Skip to main content

உலகக் தலைவர்கள் படுகொலைகள் - I

பழுப்பு மார்டின் லூதரும், கருப்பு காந்தியும்:
தன் அறையில் திரு மார்டின் லூதர் கிங்
இன்னொரு தொடர் எழுதும் ஆர்வம் திடீர் என்று வந்தது. வரலாறு என்கிற எனக்கு பிடித்த பாடத்திற்குள்ளேயே என் பயணம் இந்த முறையும்.

உலகத்தின் தலைவர்கள் என்று போற்றப்பட்ட மனிதர்கள் படுகொலை செய்ய பட்டு உள்ளனர். இவர்களின் படுகொலைகளுக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கும். சில காரணங்களா என்றும் தோன்றும் ?

காந்தியின் படுகொலைக்கு பின் சாட்சியம் அளித்த கொலையாளி நாதுராம் விநாயகம் கோட்சே - காந்தி இந்து மத தளங்களில் இஸ்லாமிய வாங்கு ஊத சொன்னத்து கூட தான் அவரை கொள்ள காரணம் என்று சொன்னான்.

மார்டின் லூதர் கிங் அவர்களை கொன்ற பொடித்திருடன் காரணம் எதுவும் பெரிதாக சொல்லவில்லை. கென்னடியின் கொலை அரசியல் கொலை என்றும் அதில் ஹைடி மற்றும் அமெரிக்காவின் தலைமைகள் பங்கு ஆற்றி இருக்கலாம் என்றும் சிலர் சொல்வது உண்டு.

ஹைடியின் அப்போதைய ஆட்சி கென்னடி கொலை தங்களின் வழிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்தாம்.

கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகத்துடன் தொடர்வது லால் பகதுரின் மரணம்.

ராஜிவின் கொலை மர்மங்களின் முடிச்சாகவே இன்றும் உள்ளது. அது மர்மங்களின் அட்சய பாத்திரம்.
அதில் முழு உண்மை வெளிவந்து உள்ளதா என்று நம்மை குழப்பும் செய்திகள் ஏராளம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ரோய் என்ற பெருமைக்கு உரிய லார்ட் லூயி மவுண்ட் பட்டேர்ன் அவர்களின் படுகொலை தொடர்பிலும் கேள்விகள் உண்டு. மவுண்ட் பட்டேர்ன் தன்னுடைய மரணத்தை தானே தேடி கொண்டவர் என்பது இன்றும் ஆங்கில மனிதர்களின் கருத்து.

படுகொலைகளில் பெண்கள் அதிர்டசாலிகள் - அவர்கள் பெரும்பாலும் தப்பித்தே இருக்கிறார்கள். படுகொலையில் இருந்து தப்பிய மார்கெட் தட்சேர், சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் பற்றியும் கேள்விகள் ஆயிரம் இருக்கும்.

படுகொலையில் இறந்த இந்திரா அம்மையாரின் கடைசி நாட்களை பற்றி பதிவு செய்யும் திருமதி சோனியா - "இந்திராவிற்கு தான் படுகொலை செய்யப்படப்போவது தெரியும்" என்றே சொல்கிறார். எல்லோரும் அப்படியே பதிவு செய்கின்றனர்.

அபிரகம் லின்கானின் படுகொலை மக்கள் திரள் மிகுந்த இடத்தில் நடந்தும் கொலையாளி தப்பி ஓடுகிறான் அதுவும் ஒரு கால் உடைந்த நிலையில்.
கால் உடைந்த ஓட்டம் என்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் தங்களை காத்துக்கொள்ளவே விரும்பினாரோ. ஏன் கொலையாளி உடனடியாக அதே இடத்தில பிடிபடவில்லை ? என்று கேள்விகள் எழலாம்.

நான் படித்தவைகள் பற்றி  பகர்கிறேன். தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்.

தொடரும்

Comments

  1. சிறப்பான பகிர்வு தல.. பார்த்து (பதிவ) சுட்டுட போறாங்க :)

    ReplyDelete
  2. நல்ல தொடக்கம், தொடருங்கள்

    ReplyDelete
  3. நல்ல பதிவு. இன்னும் சற்றே விரிவாக சொல்லி இருக்கலாமோ.

    ReplyDelete
  4. புதுவிதமான பதிவு.உண்மையில் நல்லாருக்கு சி.கார்த்திக்.

    ReplyDelete
  5. நன்றி
    @கலாநேசன்
    @பிரசன்னா -- அதுவும் இது சுடும் பதிவுதான் :))))
    @அருண் பிரசாத்
    @தமிழ் உதயம்
    @ஹேமா

    ReplyDelete
  6. முதலில் எனக்கு திரட்டிகளின் பட்டியல் தந்தமைக்கு நன்றி.. தற்போது தான் வரலாற்றின் பக்கம் ஆர்வம் வந்திருக்கிறது. அதே சமயத்தில் உங்கள் வலைதளம் படிக்க கிடைத்திருப்பது ஒரு நல்ல co-incident என்றே நினைக்கிறேன். நல்ல அறிமுகம். தொடருங்கள்.. உங்கள் தளத்தை இப்போதைக்கு favoriteல் இணைத்துவைத்துள்ளேன். அவ்வப்போது படித்து கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் நேரம் கிடைத்தால் வாருங்கள்.. எனது முகவரி..
    http://naadodii.blogspot.com/
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாக...