Skip to main content

உ த ப : மூன்று தலைவர்கள்

அவருடைய வேலை பளுவுக்கு இடையில் அந்த நாடகம் பார்ப்பது அவருக்கு சற்று இளைப்பாற செய்யும்.
அதுவும் அந்த நாடகத்தின் ஒரு சிரிப்பு நிகழ்வு அவர் மனதை இலகுவாக்கும்.

தன குடும்பத்துடன் அந்த நாடக ஆரங்கத்திற்கு வந்தார். மௌனமா அவர் அந்த நாடகம் பார்க்கும் மாடத்தில் அமர்ந்தார்.
அந்த மாடத்திற்கு பாக்ஸ் 13  என்று பெயர்.

மாடத்திற்கு கீழே மக்கள் திரள். ஆர்வமாய் அந்த கூட்டம் நாடகம் பார்க்க திரண்டு இருந்தது.

நாடகம் ஆரம்பித்தது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர் - அவனைத்தவிர. மாடத்திற்க்கான கதவு அருகில் வந்து நிட்று கொண்டான்.
தன் கைத்துப்பாக்கியை சரி பார்த்துக்கொண்டான்.

மெல்லமாய் கதவை திறந்தான். தலைவரின் மெய்க்காவலன் அங்கே இருந்தான்.
மெய்க்காவலன் இவனை இன்னும் பார்க்கவில்லை.

துப்பாக்கியில் குறிபார்த்தான். விசையை அழுத்தினான். குண்டு பறந்தது. பட் என்று தலைவரின் கபாலத்தில் பட்டு தலைவர் துடிதுடித்தார்.
கூட்டம் கூச்சலும் குழப்பமுமாய் மாறியது.

உடனடியாக அந்த மாடத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நாடக மேடையில் குதித்தான். வெற்றி முழக்கம் இட்டுவிட்டு ஓடினான். கிட்டத்தட்ட ஒழிந்தான் கொடுங்கோலன் என்கிற மாதிரியான ஒரு முழக்கம் அது.அவனால் வெளியில் ஓடி நதியில் ஒரு படகில் பயணிக்க முடிந்தது.

இதே நேரத்தில் அவனுடய நண்பர்கள் துணை குடியரசு தலைவரையும் வெளியுறவு செயலரையும் கொன்றனர்.
சுடப்பட்ட குடியரசு தலைவர் ஆபிரகாம் லின்கன். கொலையாளியின் பெயர் பூத்.

உள்நாட்டு நெருக்கடியில் அன்று அமெரிக்க பிரிந்து நின்றது.

தொடரும்

Comments

  1. நல்ல தொகுப்பு. இன்னும் தொடரவும்....

    ReplyDelete
  2. பெரும் தலைவர்கள் எல்லோரது நிலைமையும் இப்படித்தானா !

    ReplyDelete
  3. ஏன் கொன்றான் என விலக்கவும் கார்திக் பிளிஸ்.

    நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்