Skip to main content

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன்.

இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது.

அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன.

வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது.

ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம்.

தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது.

பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்றி நகல் எடுக்கும் வேலையை இந்திய பொருளாதார ஆற்றல் மற்றும் அதிகார மையங்கள் எடுக்கின்றன. இந்திய மண்ணின் பல வேளான் நிலகங்கள் சிறப்பு பொருளாதார பகுதிகள் ஆகி வருகின்றன.

வேளாண்மை வறட்சி மற்றும் உணவு தட்டுபாட்டை நோக்கி இந்திய நிலம் பயணிப்பதை BBC தன் ஆய்வு ஆவன படம் ஒன்றில் வெளி கொண்டு வந்து இருந்தது.

இந்த பொருளாதார நகல் எடுக்கும் பங்கில் தற்போது முன்னிலை பெற்று உள்ளது ஒரு புதிய நாணய அல்லது பணக்குறியீடு.

நான் நினைத்து போலவே இந்தி மொழியின் ரூ மற்றும் ஆங்கில R கூட்டணி அமைத்து தங்களை இழந்து ஒரு குறியீடு உருவாகி உள்ளது.

இந்த குறியீடு பொது-உடமை சின்னம் போல் இருப்பதாக கோவி அண்ணன் தன் பதிவில் எழுதி இருந்தார்.

நம்ம நாட்டின் முதலாளி விரும்பும் குறியீடு அப்படி இருப்பது  நகைச்சுவையான ஒன்றுதான். அனால் அவர் சொல்வது போலதான் உள்ளது. நல்ல கண்டுபிடிப்பு.

வல்லரசு திட்டம் எல்லாம் சரிதான். நல்லரசாகும் திட்டம் நம்மிடம் உள்ளதா ?

Comments

  1. //வல்லரசு திட்டம் எல்லாம் சரிதான். நல்லரசாகும் திட்டம் நம்மிடம் உள்ளதா ?//

    ஹ்ம்ம்.. நல்ல கேள்வி. பகிர்வுக்கு நன்றி :-)

    ReplyDelete
  2. //நம்ம நாட்டின் முதலாளி விரும்பும் குறியீடு அப்படி இருப்பது நகைச்சுவையான ஒன்றுதான். அனால் அவர் சொல்வது போலதான் உள்ளது. நல்ல கண்டுபிடிப்பு.//

    பண அறுவடைக்கு அந்த குறி சரிதான். :)

    ReplyDelete
  3. கடைசி கேள்வி சூப்பர். பதில் சான்ஸே இல்லை. வல்லரசாகும்போதே மத்த நல்ல விஷயத்தை தூக்கி கடாசனுமே. முக்கியமா மனிதாபிமானத்தை:(

    ReplyDelete
  4. மீனவனை காக்க திராணி இல்லாத நாம் வல்லரசானாலும் என்ன புரியோஜனம்.

    ReplyDelete
  5. உண்மைதான் நம்ம மீனவர்கள் படும் பாடு வேதனை தருவது. இதை நிறுத்தி ஆகணும்.

    ReplyDelete
  6. நல்ல கேள்விகள் :)

    நாம் வளர்கிறோம்.. வளமாக இருக்கிறோம் என்று ஏமாற்றும் வேலை காலங்காலமாக தொடர்ந்து நடந்துதான் வருகிறது..

    ReplyDelete
  7. //வேளாண்மை வறட்சி மற்றும் உணவு தட்டுபாட்டை நோக்கி இந்திய நிலம் பயணிப்பதை BBC தன் ஆய்வு ஆவன படம் ஒன்றில் வெளி கொண்டு வந்து இருந்தது.//

    இது மிக பெரிய பாதிப்பை எதிர் காலத்தில் ஏற்படுத்தும் ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.