Skip to main content

இராவணன் : பச்சை வேட்டையா ? வீரப்பன் கதையா ?

மணிரத்தினம் அவர்கள் ஒரு ரவனானயணம் செய்து உள்ளார். அவரிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு.

இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன் ஒன்றை சொல்லி விடுகிறேன் - நான் திரைவிமர்சகன்  இல்லை. இது வரை எழுதியதும் இல்லை.

மணி ரத்தினம் படங்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உண்டு. ரோஜா வந்த பின்னர் இந்தியாவின் எல்லா மொழிபடங்களின் வில்லன்களும் பாகிஸ்தானில் இருந்தே வந்தார்கள் அல்லது இருந்தும் வந்தார்கள்.

மற்றபடங்களினால் பெரிதும் பின்விளைவுகளை ஏற்படுத்தமுடியாவிட்டலும்  சில பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பின் இலங்கையின் பிரச்சனை சிலாரல் நினைக்கப்பட்டது.

இன்றுதான் ராவணன் பார்த்தேன். இந்த படம் இந்தி மொழியில் நிறையவே தோற்க வாய்ப்புகள் உண்டு. அங்கே உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் கூட ராம் ராம் என்று சொல்வார்களாம். ராம் என்பதுதான் அவர்களின் செயல்பாடு. ஆராம் என்றால் ஓய்வாக இருக்கும்.

ராவனனில் மணிரத்தினம் சில விடயங்களை சொல்ல முடியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் தவிர்த்து உள்ளார். இராவணன் நல்லவன் என்பதை மட்டும் திரை படம் பார்பவர்கள் கொஞ்சம் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ராவனானில் ராவணன் மிகுந்த பண்போடு நடந்து  கொல்கிறான். ஆனால் அவனது ஆளுமை அவனை தலைவனாக மக்கள்  ஏன் ஏற்றுகொள்கிறார்கள் என்று  சொல்ல மணிரத்தினம் தவறுகிறார் அல்லது தவிர்க்கிறார்.

ஆனால் சில குறீடுகளை பார்க்கும் போது மணிரத்தினம் - ராமாயணத்தை நோக்கிய விமர்சனத்தை பதிவு செய்வதாகவும் எடுத்துகொள்ள வேண்டி உள்ளது. நீங்கள் தேவ பிரகாசங்கள் ( ப்ரிதிவியின் பெயர் தேவ் பிரகாஷ் ) என்று   நினைப்பவர்கள் வன்புணர்ச்சி கூட்டத்தின் ஆதரவு பெற்றவர்கள் என்று சொல்கிறாரோ ? என்று கேள்வி எழுகிறது. நீங்கள் ஞானப்ரகசன்களாய் நினைப்பவர்கள் காட்டிகொடுப்பவர்கள்.  தி க -வில் மணி சேர்ந்து விட்டாரா என்ன ?

ஆனால் படத்தில், பச்சை வேட்டை என்கிற ஒன்றை புரிந்து கொண்டவர்கள் நிறைய அலசலாம். அப்புறம் வீரப்பன் ஒரு முறை சொன்ன வாசகம் எங்கள் பெண்களை கெடுத்தார்கள் காக்கிகள்.

கதை - தனிமனிதர்களின் யுத்தம் என்பது போன்றே செல்கிறது. ஆனால் இது ஒரு - இரு தரப்பு போர். ஆயுதம் இருவரிடமும் உண்டு. ஆனால் சட்டம் ஒரு பக்கத்தில் மட்டும்.

பிரச்சனைகளை முன் வைப்பதை விட்டு விட்டு - ஒரு தரப்பின் நல்ல பண்புகளை சொல்கிறார். விக்ரம் அனாயாசமாக செய்து உள்ளார். அடுத்தவன் மனைவியை ஆசை பட்ட ராவணன் என்கிற கருத்து இங்கும் கொஞ்சம் உண்டு. மணி கொஞ்சம் துணிச்சல் இல்லாது சில விடயங்களை தொட மறுக்கிறார்.

ராவணனை முழுமையாக நம்பும் நாயகி என்று பெருமிதம் படும் இடத்தில் - அவளின் கணவன் கடமை வீரன் பட்டம் பெற்றுவிடுகிறான். 


