Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் .... பகுதி 13

ந்த இளம் பெண் மரணம் அடைந்து விட்டாள். இவர்களோ சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். மலைக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் மாதிரி இவர்கள். இவர்களால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. காவல்படைகள் நெருங்கு கின்றன. இவர்களின் தோல்வி இவர்களின் தோளில் ஏறி அமர நேரம் அதிகம்இல்லை.

மாடசாமி அந்த இளம் பெண்ணை பார்த்து விம்மி விம்மி அழுதான். தன் உடன் பிறந்தவளை இழந்த மாதிரி.
சுடுகாட்டுக்கு செல்ல முடியாது - தற்போதைய சூழலில்.

மாடசாமியின் அண்ணன் வந்தான். பார்க்க கொஞ்சம் கனமாக இருந்தான். மீசை முறுக்கி விடப்பட்டு இருந்தது.
அவனோடு ஒரு மெலிந்த தேகதவன்.

மாடசாமி வந்த அண்ணனிடம் பிணத்தை காட்டினான்.
கண்களை கசக்கினான். அழுதான்.

"தம்பி. நம்ம பயலுகு வலுவா நிக்குராணுக. கண்ண கசக்காத"
தன் தம்பியை தாங்கிக்கொண்டான் அண்ணன்.

அந்த மெலிந்தவன் என்னை பார்த்தான்.
"இது தான் அந்த படுபாவி பொண்டாட்டியா?" - மாடசாமியிடம் கேட்டான்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"யார படுபாவிங்குற ?"

நான் கோபத்தோட அந்த மெலிந்த தேகதவனை நெருங்கினேன்.
மாடசாமி அந்த மெலிந்த தேகத்தவனை பிடித்துக்கொண்டான். அவன் திமிறினான்.

ஒரு சின்ன சிறுவன் வந்தான்.
எல்லோரும் அவனை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர்.
"அக்காடா ....."
எல்லோரும் அவனை கண்டிக்கொண்டு அழுதனர்.

அவன் அந்த இளம்பெண்ணின் தம்பி போல.
"அவளுக்கு கண்ணாலம் கட்டி வைக்கனும்னு இருந்தோமே ... " - பாம்பட பாட்டி கதறினாள்.

நிமிடங்கள் கடந்த பின்.
மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டு அந்த குகைக்கு வெளியில் அவள் எரிக்கபட்டாள்.

இந்த புகை கூட அவர்களை காட்டி கொடுத்துவிடும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மனிதர்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இங்கே தாக்குதலும் இருக்கின்றது. காரணம் - இங்கே மனிதர்கள் என்றால் இவர்கள் இல்லாவிட்டால் காவலர்கள்.அண்ணன்  - மாடசாமிக்கு, அந்த சிறுவனுக்கு  ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.

நான் அவர்களை பார்த்தேன் என் மீது அவர்களின் வெறுப்பு திரும்பவில்லை.
போலீஸ் அவர்களை நெருங்கி கொண்டு இருந்தது.

அந்த பெண்ணிடம் எப்போதும் ஒரு நட்பு புன்னகை இருக்கும். சில தருணங்களில் அவளுக்கு ரத்த போக்கு இருந்தது. பாதிக்கப்பட்டவள்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் மோதல் நடந்து கொண்டு இருக்கலாம். கிளம்ப ஆயத்தம் ஆகினர் மாடசாமியின் அண்ணனும் அந்த மெலிந்த தேகத்தவனும். அந்த பெண்ணின்  தம்பி இங்கேயே தங்கி விட இருந்தான்.

"சரி. இந்த பொம்பளைய என்ன செய்ய போற தம்பி ?" - மாடசாமியின் அண்ணன் போகிற போக்கில் கொல்லி வைத்தான்.

எனக்குள் ஒரு பயம் சம்மணம் இட்டது.
என்னை மறித்துக்கொள்ள மனதளவில் தயார் ஆனேன்.

நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
அவனது வாயை பார்த்தேன்.
அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....


தொடரும்

Comments

  1. ஒரே மூச்சில் படித்தேன்.. இன்னும் படிப்பேன் ..

    ReplyDelete
  2. நான் மட்டும் அல்ல எல்லோரும் மாடசாமியின் வார்த்தைக்காக காத்திருந்தோம்.
    அவனது வாயை பார்த்தேன்.
    அவன் கண்களில் ஒரு வெறி இருந்தது. பழிவாங்கும் வெறி.
    அவன் வாய் திறந்தான். என் கதி அவன் வாயில் ....

    ...... திகில் நிறைந்த தருணங்கள்..... Keep going! :-)

    ReplyDelete
  3. Thanks
    @கே.ஆர்.பி.செந்தில்
    @Chitra

    ReplyDelete
  4. Good going... கொஞ்சம் பெரிய பதிவா போடுங்க கார்த்திக்... ரெம்ப சின்னதா இருக்கற மாதிரி தோணுது...நல்லா போகுது... good write up

    ReplyDelete
  5. Thanks @அப்பாவி தங்கமணி

    ReplyDelete
  6. எப்பிடித் தலை இதெல்ல்லாம்? இன்ப அதிர்ச்சி கொடுப்தை விட திகிலூட்டியல்லவா அதிர்ச்சி கொடுக்கிறீர்கள். உங்கள் எழுத்து நடை, கதை நகர்த்தும் ஆற்றல், விறுவிறுப்புடன் கதையில் சரிவு ஏற்படாதபடி கொண்டு செல்லும் திறன் ஆகியவற்றை ரசித்தேன். தொடர்ந்தும் எழுதுங்கோ தோழா!
    வாழ்த்துக்கள்.


    ஏதாவது, பத்திரிகை அல்லது சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தால் இக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    ReplyDelete
  7. நன்றி தமிழ் மதுரம். ஏடுகளுக்கு ... பார்ப்போம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...