Skip to main content

த நா தள வரலாறு : யாதும் ஊரே சொன்னவனின் ஊரு!

"யாதும் ஊரே யாவரும் கேளிர் !" என்று சொன்னவன் ஊர் எத்தனை பேருக்கு தெரியும்.
சிலர் பூங்குன்றம் என்று சொல்லிவிட்டு இருந்து விடுவர். ஆமா ? பூங்குன்றம் என்கிற ஊர் தமிழ் மண்ணில் எங்கு உள்ளது.

நீங்கள் தமிழ்நாட்டின் வரைபடத்தை திறந்து வைத்து என்றாவது இந்த ஊரை கண்டு பிடிதிருக்கீன்களா ?

உண்மையில் அந்த ஊரின் தற்காலத்திய பெயர் பூங்குன்றம் இல்லை. அந்த ஊர் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயர் மகிபாலன் பட்டி.
மகிபாலன் என்பவரின் ஊர் என்றுதான் தெரியும். அல்லது அவர் பெயரில் உருவான ஊர்.

இந்த ஊரில் கணியனாக இருந்தவர்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர். அவர் சொல்வது இருக்கட்டும்.

அவரின் இந்த ஊரில் எத்தனை பேருக்கு அவருடைய ஊர் இந்த ஊர் என்று தெரியும். அவர் ஊரின் பக்கத்து ஊர் நண்பர் ஒருவர் சொன்னார்.

"இந்த ஊர் பெயர் மாற்றம் பெற்றதுமட்டும் இல்லை. இங்கே எந்த ஒரு ஆய்வும் நடந்த மாதிரி தெரியவில்லை."

தமிழ் மண்ணின் உருவம் தந்த வரிகளின் மனிதனின் வாழ்வை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எண்றால் - மகிபாலன் பட்டி செல்லலாம்.

தொடரும்

Comments

  1. ஆமாம்! நிறையவே ஆர்வமூட்டும் விஷயங்கள் நம்மிடம் உண்டு!

    ReplyDelete
  2. //உண்மையில் அந்த ஊரின் தற்காலத்திய பெயர் பூங்குன்றம் இல்லை. அந்த ஊர் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயர் மகிபாலன் பட்டி.
    மகிபாலன் என்பவரின் ஊர் என்றுதான் தெரியும். அல்லது அவர் பெயரில் உருவான ஊர்.
    //

    சான்றுகள், தரவுகள் ஏதாவது?

    ReplyDelete
  3. இது எனக்கு ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தெரியவந்த செய்தி. ஆதாரம் பெற்று உங்களுக்கு அனுப்ப முற்சிக்கிறேன்.
    இதன் இடையில் நீங்கள் மற்ற பகுதிகுளும் படியுங்கள். அவற்றிற்கான ஆதாரங்கள் வழங்க இயலும்.
    நன்றி தங்கள் வருகைக்கு!

    ReplyDelete

Post a Comment