Skip to main content

என் பயணங்களில் : இன்றய செய்தியும் நேற்றைய சாத்தூரும் !

என் அப்பா வங்கியில் வேலை பார்த்த காரணத்தால் எங்கள் வாழ்க்கை பயணத்தில் தமிழ் மண்ணின் பல பகுதிகளை காண முடிந்தது.
இன்றைக்கு படித்த ஒரு செய்தி என்னை கொஞ்சம் பழைய காலத்திற்கு அழைத்து சென்றது.
சிலேட்டு என்று சொல்லப்படும் சிறிய தூக்கி செல்லும் கரும்பலகை ( அட! - சிலேட்டுன்னா புரியாதா என்ன ? ) விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதை படிக்கிற போது அப்பா சொன்ன நிப்பு கதை ஞாபகத்திற்கு வந்தது. நிப்பு என்பது எழுதொகோல் முனை. இந்த தருணத்தில் நாங்கள் மதுரையில் தங்க வைக்கப்பட்டோம். அப்பா மதுரையில் இருந்து பயணிப்பார் வேலை தளத்திற்கு.

கத்தி முனைகளை விட பேனா முனை வலிமையானது என்கிற கருத்து எல்லாம் எழுத்திற்குதானே தவிர உண்மையில் எழுதொகோல் முனைகளுக்கு இல்லை. அயல்நாட்டு எழுதுகோல்களின்  வரவினால் நம் நாட்டுஎழுதுகோல்கள்  தொலைந்து போயின.

அரசு மைபேநாவில் கை ஒப்பும் இடவும் என ஆணை பிறப்பித்த பின்னர் - பலரும் மை பேனா வைத்திருக்கும் கட்டயத்திற்கு தள்ளப்பட்டனர். இது மாநில அரசின் ஆணை என்று நினைவு. மத்திய அரசு அயல் நாட்டு நிறுவனங்கள் வர அனுமதித்தது.

இந்த ஆணை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. நிப்பு என்பதை பற்றி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். அது ஒரு பொருள். அதன் தேவை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போனது. ஒரு நிலையில் அதன் தேவை முற்றிலும் நின்று போனது.

இந்த அழிவு தருணத்தில் இந்த தொழில் அழிவு நல்லதே என்றும் சொன்னவர்கள் உண்டு. காரணம் இந்த தொழிலும்  சிறுவர்கள் அதிகம் பயன்படுத்த பட்டனர். ஏதோ இந்த தொழில் அழிந்து விட்டதால் சிறவர்கள் நல்வாழ்வு பெறுவதாக யாரவது சொன்னால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இந்த நிப்பு உற்பத்தி ஒரு குடிசை தொழில் போல் இருந்து வந்தது. இதில் அந்த குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் பணியாற்றினர். இந்த தொழில் இல்லாவிட்டால் வேறு தொழிலுக்கு இந்த சிறுவர்கள் பயனித்திருப்பர். குழந்தைகளின் கல்வி வாய்ப்பிற்கானவழி முறைகளை நாம் பார்க்க வேண்டும்.

இந்த தொழில் அழிவுக்கு வருவது கிட்டத்தட்ட நிறுத்த முடியாத ஒன்றாக இருந்தது. நிப்பு எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தெரியவில்லை.
நாடக கலை அழிந்து திரை கலை ஆட்சிக்கு வந்ததற்கு சிலர் காலத்தின் கட்டாயம் என்று கதை சொல்லலாம். ஒரு முறை கமல் அவர்கள் கூட அப்படி சொன்னதாக நினைவு.

திரு மனோகர் அவர்கள் - மற்ற மாநிலங்களில் நாடகம் வாழ்வது பற்றி ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார். தமிழ்நாடுதான் விதிவிலக்கு என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். காப்பாற்ற படவேண்டிய கலைகள், தொழில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. நிப்பு காப்ற்ற படவேண்டிய தொழில் என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது அழிந்துவிட்டது. ஆனால் ஒரு தொழில் அழியும் நிலையில் உள்ள போது அந்த தொழில் தெரிந்தவர்கள் அதற்கு அருகாமையில் உள்ள வேருதொழிளுக்கு மாற அரசு மற்றும் தன் ஆர்வ அமைப்புகள் உதவி செய்தால் நலம்.

குழந்தை தொழிலார்கள் பற்றி பேசும் போது எனக்கு எப்போதும்  வரும் கேள்வி அதன் வேர் எது என்று ஆராயாமல் - அதை நிறுத்துவதை பற்றி பேசுவது.மதுவிற்கு பல ஏழைகள் பணம் விரயம் செய்கின்றனர். இதுவும்ஒருகாரணம்.

சிலேட்டுகள் அழிவை நோக்கி பயணிப்பதன் காரணம் எனக்கு விரிவாய் தெரியவில்லை. ஆனால் அதன் காரணம் தற்போதைய கல்வி முறையே.சிலேட்டை காப்பாற்றுகிறேன் என்று கல்வியில் குழப்பம் உண்டு செய்யவேண்டாம். அதற்கு மாற்றாக  சிலேட்டு செய்யும் மைதர்கள் வேறு எந்த தொழில் நோக்கி பயணிக்கலாம் என்று தன்னார்வ / அரசு அமைப்புகள் உதவலாம். வழிகாட்டலாம்.

கல்வி வாழ்ந்தாகவேண்டும் - மனிதன் வாழ்வதற்கு!

பயணம் தொடரும்

Comments

  1. //
    இதில் அந்த குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் பணியாற்றினர். இந்த தொழில் இல்லாவிட்டால் வேறு தொழிலுக்கு இந்த சிறுவர்கள் பயனித்திருப்பர்.
    கல்வி வாழ்ந்தாகவேண்டும் - மனிதன் வாழ்வதற்கு!
    //

    இடுகை சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்களுடன், அக்கறை கொண்டு எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. நல்ல அலசல்.. கல்லு சிலேட்டு போய் தர சிலேட்டு வந்தது..
    நிப்பு போய் பால் பாயின்ட் வந்துவிட்டது..
    இன்னைக்கும் நிப்பு பேனாவை நேசிக்கும் பலர் உண்டு ,, கலைஞர் உட்பட .

    ReplyDelete
  4. நன்றி கோவி. கண்ணன், சித்ரா, கே ஆர் பி செந்தில்

    ReplyDelete
  5. நிப்பு பேனாவும் camel ink ம் natraj geomentry பாக்ஸ்ம் .... அது எல்லாம் ஒரு வசந்த காலம்... நல்ல அலசல்...

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லவதெல்லாம் உண்மைதான். அது ஒரு வசந்த காலம். வருகைக்கு நன்றி தங்கமணி.

    ReplyDelete
  7. போங்க சார்.. எங்க ஊர் பேரு (சாத்தூர்) போட்டிருக்கேனு ஆர்வமா ‘க்ளி்க்’ பண்ணுனா..உள்ள ஒரு வார்த்தை கூட சாத்தூரை பத்தி எழுதலையே.. இருந்தாலும் நீங்க எழுதுனதை படிக்கிறப்போ, நான் ஸ்கூலுக்கு போகும் போது நிப்பு கம்பெனியில் வேலை பார்க்கும் பையன்கள் நினைவுக்கு வந்து போனார்கள்.. அருமையான பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்