Skip to main content

த நா வரலாறு : சோழன் ஆண்ட மண்ணில் ....

தமிழ் மண்ணின் முதலாளித்துவத்தின் கோர முகம், சதி முகம் வெளிப்பட்ட இடம் கீழவெண்மணி. அதை அவன படுத்தும் முயற்சியில் ஏற்கனவே பலரும் முயன்றிருந்தாலும் - நாங்களும் கொஞ்சம் முல்கிறோம்.

கீழவெண்மணி என்பது தற்போதைய நாகை மாவட்டத்திலும் முன்னாலய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் உள்ள ஒரு சிறிய ஊர்.
இந்த ஊரில் ஒரு பெரும் வேட்கதிருக்கு உரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அரை படி கூலி உயர்வு கேட்ட அப்பாவி தொழிலாளிகள் - கூலி உயிர்வு கேட்ட காரணத்திற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்கிற காரணத்தாலும் உயிருடன் கொளுத்தப்பட்டனர். இந்த வரலாறு இன்றும் நம் வரலாற்று புத்தகங்களில் இல்லை. மாறாக நம் பெருமை பேசும் பல விடயங்கள் உண்டு. அறியாதவற்றை சொல்ல்வதே எண்ணம் என்றாலும் - எங்களுக்கு முன்னாள் பலர் இதை ஆவன படுத்தி உள்ளனர்.

"இனி" என்கிற தன் புதினத்தில் திரு மேலான்மை பொன்னுசாமி இதைதான் மைய கருத்தாய் வைத்து எழுதினார் என்று என் பேராசிரியர் சொல்லுவார்.

ராமயவின் குடிசை இதன் ஆவண வடிவமே. இயன்றால் வாங்கி பாருங்கள். நாங்களும் இயன்றால் பதிவேற்ற முயற்சிக்கிறோம்.

உங்களுக்கு வேறு ஒரு இனைய பக்கத்தை அறிமுக படுத்த உள்ளேன் இன்று. அதன் முகவரி http://lenz101.com/

ஆவன ஒழி கீற்றுகளை பதிவேற்ற நானும் நண்பர் ஜூலிச்டனும் சேர்ந்து எடுத்து உள்ள முயற்சி இது. உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
உங்கள் பார்வை எங்கள் தேவை.

Comments

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்