Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 10


நான் சத்யா. அந்த கருப்பு ஆட்டை எங்கள் வழி காட்டியாக வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழியில் பயணித்தோம்.
எங்கள் ஜீப் அந்த காட்டு மலை பகுதிக்குள் சீறி பாய்ந்தது. பின்னல் எங்கள் படை.

நாங்கள் அவன் சொன்ன இடத்தில் நிறுத்தினால் - அங்கே யாரும் இல்லை.
"எனக்கு தெரியாதுங்க" - அவன் அலறினான்.

என் கை துப்பாக்கி அவனை பதம் பார்க்க நினைத்தது. அந்த நேரம் பார்த்து அந்த பழங்குடியின
ர் அந்த பக்கம் வந்தனர்.

நாங்கள் அவர்களை வழி மறித்தோம். அவர்கள் கையில் குருவி சுடும் துப்பாகிகள் இருந்தன.
"எங்கே மாடசாமி ?" - கேட்டேன்
"தெரியாது சாமி" - அவர்கள் சொன்னார்கள்.

நான் இளைய பெருமாளை அழைத்தேன்.
இந்த கருப்பு ஆட்டை தீர்த்து கட்டிவிட திட்டமிட்டோம்.

நாங்கள் எங்கள் துப்பாகிகளை பயன்படுத்தினோம்.
அந்த கருப்பு ஆடும் மற்றும் சிலரும் எங்கள் தரப்பில் இறந்தனர். அந்த பழங்குடி கூட்டத்தில் எல்லோரும்.

யுத்தம் முடிந்த மாதிரி இருந்தது. மாடசாமிக்கு யார் அதரவு அளித்தாலும் தீர்த்துக்கட்டவேண்டியததுதான். இந்த பழங்குடி கூட்டமும் அவனின் ஆதரவு கூட்டாம் தான்.

நான் எங்கள் குழுவை பார்த்தேன்.
அவர்கள் பிணங்களை அள்ளி கொண்டிருந்தனர்.

நான் தண்ணீர் குடித்தேன். என்
துப்பாக்கி குழலை ஊதி விட்டேன். அது துயில் கொள்ள தயார் ஆனது.

அப்போதுதான் அந்த குரல் கேட்டது.

அதிர்ந்தோம். நான் திரும்பிபார்த்தேன்.
நான் மட்டும் அல்ல எல்லோரும்.

"நாந்தேன் மாடசாமி"

என் துப்பாக்கியை தயார் செய்தேன். அது உயிர் குடிக்க தயாரானது.
ஆனால் ....

தொடரும்

Comments

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்