Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 13

ந்த இளம் பெண் மரணம் அடைந்து விட்டாள். இவர்களோ சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். மலைக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் மாதிரி இவர்கள். இவர்களால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. காவல்படைகள் நெருங்கு கின்றன. இவர்களின் தோல்வி இவர்களின் தோளில் ஏறி அமர நேரம் அதிகம்இல்லை.

மாடசாமி அந்த இளம் பெண்ணை பார்த்து விம்மி விம்மி அழுதான். தன் உடன் பிறந்தவளை இழந்த மாதிரி.
சுடுகாட்டுக்கு செல்ல முடியாது - தற்போதைய சூழலில்.

மாடசாமியின் அண்ணன் வந்தான். பார்க்க கொஞ்சம் கனமாக இருந்தான். மீசை முறுக்கி விடப்பட்டு இருந்தது.
அவனோடு ஒரு மெலிந்த தேகதவன்.

மாடசாமி வந்த அண்ணனிடம் பிணத்தை காட்டினான்.
கண்களை கசக்கினான். அழுதான்.

"தம்பி. நம்ம பயலுகு வலுவா நிக்குராணுக. கண்ண கசக்காத"
தன் தம்பியை தாங்கிக்கொண்டான் அண்ணன்.

அந்த மெலிந்தவன் என்னை பார்த்தான்.
"இது தான் அந்த படுபாவி பொண்டாட்டியா?" - மாடசாமியிடம் கேட்டான்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"யார படுபாவிங்குற ?"

நான் கோபத்தோட அந்த மெலிந்த தேகதவனை நெருங்கினேன்.
மாடசாமி அந்த மெலிந்த தேகத்தவனை பிடித்துக்கொண்டான். அவன் திமிறினான்.

ஒரு சின்ன சிறுவன் வந்தான்.
எல்லோரும் அவனை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர்.
"அக்காடா ....."
எல்லோரும் அவனை கண்டிக்கொண்டு அழுதனர்.

அவன் அந்த இளம்பெண்ணின் தம்பி போல.
"அவளுக்கு கண்ணாலம் கட்டி வைக்கனும்னு இருந்தோமே ... " - பாம்பட பாட்டி கதறினாள்.

நிமிடங்கள் கடந்த பின்.
மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டு அந்த குகைக்கு வெளியில் அவள் எரிக்கபட்டாள்.

இந்த புகை கூட அவர்களை காட்டி கொடுத்துவிடும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மனிதர்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இங்கே தாக்குதலும் இருக்கின்றது. காரணம் - இங்கே மனிதர்கள் என்றால் இவர்கள் இல்லாவிட்டால் காவலர்கள்.அண்ணன்  - மாடசாமிக்கு, அந்த சிறுவனுக்கு  ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.

நான் அவர்களை பார்த்தேன் என் மீது அவர்களின் வெறுப்பு திரும்பவில்லை.
போலீஸ் அவர்களை நெருங்கி கொண்டு இருந்தது.

அந்த பெண்ணிடம் எப்போதும் ஒரு நட்பு புன்னகை இருக்கும். சில தருணங்களில் அவளுக்கு ரத்த போக்கு இருந்தது. பாதிக்கப்பட்டவள்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் மோதல் நடந்து கொண்டு இருக்கலாம். கிளம்ப ஆயத்தம் ஆகினர் மாடசாமியின் அண்ணனும் அந்த மெலிந்த தேகத்தவனும். அந்த பெண்ணின்  தம்பி இங்கேயே தங்கி விட இருந்தான்.

"சரி. இந்த பொம்பளைய என்ன செய்ய போற தம்பி ?" - மாடசாமியின் அண்ணன் போகிற போக்கில் கொல்லி வைத்தான்.

எனக்குள் ஒரு பயம் சம்மணம் இட்டது.
என்னை மறித்துக்கொள்ள மனதளவில் தயார் ஆனேன்.

நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
அவனது வாயை பார்த்தேன்.
அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....


தொடரும்

Comments

  1. ஒரே மூச்சில் படித்தேன்.. இன்னும் படிப்பேன் ..

    ReplyDelete
  2. நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
    அவனது வாயை பார்த்தேன்.
    அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
    அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....

    ...... திகில் நிறைந்த தருணங்கள்..... Keep going! :-)

    ReplyDelete
  3. Thanks
    @கே.ஆர்.பி.செந்தில்
    @Chitra

    ReplyDelete
  4. Good going... கொஞ்சம் பெரிய பதிவா போடுங்க கார்த்திக்... ரெம்ப சின்னதா இருக்கற மாதிரி தோணுது...நல்லா போகுது... good write up

    ReplyDelete
  5. Thanks @அப்பாவி தங்கமணி

    ReplyDelete
  6. எப்பிடித் தலை இதெல்ல்லாம்? இன்ப அதிர்ச்சி கொடுப்தை விட திகிலூட்டியல்லவா அதிர்ச்சி கொடுக்கிறீர்கள். உங்கள் எழுத்து நடை, கதை நகர்த்தும் ஆற்றல், விறுவிறுப்புடன் கதையில் சரிவு ஏற்படாதபடி கொண்டு செல்லும் திறன் ஆகியவற்றை ரசித்தேன். தொடர்ந்தும் எழுதுங்கோ தோழா!
    வாழ்த்துக்கள்.


    ஏதாவது, பத்திரிகை அல்லது சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தால் இக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    ReplyDelete
  7. நன்றி தமிழ் மதுரம். ஏடுகளுக்கு ... பார்ப்போம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்