Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 9

மீண்டும் நான் பைரவி. அந்த சத்தம் கேட்ட பிறகு நான் தரதரவென பாறைக்கு அந்த பக்கம் இருந்த ஒரு பெண்ணால் இழுத்து செல்லப்பட்டேன்.
எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் மாடசாமியின்  ஆட்கள். ஒரு நிலையில் என்னை இழுத்து சென்ற பெண் அடிவாயிற்றை பிடித்திக்கொள்ள. பாம்பட பாட்டி எங்கள் எல்லோரையும் பக்கத்தில் இருந்த குகைக்கு.

என் காலில் ரத்தம் சொட்டியது. அந்த இளம் பெண் இழுத்ததில் என் கால் அருகில் இருந்த மரக்கிளையில் குத்தி ரத்தம் பட. என் சேலைத்தலைப்பை கிழித்து காலில் கட்டிவிட்டால் அவள் அப்போது. பத்தி சேலை தலைப்பு இன்னும் பாறையில் கிடக்கும்.

குகை இருளாக இருந்தது. இப்போது சத்தம் எதுவும் இல்லை.

அந்த  இளம் பெண் சுருண்டு படுத்துக்கொண்டாள். மாடசாமியின் ஆட்களில் ஒருவன் வெளியில் போய் சில கிளங்குகளுடன் வந்தான்.

பாட்டி சமைத்தாள். சாப்பிட என்னிடம் நீட்டினால் பாட்டி.
நான் மறுத்தேன்.

"சரி! அந்த புள்ளைக்காவது கொடு"
நான் வாங்கிக்கொண்டேன். அவளிடம் நீட்டினேன்.

அவள் கண் விழித்தாள். சிநேகமாய் புன்னகைத்தாள்.
"தாங்க ராக்காயியக்கா" - வாங்கிக்கொண்டாள்.

வெளியில் மழை ஆரம்பம் ஆகி இருந்தது. ஓவென்று பேய்ந்து கொண்டு இருந்தது, மாடசாமி குகை வழியில் நின்று மழையை பார்த்துகொண்டிருந்தான்.

அந்த இளம் பெண்  சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
"ராக்காயியக்கா  ... "
மீண்டும் அழைத்தாள் அந்த பெண்.

பாட்டிக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது.
"இவளாடி ராக்காயி ?"

நான் புரியாமல் நின்றேன்.மாடசாமி திரும்பி பார்த்தான். மிரட்டும் பார்வை.
பாட்டி மௌனம் ஆனாள்.

யார் அந்த ராக்காயி ? எனக்கும் அவளுக்கும் என்ன தொடர்ப்பு.
மாடசாமி தன் கையில் இருந்த  துப்பாக்கியை என் நெற்றியில் வைத்தான்.

பாட்டியும் அந்த இளம்பெண்ணும் என்னையே பார்த்தனர்.
டிரிக்கரை அழுத்தினான். அதிர சிரித்தான்.

"ரா...க்...கா...யீ .... "
உரக்க கத்தினான். டிரிக்கரை அழுத்தினான்.

"சத்யா ...."
நான் கத்தினேன் என் நெஞ்சுக்குள். பயம் முகத்தில்... வியர்வை அதன் மீது.

தொடரும்

Comments

  1. ////வெளியில் மலை ஆரம்பம் ஆகி இருந்தது... ///

    .....மழை

    ......நல்ல கதையில், எழுத்து பிழை இருக்கும் போது, கொஞ்சம் நடையின் வேகத்தை குறைக்கிறது. இது எனது தாழ்மையான கருத்து. :-)

    ReplyDelete
  2. தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி சித்ரா. திருத்திவிட்டேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்