Skip to main content

த நா வரலாறு : குமரிக்கண்ட மனிதர்களின் முதல் அடி ?

2012 என்று ஒரு ஆங்கில படம். பட்டயை கிளப்பிய படம். இந்த படம் சொல்லும் கதை ஒரு மிகப்பெரிய பேரழிவு. அதில் இருந்து மக்களை காப்பாற்ற நினைக்கும் ஒரு உன்னதமான மனிதன்.

இது போன்ற மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்தித்த வரலாறு தமிழ் மண்ணிற்கு உண்டு. விவிலியம் நோவ என்கிற மனிதரின் கதை சொல்லும் போது - இப்படி பட்ட ஒரு பேரழிவு பற்றி பேசுகிறது. மச்சாவதாரம் பற்றி பேசும் போது வைணவம் கடற் பேரழிவு ஒன்று நடந்தது குறித்து சொல்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு தள வரலாற்றை தன்னிடம் கொண்டு அமைதி சாட்சியாய் நம்மிடம் வாழும் ஊர் சீர்காழி.

உலகம் ஒரு பேரழிவை சந்திக்கப்போவது குறித்த உண்மை ஒரு உன்னதமான மனிதனுக்கு தெரிகிறது. அவன் வெட்டியானை வேலை செய்திருக்கலாம். அவன் இந்த உண்மை அறிந்த மக்களை காப்பாற்ற தோணி செய்கிறான். மக்களிடம் சொல்கிறான். உலகம் அழியப்போகிறது என்று.

ஒரு கடல்கோள் நடக்கபோவதை சொல்கிறான். பலர் உணர்ந்துகொள்ள மறுத்தாலும் கடைசியில் அந்த நிகழ்வு நடக்கிறது. கடல் கொந்தளிக்க
குமரிகண்டம் திணறுகிறது. தோணியில் மக்கள் முண்டியடித்து ஏறுகின்றனர். முடிந்த அளவு எல்லா உயிர்களையும் காக்கிறான் சிவன் என்கிற அந்த வெட்டியான்.

எல்லா உயிர்களில் குறைந்தது ஒரு ஆண் ஒரு பெண் இருக்கிற மாதிரி பார்த்து கொள்கிறான். தோணி கிளம்ப - குமரி கண்டம் நீரில் மூள்கிறது.
நீண்ட பயணத்திற்கு பின் அவன் தொனியுடன் தரை தாட்டிய இடம் சீர்காழி.

சிவன் என்கிற உயிர் காத்த அந்த மனிதனின் பெயர் ஆகுபெயர் ஆகி உயிர் என்று பொருள் கொள்ள ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் அது வடமொழியை அடைந்த போது அது ஜீவன் என்று ஆனது என்று என் தமிழ் ஆசிரியர் சொல்ல கேள்வி. இது மோகன்ஜதரோவுக்கு முந்தய காலமாக இருக்கலாம்.

தொடரும்

Comments

  1. //ஆனால் இப்படிப்பட்ட ஒரு தள வரலாற்றை தன்னிடம் கொண்டு அமைதி சாட்சியாய் நம்மிடம் வாழும் ஊர் சீர்காழி.//

    சீர்காழி மட்டுமல்ல!தோண்டத் தோண்ட புதையலாக நிறைய பின்னோக்கிய செய்திகள் நம்மிடம் தமிழகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.நவீன வாழ்வின் போராட்டத்திலும்,அரசியல் அந்தர்பல்டிகளிலும் நம்மை நாமே அடையாளம் வைக்காமல் செல்கிறோம்.

    ReplyDelete
  2. Go to settings and mark Show word verification for comments? to No.


    வார்த்தை உறுதிப்படுத்துதல் பின்னூட்டத்துக்கு தடங்கல்.நன்றி.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே - வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும். உங்கள் ஆலோசனை நிறைவேற்றப்பட்டது.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி கார்த்திக் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தமிழ் நாட்டின் தல புராணங்களை எடுத்து சொல்லும் முயற்சிக்கு பாராட்டுக்கள்! அருமையாக இருக்குதுங்க.

    ReplyDelete
  6. மிக்க நன்றி @சித்ரா, @ கே ஆர் பி செந்தில்
    தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்