந்த தொலைகாட்சி அக்கபோர்கள் இல்லை. தமிழ் வாழ்ந்தது.

பள்ளிக்கூடத்திலும் சூழலாலும் தமிழ் கற்றாலும் எழுத படிக்க கற்றுகொடுத்து
பெருமை இவர்களை விட வேறு ஒன்றிற்கு உண்டு. அந்த ஆசிரியர்    காலையில் வருவார். "ஏக் காவ் மே ஏக  கிஷான்  ரகுதாத்தா" கதை சொல்லி தரும் ஆசிரியர் அல்ல அது.

அது ஒரு நாளேடு. அதன் பெயர் தினமணி. தினமணி மூலம்தான் நான் ஆரம்பகாலத்தில் எழுத கற்றுக்கொண்டேன் . எழுத்து அறிவித்தது தினமணி

தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும் போது - அயல் நாடுகளில் நம் தமிழ் குழந்தைகளின் நிலை ? நம் ஊரு சினிமா பாத்து நம்ம தமிழையும் தமிழ் மக்களையும் தெரிஞ்சுகிட்டா கிழிஞ்சுது.

இது எல்லா மொழியினருக்கும் உள்ள பிரச்சனை.தாய் மொழியை காப்போம்.

தொடரும்   

Comments

  1. தமிழ் மண்ணிலேயே நிறைய இப்படி பிரச்சனை இருக்கும் போது - அயல் நாடுகளில் நம் தமிழ் குழந்தைகளின் நிலை ? நம் ஊரு சினிமா பாத்து நம்ம தமிழையும் தமிழ் மக்களையும் தெரிஞ்சுகிட்டா கிழிஞ்சுது.

    ..... கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடியல.
    When you have time, read:
    http://konjamvettipechu.blogspot.com/2010/01/blog-post_20.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...