Skip to main content

தமிழ் வளர்ப்போம் வாருங்கள்!

சில சமயங்களில் நான் பெருமையோடு பார்க்கும் விடயம் தமிழில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் தமிழாக்க வார்த்தைகள்.

HOME என்று ஆங்கில இணையதளங்களில் இருந்த வார்த்தை தமிழுக்கு வந்த பொது முகப்பு ஆனது. அருமையான கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் இந்த வார்த்தை ஒரு வகுப்பினரிடம் அன்றாட புழக்கம்.

ஈமெயில் - மின்னஞ்சல் ஆனது.
Chat - என்பது அரட்டை / இனைய அரட்டை.
டவுன்லோட் - தரவிறக்கம் / தகவிறக்கம் ஆனது

இந்த சூழ்நிலையில்தான் கவிஞர் திரு வைரமுத்து அவர்கள் தமிழ் சார்ந்த அரசுத்துறையில் தமிழ் ஆட்சி மொழிக்காக வார்த்தை உருவாக்கும் போது - நிகழ்ந்த ஒன்றை அறிந்தேன். அதில் நீர் வீழ்ச்சி என்று வார்த்தை அவர்கள் குழுவின் காரணமாக உருவாக்கப்பட்டதாகவும் - பின்னர்தான் அவர்கள் அந்த வார்த்தை என்பது ஏற்கனவே தமிழில் அருவி என்று இருப்பது தெரியவந்ததாகவும் பதிகிறார்.

நாம் பல வார்த்தைகளை இலக்கியத்திலும் வரலாற்றிலும் வைத்து விட்டு, புதிதாக சில வார்த்தைகளை கண்டு வருகிறோமோ ?

திரு பழமைபேசி அவர்களின் தளத்தில் சில வார்த்தைகளை அறிந்து வருவது உண்டு.
MUTE - மௌனப்படுத்தல் , அமைத்திபடுத்தல் என்கிற வார்த்தைக்கு மூகாத்தல் சரியாக இருக்கலாம்
பிளாஸ்மா panel , LCD டிவி - இதற்கு எல்லாம் ஏதாவது வார்த்தை இருக்கா ? .... இல்லை நீங்கள் கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் ?
GADGET, WIDGET ( சிறுவி என்று நான் பதிவில் விழித்திருந்தேன் ), ரிங்க்டோன் ( மணி ஓசையா ? ), GPS ( இது அமெரிக்க வாழ் தமிழர்களின் தேவை ) - இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம் ?

உங்களால் முடிந்த வார்த்தைகளை ஆராய்ந்து இங்கே பின்னூட்டமாய் கொட்டுங்கள். பார்ப்போம். நான் கொடுத்த வார்த்தைகள் மட்டும் அல்ல புதிய வார்த்தைகளும் வரவேற்க்கபடுகின்றன.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
தமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.

நன்றிகளுடன்,
கார்த்திக் சிதம்பரம்

Comments

  1. உங்கள் பின்னால் இருந்த பேரை வைத்தே யூகித்தேன். நீங்களும் காரைக்குடியாய்த் தான் இருக்க வேண்டும் என்று.

    சரிதானே?

    நானும் பழமைபேசி மூலமாகத்தான் சில விடங்களை கற்றுவருகின்றேன் கார்த்திக்.

    ReplyDelete
  2. //ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
    தமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
    //

    உண்மை உண்மை..

    இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம்னு யோசிச்சிட்டு வரேன் :)

    ReplyDelete
  3. தேடல் தேடல் தேடல்.ஆனால் ஒன்று... பேசும்போதும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தணும்.உதாரணத்திற்க்கு உணவகம்,
    மகிழூந்தி என்கிறோம்.பேசும்போது பயன்படுத்த வரமாட்டேன் என்கிறதே !

    ReplyDelete
  4. @ஹேமா -
    நீங்க சொல்றது எல்லாம் நகரத்திலும் அயல்நாட்டிளும்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
    மதுரைக்கு நான் புதிது அந்த சமயத்தில். மிதிவண்டி puncher ( பாருங்க இது கூட தமிழில் வரமாட்டேங்குது) ஆகிடுச்சு.
    நேரா போய் ஒரு கடையில் விட்டேன். அங்கே ஒரு நபர்தான் இருந்தார். அவருடைய உதவியாளர் இல்லை.

    அவர் வண்டியை சரி செய்ய ஆரம்பித்தார். ஒரு இடத்தில் என்னை திரும்பி பார்த்து.
    "தம்பி அந்த திருப்புலிய எடுங்க" என்றார்.

    எனக்கு புரியவில்லை. பின்னர்தான் தெரியும் அது - Screw டிரைவர் என்று.
    சிலி என்கிற நாட்டில் இருந்து மிளகாய் வந்த போது - அதை சில்லி என்றே படித்தவன் அழைக்க தொழில் செய்யும் மனிதர்கள் "மிளகாய்" என்றனர். நாம் இந்த உழைக்கும் மக்களின் தமிழ் உணர்வை பெறவேண்டும். அதைவிடுத்து அவர்களின் தமிழ் உணர்வும் நிறையவே கெடுகிறது நம்மால்.

    ReplyDelete
  5. நீங்கள் ஊகித்தது ஓரளவுக்கு சரிதான் ஜோதிஜி.

    ReplyDelete
  6. seekkiram vaarththaigalodu vaanga Prassanna

    ReplyDelete
  7. //GPS //

    http://maniyinpakkam.blogspot.com/2009/10/blog-post_22.html

    ReplyDelete
  8. இடநியசு - GPS

    மிக்க நன்றி பழமைபேசி. இந்த பதிவை நான் படிக்க விட்டு இருந்தேன். சுட்டி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. //Chat //

    http://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_07.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்