Skip to main content

சாதியும் அதன் தேவையும்

இன்று படித்த இரண்டு பதிவுகளில் சாதி பற்றி இருந்தது. சாதி ஏன் இன்னும் மண்ணில் இருக்கு.

சில கரணங்கள் கீழே:
இவை சிலதான் இன்னும் நிறைய இருக்கலாம் நீங்கள் அதை சொல்லலாம்.

1 . தேர்தலில் சீட்டு வாங்க சாதி வேணும். சீட்டு வாங்க மட்டுமில்ல ஓட்டு போடவும் சாதி வேணும். வேற சாதிக்கு ஒட்டு போட்டா அது சாதி குத்தம்.
2 . கலவரமே இல்லாம நாடு இருந்தா நல்லதுக்கு இல்லை ( நெசமா ?) - அதுனால சாதி மதம் வேண்டும்
3 . நம்ம ஊரு கொஞ்சம் பரவா இல்லை. மத்த ஊரில் எல்லாம் பேருக்கு பின்னாடி போட சாதி வேண்டும்.
4 . கல்யாணம் பண்ணிக்க சாதி வேண்டும்.
5 . அடுத்தவன திட்ட சாதி வேணும். ( இன்னும் இது இருக்கு .... )
6 . கட்சி நடத்த  சாதி வேணும்.
7 . விண்ணப்பங்கள் நிரப்ப நிறைய சாதி வேண்டும்.
8 . தலைவனாக சாதி வேண்டும்
9 . அரசாங்கத்துக்கிட்ட ஏதாவது சாதிக்க சாதி வேணும்.
10 . ரெட்டை குவளை முறைக்கு சாதி வேண்டும்

சாதியால் ஒரு மனிதன் தாழ்வாக அல்லது உயர்வாக கருதப்படுவது தவறு. நானெல்லாம் ஏழை சாதி அப்படின்னு சொல்லறாங்களே ... அந்த சாதியாவது ஒழியுமாங்க ?

Comments

  1. "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று சொல்லி கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் கூட, "சாதி வித்து" இடப்படுவது வேதனையான விஷயம்.

    ReplyDelete
  2. அது.. நல்லா சொல்லுங்க.. இன்னும் நிறைய பாயிண்ட் இருக்கும்... உக்காந்து ரோசன பண்ணனும்.. :o)

    ReplyDelete
  3. சாதிலேயே பிரச்சினை இல்லாத சாதி ஏழை சாதிதான் :)

    ReplyDelete
  4. gud. சும்மா இல்ல, நல்லாவே கிறுக்கிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க, சே, உங்க பாஷையில கிறுக்குங்க.

    anbudan
    ram.

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  5. சிலரின் பெயரை வச்சே அவங்க சாதி சொல்றாங்க !

    ReplyDelete
  6. நன்றி
    @Chitra
    @கலகலப்ரியா
    @பிரசன்னா
    @hayyram
    @ஹேமா

    சாதி ஒழியட்டும்.

    ReplyDelete
  7. பதிவுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சாதி பற்றி சரியான பதிவு! சாதி இன்னும் போகலை கார்த்திக்!
    - அன்புடன் ராஜா (சாப்ட்வேர் எஞ்சினியர்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்