Skip to main content

உ த ப : லியோன் டிராட்ஸ்கி

மெக்ஸிகோ மண்ணில் அது சிவப்பு சூரியனின் அன்றய நாளின் கடைசி தருணங்கள்.

அந்த இளம் மாலை பொழுதில் தன குறுந்தாடியை தடவியபடி அமர்ந்து இருந்தார் அந்த நான்காம் தலைமுறையாளர்.
தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த மேசையில் அவர் புத்தகங்களோடு ஒருங்கிணைந்து இருந்தார்.

சிந்தனை குதிரை முலைக்குள் இருந்து சிங்கத்தை போல உறுமியது.
அந்த நேரத்தில் வீட்டுக்கு முன்னாள் அந்த மகிழுந்து வந்து நின்றது. அந்த மகிழுந்தின் உறுமல் நிற்க. சிந்தனை சிங்கத்தின் கற்பனை வகுப்பறையிலும் மணி அடித்தது.

அந்த மகிழுந்தில் வந்தது அவர் மனம் கவர்ந்த நண்பன் பிரான்க் ஜாக்சன்.
மகிழ்ச்சியில் மனம் துள்ளியது சிந்தனையாளருக்கு .

வழக்கம் போல சிந்தனை அரட்டை சம்மனமிட்டது. அவன் அந்த காகிதங்களை தந்தான் அவரிடம்.
வழக்கமாகவே அவன் காகிதங்களில் கருத்து கட்டுரைகள் எழுதி வர - அதன் தொடர்பான கருத்து விவாதம் நடப்பது இயல்பான ஒன்று.

சிந்தனையாளரின் பாதுகாவலரும், மனையாளும் இந்த இயல்பான கலந்து உரையாடலில் கலந்து கொள்ளவில்லை.
அவர்களை பொறுத்த வரை இது நாள் தோறும் நடக்கும் கருத்து விவாதம். கற்றாரை கற்றார் காமுறுவர். பிரான்க் சின்ன பையன் அவனிடம் தனி அக்கறை கொண்டு அவர் விவாதிப்பார்.

நிமடங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. மகிழுந்தில் அந்த பெண்மணி தன் கடிகாரத்தை பார்த்துகொண்டு இருந்தாள்.
நிமிடங்கள் மெதுவாக நகர்ந்தன. படபடப்பு கண்ணிலும் நெஞ்சிலும் குடிகொண்டது.

சிவப்பு சூரியன் கண்ணடித்து விட்டு கரைக்குள் தன்னை மூல்கடித்துகொண்டு இருந்தான். மெக்ஸிகோவின் சமரச கொடி பறந்து கொண்டு இருந்தது.
அந்த பெண் நகத்தை கடித்துக்கொண்டு இருந்தாள்.

அந்த சப்தம் கேட்டது.
"வெற்றி" நெஞ்சம் கத்தியது.

சிந்தனையாளரின் அறையில் ....

நேற்று வரை பற்றுகொண்டு யாருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பிரான்ச ஜாக்சன் கொடுத்த கட்டுரையை படிக்க ஆரம்பித்தார். பிரான்க் எழுந்து கொண்டான் - மரியாதை.

அவர் காகிதங்களை போராட்ட. அவனது கைக்குள் அந்த ஆயுதம் இறுக்கமானது.
பிரான்க் அந்த ஐஸ் மழை ஏறும்பொது ஐஸ் குத்தும் பண்ணிக்குத்தியை ஓங்கினான்.

பின்மண்டையில் போட்டு தாக்கினான்.

பாதுகாவலர்கள் ஓடி வந்தனர் பிடித்தனர். பிராங்கை அடித்தனர்.
டிரோட்ச்கி என்கிற அந்த சிந்தனையாளர் பின் மண்டையை பிடித்த படி சொன்னார்.
"அவனை அடிக்காதீர்கள். அவன் பேசட்டும்" - என்றார். கோபம் அவர் கண்ணை மறைக்கவில்லை.

அடுத்த நாள் அவர் இறந்து போனார். பிராங்கின் கதை பேசப்பட்டது. ரஷ்ய புரட்சி டிரோட்ச்கி கொல்லப்பட்டார். காலமாற்றத்தில் நிறையவே மாறிப்போய் இருந்தன. சமத்துவ மெக்ஸிகோ கை பிசைந்தது.

கொலையாளியின் உண்மை பெயர் ரமோன் மேற்கடர் என்று தெரியவந்தது. கொலை புரிந்தவர் ரஷ்ய புலனாய்வு பிரிவின் மனிதர்.
மகிழுந்தில் காத்து இருந்த பெண் ரமோனின் தாய்.


இந்த கொலையின் காரணங்கள்  பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.

தொடரும்

Comments

  1. விறுவிறுப்பாக செல்கிறது. தொடருங்கள்

    ReplyDelete
  2. இங்கும் பதிவு அழகு தமிழோடு தேடல்.

    ReplyDelete
  3. தகவல் பகிவிர்க்கு நன்றி Karthick

    ReplyDelete
  4. அடுத்து என்ன விரைவில் பதிவு போடுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.