சிவப்பு சிந்தனையை பதிவு செய்ய நினைத்து  (அவரின் மௌன ராகம் காலத்தில் இருந்தே சிவப்பு அவர் படத்தில் சில இடங்களில் இருக்கும்) தடுமாறி உள்ளார் .சிவப்பு சிந்தனையை  சொல்ல நினைக்கிறார் என்றே நினைக்கிறேன் ஆனால் அவரின் சூழல் அவரை தடுக்கிறது. அவர் திறமைசாலி ஆனால் சில இடங்களில் அவர் நேர்மை இன்றி நடக்க வேண்டி உள்ளதோ ?

அப்புறம் யார் இந்த கொடு போட்டா பாடலை எழுதியது - கொஞ்சமும் விக்ரமின் கதாபாத்திரத்திக்கு பொருந்தாத வரிகள். ஏதோ வன்முறை அரசுகளின் கொள்கை பிரச்சார பாடல் போல உள்ளது. யாருப்பா இப்படி சேம் சைடு கோல்  போடுவது ?

பச்சை வேட்டை பற்றி என்னை நினைக்க வைத்த படம் என்கிற ரீதியில் நான் இந்த படத்தை பாராட்டவே நினைக்கிறேன். படம் ராவணன் நல்லவன் என்று இந்தி மக்களிடமும் பதிவு செய்வது குறித்து மகிழ்கிறேன்.

மொத்தத்தில் ஒரு நல்ல படம். ஆனால் மிக அதிகமாக சமரசம் செய்த  செய்தி மட்டுமே படத்தில் உள்ளது. ஒரு முறை பாருங்கள்
.

Comments

  1. //பச்சை வேட்டை பற்றி என்னை நினைக்க வைத்த படம் என்கிற ரீதியில் நான் இந்த படத்தை பாராட்டவே நினைக்கிறேன். படம் ராவணன் நல்லவன் என்று இந்தி மக்களிடமும் பதிவு செய்வது குறித்து மகிழ்கிறேன்.//

    MEE TOO SIR ..

    ReplyDelete
  2. மொத்தத்தில் ஒரு நல்ல படம். ஆனால் மிக அதிகமாக சமரசம் செய்த செய்தி மட்டுமே படத்தில் உள்ளது.

    ............. a movie review - - - in a different point of view.

    ReplyDelete
  3. //அப்புறம் யார் இந்த கொடு போட்டா பாடலை எழுதியது - கொஞ்சமும் விக்ரமின் கதாபாத்திரத்திக்கு பொருந்தாத வரிகள். ஏதோ வன்முறை அரசுகளின் கொள்கை பிரச்சார பாடல் போல உள்ளது. யாருப்பா இப்படி சேம் சைடு கோல் போடுவது ?//

    நண்பரே இந்த பாடலை எழுதியது வைரமுத்து. எதை same side goal என்கிறீர்கள்?

    ReplyDelete
  4. இந்த கேள்வியை கேட்டமைக்கு நன்றி நண்பரே கலாநேசன். அந்த பாடல் வரிகளை படித்து பாருங்குள்.வீரப்பன் பற்றி நீதிமன்றம் இப்படி ஒரு வாதத்தை முன் வைத்தது.

    கோடு போட்டா கொன்னு போடு - நீதிமன்றம் கிட்டத்தட்ட இதுதான் சொன்னது. அதாவது வீரப்பன் தனி ராஜ்ஜியம் நடத்துகிறான்.
    கோடு என்பது கட்டுபாடா ... எல்லையா ?வீரப்பனை போலவே கதாநாயகன் காட்டபடுகிறான். அவனது கதாபாத்திரம் அப்படியே சித்தரிக்க படுகிறது.

    அந்த நீதிமன்ற வாசகங்களை படித்தவன் என்பதாலும் கதாபாத்திரம் வீரப்பனோடு ஒன்றுவதாலும் வந்த சிந்தனை இது.

    ReplyDelete
  5. இந்த படம் அரபி மொழியில் பார்த்தேன் நன்றாக இருந்தது ஆனா வசனம் புரியல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்