Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 5


ன் பெயர் பைரவி. நான் சத்தியமூர்த்தியின் மனைவி. நாங்கள் அந்த நாட்களில் தேனீ பகுதிக்கு சென்றோம். அந்த வெள்ளம் நிறைந்த காட்டு மலை பகுதியில் எங்கள் வண்டி பயணித்த போது இவர் இறங்கிஏதோ கத்திக்கொண்டு இருந்தார். நான் பயத்தில் உறைந்து இருந்தேன்.


துப்பாக்கி சூட்டுக்கிடையில்  எங்கள் பயணம் இருந்தது. எங்களுக்கு என்று மிக அழகான ஒரு வானமும், வனமும் அதன் அருகில் ஒரு வீடும் இருந்தது. மென்மையான ஓட்டி தரை. நெஞ்சம் கவரும் சூழல். இங்குதான் எங்கள் வாசம் என்கிற போது மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

எங்கள் வாழ்வின் தேனிலவு இது என்று இதயம் சொன்னது. ஆனாலும் துப்பாக்கியும் கையுமாக இவர் சுற்றினார். தடினமான ஜெர்கின் - தடினமான பூட்ஸ் என்று எல்லாம் இவர் இதயம்  போலவே. ஆனாலும் இவர்என் செல்ல காதலர்.

அந்த நாள் எனக்கு நிறையவே  ஞாபகத்தில் உள்ளது. இரவு பொழுது. நிலவு இந்த மண்ணில் குளுமை தந்துகொண்டிருந்தாள். பொன்னிற நிலவு சிதறிய நட்சத்திரங்களும் ஒரு அழகிய ஓவியம் போல இருந்தது.

இவர் காவல்நிலையத்தில் இருந்தார். வருவதற்கு தாமதம் ஆகும் என்று தொலை பேசி அழைப்பு விடுத்து சொன்னார்.

இவர் தொலைபேசி அழைப்பு விடுத்து சொன்னதும் - நான் என் படுக்கையில் போய் படுத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் போய் இருக்கும். ஏதோ வண்டி வரும் சத்தம். எழுந்தேன். வெளியில் வந்தேன்.

ஒரு முருட்டு ஜீப் வந்து கொண்டிருந்தது. அது ஒளி வெளிச்சத்தை பாய்ச்சியபடி வந்தது. இவர்தானோ - விளயாடுகிராரோ  என்று நினைத்தபடியே வாசல் வந்தேன். எங்களுக்கான இரண்டு காவலர்கள் வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.

ஜீப் சிறுத்தை மாதிரி வந்தது. எங்கள் வீட்டு வாசலில் நின்றது. சில மனிதர்கள் இறங்கினர்.

"பயப்படாத தாயீ" - வண்டி ஓட்டி வந்தவன் சொன்னான். அவன் இறங்கவில்லை.

எங்கள் காவலர்கள் தாக்கப்பட்டனர். நான் கதறினேன். அவர்கள் என்னை கடத்தினர். கண்களை கட்டினர்.
எனக்கு இந்த வண்டி ஓட்டியை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. முரட்டு உடல். கூர்மையான விழிகள். இரண்டு நாள் தாடி. முரட்டு கட்டபொம்மன் மீசை. இவன் யார். இவனை நான் எங்கே பார்த்தேன். இவனுக்கும் எனக்கும் இடையில் என்ன ?

ஜீப் பறந்தது. காவலர்கள் வீழ்ந்து கிடந்தனர். நிலா எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த்தது. இந்த குளிர் பகுதியில் இந்த இரவில் என் முகம் முத்து குளித்திருன்தது. நிலவின் கதிர் என் வியர்வை முத்தில் விழுந்து மின்னி சரிந்தது.

இவன் யார் ? - என் இதயம்  என் நினைவுகளை அலசியது.

தொடரும்

Comments

  1. கடத்தி கொண்டு போய் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மெதுவா அசை போடுதே, இந்த பொண்ணு..... ஆஆஆ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்