Skip to main content

உலகக் தலைவர்கள் படுகொலைகள் - I

பழுப்பு மார்டின் லூதரும், கருப்பு காந்தியும்:
தன் அறையில் திரு மார்டின் லூதர் கிங்
இன்னொரு தொடர் எழுதும் ஆர்வம் திடீர் என்று வந்தது. வரலாறு என்கிற எனக்கு பிடித்த பாடத்திற்குள்ளேயே என் பயணம் இந்த முறையும்.

உலகத்தின் தலைவர்கள் என்று போற்றப்பட்ட மனிதர்கள் படுகொலை செய்ய பட்டு உள்ளனர். இவர்களின் படுகொலைகளுக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கும். சில காரணங்களா என்றும் தோன்றும் ?

காந்தியின் படுகொலைக்கு பின் சாட்சியம் அளித்த கொலையாளி நாதுராம் விநாயகம் கோட்சே - காந்தி இந்து மத தளங்களில் இஸ்லாமிய வாங்கு ஊத சொன்னத்து கூட தான் அவரை கொள்ள காரணம் என்று சொன்னான்.

மார்டின் லூதர் கிங் அவர்களை கொன்ற பொடித்திருடன் காரணம் எதுவும் பெரிதாக சொல்லவில்லை. கென்னடியின் கொலை அரசியல் கொலை என்றும் அதில் ஹைடி மற்றும் அமெரிக்காவின் தலைமைகள் பங்கு ஆற்றி இருக்கலாம் என்றும் சிலர் சொல்வது உண்டு.

ஹைடியின் அப்போதைய ஆட்சி கென்னடி கொலை தங்களின் வழிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்தாம்.

கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகத்துடன் தொடர்வது லால் பகதுரின் மரணம்.

ராஜிவின் கொலை மர்மங்களின் முடிச்சாகவே இன்றும் உள்ளது. அது மர்மங்களின் அட்சய பாத்திரம்.
அதில் முழு உண்மை வெளிவந்து உள்ளதா என்று நம்மை குழப்பும் செய்திகள் ஏராளம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ரோய் என்ற பெருமைக்கு உரிய லார்ட் லூயி மவுண்ட் பட்டேர்ன் அவர்களின் படுகொலை தொடர்பிலும் கேள்விகள் உண்டு. மவுண்ட் பட்டேர்ன் தன்னுடைய மரணத்தை தானே தேடி கொண்டவர் என்பது இன்றும் ஆங்கில மனிதர்களின் கருத்து.

படுகொலைகளில் பெண்கள் அதிர்டசாலிகள் - அவர்கள் பெரும்பாலும் தப்பித்தே இருக்கிறார்கள். படுகொலையில் இருந்து தப்பிய மார்கெட் தட்சேர், சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் பற்றியும் கேள்விகள் ஆயிரம் இருக்கும்.

படுகொலையில் இறந்த இந்திரா அம்மையாரின் கடைசி நாட்களை பற்றி பதிவு செய்யும் திருமதி சோனியா - "இந்திராவிற்கு தான் படுகொலை செய்யப்படப்போவது தெரியும்" என்றே சொல்கிறார். எல்லோரும் அப்படியே பதிவு செய்கின்றனர்.

அபிரகம் லின்கானின் படுகொலை மக்கள் திரள் மிகுந்த இடத்தில் நடந்தும் கொலையாளி தப்பி ஓடுகிறான் அதுவும் ஒரு கால் உடைந்த நிலையில்.
கால் உடைந்த ஓட்டம் என்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் தங்களை காத்துக்கொள்ளவே விரும்பினாரோ. ஏன் கொலையாளி உடனடியாக அதே இடத்தில பிடிபடவில்லை ? என்று கேள்விகள் எழலாம்.

நான் படித்தவைகள் பற்றி  பகர்கிறேன். தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்.

தொடரும்

Comments

  1. சிறப்பான பகிர்வு தல.. பார்த்து (பதிவ) சுட்டுட போறாங்க :)

    ReplyDelete
  2. நல்ல தொடக்கம், தொடருங்கள்

    ReplyDelete
  3. நல்ல பதிவு. இன்னும் சற்றே விரிவாக சொல்லி இருக்கலாமோ.

    ReplyDelete
  4. புதுவிதமான பதிவு.உண்மையில் நல்லாருக்கு சி.கார்த்திக்.

    ReplyDelete
  5. நன்றி
    @கலாநேசன்
    @பிரசன்னா -- அதுவும் இது சுடும் பதிவுதான் :))))
    @அருண் பிரசாத்
    @தமிழ் உதயம்
    @ஹேமா

    ReplyDelete
  6. முதலில் எனக்கு திரட்டிகளின் பட்டியல் தந்தமைக்கு நன்றி.. தற்போது தான் வரலாற்றின் பக்கம் ஆர்வம் வந்திருக்கிறது. அதே சமயத்தில் உங்கள் வலைதளம் படிக்க கிடைத்திருப்பது ஒரு நல்ல co-incident என்றே நினைக்கிறேன். நல்ல அறிமுகம். தொடருங்கள்.. உங்கள் தளத்தை இப்போதைக்கு favoriteல் இணைத்துவைத்துள்ளேன். அவ்வப்போது படித்து கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் நேரம் கிடைத்தால் வாருங்கள்.. எனது முகவரி..
    http://naadodii.blogspot.com/
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்