Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 10


நான் சத்யா. அந்த கருப்பு ஆட்டை எங்கள் வழி காட்டியாக வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழியில் பயணித்தோம்.
எங்கள் ஜீப் அந்த காட்டு மலை பகுதிக்குள் சீறி பாய்ந்தது. பின்னல் எங்கள் படை.

நாங்கள் அவன் சொன்ன இடத்தில் நிறுத்தினால் - அங்கே யாரும் இல்லை.
"எனக்கு தெரியாதுங்க" - அவன் அலறினான்.

என் கை துப்பாக்கி அவனை பதம் பார்க்க நினைத்தது. அந்த நேரம் பார்த்து அந்த பழங்குடியின
ர் அந்த பக்கம் வந்தனர்.

நாங்கள் அவர்களை வழி மறித்தோம். அவர்கள் கையில் குருவி சுடும் துப்பாகிகள் இருந்தன.
"எங்கே மாடசாமி ?" - கேட்டேன்
"தெரியாது சாமி" - அவர்கள் சொன்னார்கள்.

நான் இளைய பெருமாளை அழைத்தேன்.
இந்த கருப்பு ஆட்டை தீர்த்து கட்டிவிட திட்டமிட்டோம்.

நாங்கள் எங்கள் துப்பாகிகளை பயன்படுத்தினோம்.
அந்த கருப்பு ஆடும் மற்றும் சிலரும் எங்கள் தரப்பில் இறந்தனர். அந்த பழங்குடி கூட்டத்தில் எல்லோரும்.

யுத்தம் முடிந்த மாதிரி இருந்தது. மாடசாமிக்கு யார் அதரவு அளித்தாலும் தீர்த்துக்கட்டவேண்டியததுதான். இந்த பழங்குடி கூட்டமும் அவனின் ஆதரவு கூட்டாம் தான்.

நான் எங்கள் குழுவை பார்த்தேன்.
அவர்கள் பிணங்களை அள்ளி கொண்டிருந்தனர்.

நான் தண்ணீர் குடித்தேன். என்
துப்பாக்கி குழலை ஊதி விட்டேன். அது துயில் கொள்ள தயார் ஆனது.

அப்போதுதான் அந்த குரல் கேட்டது.

அதிர்ந்தோம். நான் திரும்பிபார்த்தேன்.
நான் மட்டும் அல்ல எல்லோரும்.

"நாந்தேன் மாடசாமி"

என் துப்பாக்கியை தயார் செய்தேன். அது உயிர் குடிக்க தயாரானது.
ஆனால் ....

தொடரும்

Comments

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.