Skip to main content

உ த ப: அணிவகுப்பில் .....

அந்த வீரன் அந்த செய்தியோடு வந்து நின்றான்.
"என்னோடு அணிவகுப்பில் வர இருந்த  மூணு பேருக்கும்  உடல் நலமில்லை"
 "என்ன சொல்கிறாய் ?" - தளபதி கேள்வி கேட்டார்
"திடீர் என்று உடல் நலமின்மை"
"மூவருக்குமா ?"

வீரன் தலையை இடமும் புறமும் ஆட்டினான்.
நெற்றியில் கை வைத்து அமர்ந்தார் தளபதி.

"கவலை வேண்டாம்" - வீரன் மீண்டும் பேசினான்
"அவர்களுக்கு பதிலாக மூணு பேரு உள்ளனர்" - மீண்டும் வீரன்

"நல்லது அவர்களை பயன்படுத்திகொள்"
தளபதி சொல்லி விட்டு நகர்ந்தார்.

வீரனும் ஒரு தளபதிதான்.

அந்த நாள் வந்தது. படை அணிவகுப்பு திருநாள். அதிபருக்கு முன்னால்.

அதிபர் வந்தார் தன்னோடு இருந்த படை தலைவர்களுடன் பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தார். அணி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது.
விமானங்கள் வானத்தில் வேடிக்கை காட்டின. வான மேகங்கள் வண்ணக்கோலம் பூண்டன.

அதிபரின் முகத்தில் புன்னகை. அவர் நாட்டின் படை திறமை அவருக்கு முன்னால் தன்னை வெளிக்காடிகொண்டு இருந்தது.

அந்த பிரங்கி வண்டி பயணித்துக்கொண்டு வந்தது. அந்த வீரன் வணக்கம் வைத்தான். அதிபரை நோக்கி நடந்தான்.
அவர் முதலில் புன்னகைத்தார். வீரனும்.

பின்னர் வீரன் அதிபரை நெருங்கினான்.

வீரன் குண்டுவீசும் கருவி மூலம் குண்டு வீசினான். இரண்டு க்ராநிடே குண்டுகள். மீண்டும் தாக்குதல்.
பதிந்து கொண்டிருந்த ஊடகங்கள் உள்ளே இது பதிவாகி கொண்டு இருந்தது,.

எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அரச படை அணிவகுப்பில் சுட்டு கொல்லப்பட்டார். சுட்ட வீரனின்  தளபதியின் பெயர்   காலித்  இஸ்லம்புஇல்.


தொடரும்

Comments

  1. ஏன் கொன்றான்..... இது எப்போ நடந்தது....
    படிக்கவே வியப்பா இருக்கு தொடருங்க.

    ReplyDelete
  2. தலைவரே இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ..

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ..

    ReplyDelete
  4. கார்திக் கொஞ்சம் விரிவாக எழுதவும். விறுவிறுப்பாக உள்ளது

    ReplyDelete
  5. அரசியல்,ராஜ்ஜியம் என்றிருந்தால்
    அங்கு வஞ்சகரும் இருப்பார்கள் போல !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...